பொய்ச் செய்திகளைப் பரப்புவதிலும், பொய்த்தகவல்கள் மட்டுமே நிரம்பிய புளுகு மூட்டைக்கட்டுரைகளைப் பிரசுரிப்பதிலும் தினமணி ஆசிரியருக்கு நிகராக வேறு யாரும் இருக்க முடியாது. அதுவும் தி.மு.க.வுக்கு எதிராக, முதல்வர் கலைஞருக்கு எதிராக - கலைஞர் குடும்பத்தினருக்கு எதிராக யாராவது கட்டுரை எழுதிக் கொடுத்தால் போதும். அந்தக் கட்டுரையிலுள்ள தகவல்கள் சரியா, தவறா என்று படித்துப் பார்க்காமலே பிரசுரித்து விடுவார் தினமணி ஆசிரியர்.
30.11.2010 செவ்வாயன்று - தலையங்கத்துக்குப்பக்கத்தில் ஒரு கட்டுரையை பிரசுரித் திருக்கிறார் அவர். அதிலே முந்த்ரா ஊழல் பற்றிய குற்றச்சாட்டு எழுப்பப்பட்டவுடனேயே அன்றைய மத்திய நிதிய மைச்சர் டி.டி.கிருஷ்ணமாச்சாரியார் தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டு - அடுத்த விமானத்திலேயே சென்னை திரும்பிவிட்டார் - என்று ஒரு புளுகை கட்டுரையாளர் அவிழ்த்துவிட்டிருந்தார். அது அப்பட்டமான பொய்த்தகவல் என்பதை மறுநாள் வந்த முரசொலி, நீதிபதி சாக்ளா கமிஷன் தீர்ப்பின் ஆதாரம் காட்டி மறுத்திருந்தது.
அதே கட்டுரையில் இன்னொரு புளுகு வருமாறு :- ""கருணாநிதிக்கு நினைவிருக்கும் அரியலூரில் கடும் மழையால் ஒரு ரயில் விபத்து. அன்றைக்குத் தமிழர் ஓ.வி.அளகேசன் ரயில்வே துணை அமைச்சர். அரியலூர் அளகேசா நீ ஆண்டது போதாதா என்று இதே கருணாநிதி கூக்குரல் எழுப்பினாரே, விபத்து நடந்த சிலமணி நேரங்களில் ரயில்வே அமைச்சர் பொறுப்பிலிருந்து பெரியவர் லால்பகதூர் சாஸ்திரியும், நம்மவர் ஓ.வி. அளகேசனும் பதவி விலகினார்களே; அவர்கள் தலித்துகளா?"" - என்று கேட்டிருக்கிறார் கட்டுரையாளர்.
ஓ.வி.அளகேசன் எப்போது ராஜினாமா செய்தார் என்பது பற்றி கட்டுரையாளருக்கும் தெரியவில்லை; தினமணி ஆசிரியருக்கும் தெரியவில்லை. அதனால்தான் வரலாற்றையே திரிக்கும் இத்தகைய இமாலய புளுகுகள் தினமணியில் சிறப்பு கட்டுரைகள் என்ற பெயரால் வெளி யிடப்பட்டு வருகின்றன. ஓ.வி.அளகேசன் அரியலூர் ரயில் விபத்தின்போது தமது பதவியை ராஜினாமா செய்ய வில்லை. செய்யவே இல்லை.
அரியலூரில் மழை வெள்ளத்தில் சிக்கி இதற்கு முன்பு எப்போதும் இல்லாத அளவிற்கு ஒரு பெரிய ரயில் விபத்து ஏற் பட்டது. அதிலே பல நூற்றுக்கணக்கானவர்கள் ஆற்றில் மூழ்கி மாண்டு போனார்கள். அப்போது, மத்திய ரயில்வே துறை அமைச்சராக இருந்த (பின்னாளில் நேருவுக்கு பிறகு சுதந்திர இந்தியாவின் 2வது பிரதமராக பொறுப்பேற்ற) லால்பகதூர் சாஸ்திரி தமது பதவியை உடனடியாக ராஜினாமா செய்தார். ஆனால், நம்மவர் என்று தினமணி கட்டுரையாளரால் போற்றபட்டிருப்பவரும் தமிழகத்தைச் சேர்ந்தவருமான ஓ.வி.அளகேசன் தமது பதவியை ராஜினாமா செய்ய வில்லை. அவர் பதவியில் நீடிக்கவே செய்தார். அதனால்தான் அடுத்து வந்த தேர்தலில் தி.மு.க.வினர் ""அரியலூர் அளகேசா நீங்கள் ஆண்டது போதாதா, மக்கள் மாண்டது போதாதா"" என்று சுவரொட்டிகள் அச்சடித்து தமிழகம் எங்கும் ஒட்டினார்கள்.
அதன் பிறகு சில காலம் கழித்து, தமிழகத்தில் ‘மத்தியில் இந்தி மட்டும்தான் ஒரே ஆட்சி மொழி. ஆங்கிலம் துணை மொழியாக நீடிக்காது’ என்ற நடவடிக்கையை எதிர்த்து தமிழக முழுவதிலும் மாணவர்கள் ஏறத்தாழ 18 நாட்கள் போராட்டம் நடத்தினார்கள். அப்போது முதல்வராக இருந்த பெரியவர் பக்தவச்சலத்தின் அரசு போராட்டம் நடத்திய மாணவர்மீது அடக்குமுறைகளை அவிழ்த்து விட்டது. தடியடிகள் நடத்தப்பட்டன. துப்பாக்கிச் சூடுகளும் சர்வ சாதாரணமாக நடத்தப்பட்டன. போலீசாரின் துப்பாக்கிச் சூட்டிற்கு பல மாணவர்கள் பலி ஆகினர். தடிஅடிக்கு ஆட்பட்டு பல நூறு பேர்கள் படுகாயமடைந்தார்கள். இத்தகைய சூழலில்தான், ""நாங்களும் தமிழ் ஆதரவாளர்களே; இந்திக்கு எதிர்ப்பு தெரிவிப்பவர்களே"" என்று கொதிப்புற்று கிடந்த தமிழர்களை எப்படியா வது சமாதானம் செய்யவேண்டும் என்கிற நிர்ப்பந்தத்தின் காரணமாக மத்திய அமைச் சரவையிலிருந்து சி.சுப்பிரமணியமும் ஓ.வி.அளகேசனும் ராஜினாமா செய்தார்கள்.
கட்டுரையாளர் தினமணியில் குறிப்பிடு வது போல அரியலூர் ரயில் விபத்து காரண மாக ஓ.வி.அளகேசன் தமது பதவியை ராஜினாமா செய்யவில்லை என்பதுதான் கல்மேல் எழுத்து போன்ற மறுக்க முடியாத உண்மையாகும். இப்படி அவர்கள் இருவரும் ராஜினாமா செய்ததை பெருந்தலைவர் காமராஜரோ, காங்கிரஸ் மேலிடமோ ஆதரிக்கவில்லை. அதன் காரணமாக அவர்கள் அடுத்த சில வாரங்களுக்கு உள்ளாகவே மீண்டும் மத்திய அமைச்சர்களாக பதவி ஏற்று கொண்டு விட்டார்கள் என்பதும் இங்கே குறிப்பிடத் தக்க விஷயமாகும். ம்ம்ம் இதன்மூலம் தெளிவாகும் உண்மை என்ன? தி.மு.க.வையும், கலைஞரையும் தாக்கி யார் எதை எழுதி கொடுத்தாலும் தினமணி ஆசிரியர் தனக்கே உரிய தி.மு.க. துவேசம் கலைஞர் எதிர்ப்பு ஜெயலலிதா ஆதரவு என்ற கண்ணோட்டத்தின் அடிப்படையில் யார் எதை எழுதி கொடுத்தாலும் அதை படித்துகூட பார்க்காமல் அதிலே உள்ள தகவல்கள் சரியா, தவறா என்று பரிசீலித்துக்கூட பார்க்காமல் அப்படியே அச்சிக்கு கொடுத்துவிடுவார். அந்த பேத்து மாத்துகள், புரளிகள், விஷம பிரச்சாரம் ஆகியவைகள் எல்லாம் அப்படியே தினமணியில் பிரசுரமாகிவிடும். இதுதான் தினமணியின் ""நடுநிலை"" பத்திரிகா தர்மம்!
- சின்னகுத்தூசி
முரசொலி:02-12-2010
Search This Blog
Showing posts with label பத்திரிகைகள். Show all posts
Showing posts with label பத்திரிகைகள். Show all posts
Monday, 6 December 2010
Wednesday, 1 December 2010
தி.மு.க. செல்வாக்கு சரிந்துவிட்டது என்று சாதிக்க முனையும் அ.தி.மு.க. ஆதரவு ஏட்டின் தந்திர விமர்சனம்!
ஆ.ராசா பதவி விலகல் மூலம் தி.மு.க.வின் செல்வாக்கு டெல்லியில் சரிந்துவிட்டதாம். அதை மீண்டும் மீட்டெடுக்க அது என்ன செய்யப் போகிறது என்பதும் இப்போது பரவலாக எழுந்துள்ள கேள்வியாம்! - தினமணி நாளேடு 20.11.2010 சனிக்கிழமை யன்று ஒரு முழு நீள செய்தி விமர்சனத்தை வெளியிட்டுள்ளது.
தி.மு.க. செல்வாக்கு சரிகிறது என்று சாதிப்பதற்காகவே - வி.பி.சிங் காலத்தில் தி.மு.க. செல்வாக்கு எவ்வளவு தெரியுமா? - ஐ.கே.குஜ்ரால் காலத்தில் அதன் செல்வாக்கு இமயத்தையே தொட்டுவிட்டது தெரியுமா? - வாஜ்பாய் காலத்து தி.மு.க. செல்வாக்கு - எவரெஸ்ட் சிகரத்தில் கொடி பறக்கவிடும் அளவிலானது! - என்றெல்லாம் பாரா பாராவாக பழம் பெருமைகள் என்று ஒரு பட்டியலையே தயாரித்து வெளியிட்டிருக்கிறது!
தினமணியில் துக்ளக்சோ - ஆடிட்டர் குருமூர்த்தி சிபாரிசின் பேரில் என்றைக்கு ஆர்.எஸ்.எஸ்.சைச்சேர்ந்த வைத்தியநாத அய்யர் ஆசிரியப்பொறுப்பேற்றாரோ அன்று முதலே தினமணி தி.மு.க. எதிர்ப்பு ஜெயலலிதா ஆதரவு பா.ஜ.க. ஆதரவு ஏடாக மாறிவிட்டது என்பது எல்லோரும் அறிந்த விஷயம்! தி.மு.க.வை நாள் தவறாமல் தாக்குவதையும் அ.தி.மு.க.வின் கொடநாடு குறட்டை பற்றி பக்கம் பக்கமாக புகழ்ந்து போற்றுவதையும் அன் றாடக் கடமையாகக் கொண்டுள்ள தினமணி, இப்படி திடீரென்று, தி.மு.க.வின் பழம் பெருமைகளைப் பட்டியலிட்டு, அய்யோ அப்பேர்ப் பட்ட தி.மு.க.வின் செல்வாக்கு இப்படி சரிந்து விட்டதே என்று முதலைக்கண்ணீர் வடிக்கிறதே; ஏன்? அதில்தான் இருக்கிறது சூட்சுமம்! இப்படியெல்லாம் புகழ்வது போலப் புகழ்ந்து - தி.மு.க. செல்வாக்கு இழந்துவிட்டது என்று வாசகர்கள் மனதில் ஒரு பிரமையை உருவாக்க முயலுகிறது அது!
***
திராவிட முன்னேற்ற கழகம் 1949ல் தொடங்கப்பட்டது. அது தன்னை திராவிட முன்னேற்றக் கழகம் என்று அறிமுகப்படுத்தும் போதே அதற்கு அகில இந்திய செல்வாக்கைவிட திராவிட முன்னேற்ற கழகமே பெரிது என்பதை எடுத்து காட்டுவதாக இருந்தது. அது ஒருபோதும் தன்னை அகில இந்தியாவாக அடையாளம் காட்டிக் கொள்ள முயன்றதே இல்லை. எல்லா விஷயங்களிலும் அகில இந்தியாவுக்கும் வழிகாட்டும் இயக்கமாகவே அது தன்னை அடையாளம் காட்டிக்கொண்டதே அல்லாமல் ‘அகில இந்தியா’வாக அது தன்னை ஒரு போதும் காட்டிக்கொள்ள முயன்றதில்லை. எனினும் தி.மு.க. தொடங்கப்பட்ட அந்த நாளிலிருந்து இன்றுவரை, அகில இந்தியக்கட்சிகளும் வியப்பும் பிரமிப்பும் அடையும் வகையில்தான் இயங்கி வருகிறது.
கட்சியின் முன்னேற்றத்தின் ஒவ்வொரு படியிலும் - எடுத்து வைத்த அடியிலும் தி.மு.கழகம் சந்தித்த அடக்குமுறைகள் கொடுமைகள்- ஒவ்வொரு போராட்டத்திலும் அது ஏற்றுக் கொண்ட தழும்புகள் - இந்தியா முழுவதிலுமுள்ள பல்வேறு கட்சிகளும் பார்த்து - பின்பற்றுவதற்குரியதாகவே இருந்தது. தினமணி கூறுவதுபோல் - எத்தகைய சரிவினாலும் தி.மு.க. மக்கள் மத்தியில் செல்வாக்கு இழந்ததே இல்லை.
1949 முதல் இன்று வரையிலான அதன் வளர்ச்சி என்பது பல்வேறு அதற்கு ஏற்படுத்தப்பட்ட பல்வேறு நெருக்கடிகள், வழங்கப்பட்ட தண்டனைகள் - அடக்கு முறைகளிலிருந்தும் அது மீண்டும் எழுந்து சிங்க நடைபோடும் தன்மை உடைய தாகவே இருந்து வருகிறது.
1950 களில் - குலக் கல்வி திட்ட எதிர்ப்பு - கல்லக்குடி போராட்டம் - நான்சென்ஸ் - கண்டன ரயில் நிறுத்தப் போராட்டம் ஆகிய மும்முனை போராட்டங் களை அது நடத்தியபோது, தி.மு.க.வை மூட்டைபூச்சி நசுக்குவது போல நசுக்கி காட்டுவேன் என்று சட்ட சபையிலேயே முதலமைச்சர் ராஜாஜி சூளுரைத்தார். ஆனால், மும்முனை போராட்டத் தின்போது அவரது ஆட்சி அவிழ்த்து விட்ட பல்வேறு கொடுமைகளையும் மீறி தி.மு.க. அகில இந்திய செல்வாக்கு மட்டுமின்றி உலகப் புகழை அடைந்தது. அப்போது அமெரிக்காவில் இருந்து வெளி வரும் ‘நியூயார்க் டைம்ஸ், தி.மு.க. போராட் டத்தை பற்றி உயர்வாக செய்தி வெளியிட்டது. அதன்பின்னர் நடைபெற்ற விலைவாசி உயர்வு எதிர்ப்பு போராட்டத்தின் போது அண்ணா உட்பட அனைத்து தலைவர்களும், தொண்டர்களும் ஆறுமாதம் , ஒரு வருடம் என்று சிறை தண்டனை விதிக்கப்பட்டு சிறையில் இருந்தனர். அந்த நிலையிலும் காமராஜர் ஆட்சியில் நடந்த திருவண்ணாமலை சட்டமன்ற இடைத் தேர்தலில் தி.மு.கழகம் மகத்தான வெற்றி பெற்றது. அதனால் தான் பெருந்தலைவர் காமராஜர் ‘கே.பிளான்’ என்ற பெயரால் முதல்வர் பதவியை ராஜினாமா செய்து விட்டு டெல்லியில் அகில இந்திய காங்கிரஸ் தலைவர் ஆனார். அதற்கு மூல காரணம் தி.மு.க.வின் வளர்ச்சி தான் என்று அகில இந்தியாவும் தி.மு.க.வின் பலம் குறித்து வியந்து எழுதின. இதன்மூலம் தி.மு.க.வை அடக்கி ஒடுக்க முயன்றால் அது முன்னிலும் பலமடங்கு பலத் தோடு எழுந்து நிற்கும் என்பது தெளிவானது.
தி.மு.கழகம் 1965ல் மத்தியில் இந்தி மட்டுமே ஆட்சி மொழி என்பதை எதிர்க்கும் வகையில் குடியரசு தினத்தை துக்க நாள் என்று அறிவித்தது. அதனையொட்டி மாணவர்கள் கிளர்ந்து எழுந்து நடத்திய வீரம் செறிந்த போராட்டம் அகில இந்திய அரசியலை குலுக்கிய போராட்டம் ஆகும். அப்போது சிங்கத் தமிழன் சின்னசாமி உள்ளிட்ட பல பேர் தாய் மொழிகாக்க தங்கள் மீது தாங்களே பெட்ரோலையும், மண் ணெண்ணை யையும் ஊற்றிக் கொண்டு தீக்குளித்து தங்களது இன்னுயிரையே மாய்த்துக்கொண்டது என்பது தமிழ் மொழி வரலாற்றுல் தமிழக வரலாற்றில் பொன் எழுத்துகளால் பொறிக்கப் பட்ட தியாக வரலாறு ஆகும். அந்த போராட்டத்தின்போது தமிழகம் முழுவதும் தி.மு.க.வை இதன் மூலம் ஒழித்தே கட்டி விடுவது என்பது போல அடக்குமுறை அவிழ்த்து விடப்பட்டது. எனினும் அடக்கு முறை கள் முதுகெலும்பு ஒடிந்து முறிந்து விழுந்தன. ""பிரதமர் நேரு இந்தி பேசாத மக்கள் விரும்பும் வரையில் மத்தியில் இந்தியுடன் ஆங்கிலமும் துணை ஆட்சி மொழியாக நீடிக்கும்"" என்று தமது வாக்குறுதிக்கு சட்ட வடிவம் வழங்கினார். தி.மு.க. வின் செல்வாக்கை அடக்க அடக்க ஒடுக்க ஒடுக்க அது முன்னை விட பலமாக வளரும் என்பது இதன்மூலம் மீண்டும் ஒரு முறை நிருபணம் ஆகியது.
இந்தி எதிர்ப்பு போராட்டத்துக்குப் பின்னர் நடந்த தமிழக சட்டமன்ற தேர்தலில் தி.மு.க. அமோக வெற்றிப் பெற்று ஆட்சியை கைப்பற்றியது. அவசர நிலை மத்தியில் பிரகடனப்படுத்தப்பட் டது. அந்த காலக் கட்டத்தில் தி.மு.க.வின் தலைவர்கள், தொண்டர்கள், முக்கியஸ்தர்கள் ஆகியவர்கள் 500க்கும் மேற்பட்டவர் களை மத்திய அரசு ""மிசா"" சட்டத்தின் கீழ் கைது செய்து வழக்கு போட்டு ஜாமீனில்கூட வெளிவர முடியாது என்கிற நிலையில் காராகிருகத்தில் அடைத்தது. அதே சமயம் கலைஞர், தி.மு.க. தலைவர் கள் ஆகியோரது நற்பெயருக்கு புகழுக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் அவர்கள் மீது ஊழல் முத்திரை குத்த வேண்டும் என்ற கெட்ட எண்ணத்தின் அடிப்படையிலேயே சர்க்காரியா கமிஷன் என்கிற ஒரு விசாரனைக் கமிஷனை நியமித்தது அன்றைய மத்திய அரசு.
அந்த காலக்கட்டத்தில் அவிழ்த்து விடப்பட்ட அடக்குமுறைகள், போலீஸ் கொடுமை களை கண்டு தி.மு.க.வில் இருந்த வெகு சில பயந்த சுபாவம் உடையவர்கள், "" நாங்கள் தி.மு.க. அல்ல"" என்று பத்திரிகையிலேயே விளம்பரங் கள்கூட கொடுத்தார்கள். அப் போது தி.மு.க. எதிர்ப் பாளர்கள் எல்லாம் இத்தோடு தி.மு.க. கதை முடிந்து விட்டது என்று கணக்கிட்டு பரவச கூத்தாடினார்கள். ஆனால் அவர்களது கனவு பகல் கனவாயிற்று.
1977-ல் எம்.ஜி.ஆர். முதல்வர் ஆனார். அவர் பதவியேற்ற நாள் முதலே தி.மு.க.வை ஒழிக்க பல்வேறு நடவடிக்கைகள் முடுக்கி விட்டார். தி.மு.க. ஆட்சிக்காலத்தில் கலைஞர் அடிக்கல் நாட்டி திறந்து வைத்த கட்டிடங்கள் எதுவாக ஆனாலும் அவைகளில் கலைஞர் பெயர் இருக்கக்கூடாது என்று கலைஞர் பெயர் கொண்ட கல்வெட்டுகளை எல்லாம் இடித்து அகற்றினார். கலைஞர் பெயர் வைக்கப்பட்ட கட்டிடங்களில் இருந்து அவர் பெயரை அகற்றி அவற்றுக்கு வேறு பெயர்களைச் சூட்டினார். அவரது ஆட்சிக் காலத்தில் ஈழத்தமிழர்களுக்காக தி.மு. கழகம் பல்வேறு போராட்டங் களை நடத்தியது. அப்போது 50 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் மீது வழக்கு போட்டு சிறையில் அடைத்தார். 86-ல் நடைபெற்ற மொழிப் போரில் கலைஞரையும் அவர் விட்டு வைக்கவில்லை. கலைஞர் தனது இல்லத்திலிருந்து புறப்பட்டு சில அடி தூரம் வந்தபோதே அவரை கைது செய்து சிறையில் அடைத்தார். சிறையில் கலைஞருக்கு சிறைக் கைதிகளுக்கு அளிக்கப்படும் ஆடையையே அணிய வேண்டும் என்று நிர்ப்பந்தித்தார்கள்.
இப்படி எம்.ஜி.ஆர். ஆட்சியில் தி.மு.க.வை ஒழிக்க அடுக்கடுக்கான கொடுமைகள் தி.மு.க. மீது ஏவப்பட்டன என்றாலும் தி.மு.க. ஒன்றும் ஒழிந்து போய் விடவில்லை. அதன் செல்வாக்கு ஒன்றும் சரிந்து போய்விட வில்லை. இத்தனை கொடுமைகளுக்கு நடுவிலும் எம்.ஜி.ஆர். ஆட்சியில் நடைபெற்ற உள்ளாட் சித் தேர்தலில் தி.மு.கழகம் வரலாறு காணாத வகையில் எம்.ஜி.ஆர். கட்சியை வீழ்த்தி வெற்றி பெற்று தி.மு.க.வை யாரும் ஒழித்து விடமுடியாது. தி.மு.க.வின் செல்வாக்கு ஒரு போதும் சரிந்து விடாது என்பதை நிரூபித்துக் காட்டியது.
1991-லும் 2001 - லும் நடைபெற்ற தேர்தல் களில் ஜெயலலிதா வெற்றி பெற்று ஆட்சி அமைத்த காலத்திலும் இதுபோல தான் தி.மு.க. எதிர்பாளர்கள் இனி தி.மு.க. எழ முடியாது என்று நினைத்தார்கள். ஆனால் நடந்தது என்ன 1989 தேர்தலிலும் தி.மு.க. வெற்றி முரசு கொட்டி ஆட்சியை கைப்பற்றியது. அதன் பிறகு 1996-ல் நடைபெற்ற சட்ட மன்ற தேர்தலிலும் தி.மு.க.வே அபார வெற்றி பெற்றது. மீண்டும் 2006-ல் நடந்த தேர்தலிலும் தி.மு.க. வெற்றி பெற்று கலைஞர் 5-வது முறையாக முதல் அமைச்சர் ஆனார்.
2011 தேர்தலிலும் அவரே வெற்றி பெற்று 6-வது முறையாகவும் முதல் அமைச்சர் ஆவார் என்பதே பெரும்பான்மையான வர்களின் கணிப்பாக இருந்து வருகிறது. ம்ம்ம் எனவே; தி.மு.கழகம் ராசாவின் பதவி விலகலால் செல்வாக்கு இழந்துவிட்டது என மக்களை நம்ப வைக்க தினமணி போன்ற ஜெயலலிதா ஆதாரவாளர்கள் நடத்தும் பொய் பிரச்சாரங்கள் எல்லாம் ஒரு போதும் நிறைவேறாது.
மடுத்தவா யெல்லாம் பகடன்னான் உற்ற
இடுக்கண் இடர்ப்பாடு உடைத்து.
என்கிற பொய்யா மொழியார் வள்ளுவப் பெருந்தகையின் வாசகத்திற்கேற்ப - எத்தனை இடர்ப்பாடுகள் - இன்னல்கள் - துன்பங்கள், துயரங்களை சந்திக்க நேர்ந்தாலும் அவைகளை எல்லாம் தி.மு.கழகம் சந்தித்து சமாளித்து அடுத்த வெற்றியை நோக்கி நடை போடுமே தவிர, அது ஒருபோதும் வீழ்ந்து விடாது;
தனது செல்வாக்கினை இழந்து விடாது; அடிக்க அடிக்க எழும் பந்துபோல அரைக்க அரைக்க மணக்கும் சந்தனம் போல முன்னைவிட பல்லாயிரம் மடங்கு வேகத் துடனும் புகழுடனும் அது மக்கள் பேராதரவைப் பெற்று வெற்றி முரசு கொட்டும் என்பதையே மேற்கண்ட தி.மு.க.வின் கடந்த காலம் ‘தினமணி’களுக்கு எடுத்துக்காட்டுகிறது!
-சின்னகுத்தூசி
நன்றி:முரசொலி (22-11-2010)
தி.மு.க. செல்வாக்கு சரிகிறது என்று சாதிப்பதற்காகவே - வி.பி.சிங் காலத்தில் தி.மு.க. செல்வாக்கு எவ்வளவு தெரியுமா? - ஐ.கே.குஜ்ரால் காலத்தில் அதன் செல்வாக்கு இமயத்தையே தொட்டுவிட்டது தெரியுமா? - வாஜ்பாய் காலத்து தி.மு.க. செல்வாக்கு - எவரெஸ்ட் சிகரத்தில் கொடி பறக்கவிடும் அளவிலானது! - என்றெல்லாம் பாரா பாராவாக பழம் பெருமைகள் என்று ஒரு பட்டியலையே தயாரித்து வெளியிட்டிருக்கிறது!
தினமணியில் துக்ளக்சோ - ஆடிட்டர் குருமூர்த்தி சிபாரிசின் பேரில் என்றைக்கு ஆர்.எஸ்.எஸ்.சைச்சேர்ந்த வைத்தியநாத அய்யர் ஆசிரியப்பொறுப்பேற்றாரோ அன்று முதலே தினமணி தி.மு.க. எதிர்ப்பு ஜெயலலிதா ஆதரவு பா.ஜ.க. ஆதரவு ஏடாக மாறிவிட்டது என்பது எல்லோரும் அறிந்த விஷயம்! தி.மு.க.வை நாள் தவறாமல் தாக்குவதையும் அ.தி.மு.க.வின் கொடநாடு குறட்டை பற்றி பக்கம் பக்கமாக புகழ்ந்து போற்றுவதையும் அன் றாடக் கடமையாகக் கொண்டுள்ள தினமணி, இப்படி திடீரென்று, தி.மு.க.வின் பழம் பெருமைகளைப் பட்டியலிட்டு, அய்யோ அப்பேர்ப் பட்ட தி.மு.க.வின் செல்வாக்கு இப்படி சரிந்து விட்டதே என்று முதலைக்கண்ணீர் வடிக்கிறதே; ஏன்? அதில்தான் இருக்கிறது சூட்சுமம்! இப்படியெல்லாம் புகழ்வது போலப் புகழ்ந்து - தி.மு.க. செல்வாக்கு இழந்துவிட்டது என்று வாசகர்கள் மனதில் ஒரு பிரமையை உருவாக்க முயலுகிறது அது!
***
திராவிட முன்னேற்ற கழகம் 1949ல் தொடங்கப்பட்டது. அது தன்னை திராவிட முன்னேற்றக் கழகம் என்று அறிமுகப்படுத்தும் போதே அதற்கு அகில இந்திய செல்வாக்கைவிட திராவிட முன்னேற்ற கழகமே பெரிது என்பதை எடுத்து காட்டுவதாக இருந்தது. அது ஒருபோதும் தன்னை அகில இந்தியாவாக அடையாளம் காட்டிக் கொள்ள முயன்றதே இல்லை. எல்லா விஷயங்களிலும் அகில இந்தியாவுக்கும் வழிகாட்டும் இயக்கமாகவே அது தன்னை அடையாளம் காட்டிக்கொண்டதே அல்லாமல் ‘அகில இந்தியா’வாக அது தன்னை ஒரு போதும் காட்டிக்கொள்ள முயன்றதில்லை. எனினும் தி.மு.க. தொடங்கப்பட்ட அந்த நாளிலிருந்து இன்றுவரை, அகில இந்தியக்கட்சிகளும் வியப்பும் பிரமிப்பும் அடையும் வகையில்தான் இயங்கி வருகிறது.
கட்சியின் முன்னேற்றத்தின் ஒவ்வொரு படியிலும் - எடுத்து வைத்த அடியிலும் தி.மு.கழகம் சந்தித்த அடக்குமுறைகள் கொடுமைகள்- ஒவ்வொரு போராட்டத்திலும் அது ஏற்றுக் கொண்ட தழும்புகள் - இந்தியா முழுவதிலுமுள்ள பல்வேறு கட்சிகளும் பார்த்து - பின்பற்றுவதற்குரியதாகவே இருந்தது. தினமணி கூறுவதுபோல் - எத்தகைய சரிவினாலும் தி.மு.க. மக்கள் மத்தியில் செல்வாக்கு இழந்ததே இல்லை.
1949 முதல் இன்று வரையிலான அதன் வளர்ச்சி என்பது பல்வேறு அதற்கு ஏற்படுத்தப்பட்ட பல்வேறு நெருக்கடிகள், வழங்கப்பட்ட தண்டனைகள் - அடக்கு முறைகளிலிருந்தும் அது மீண்டும் எழுந்து சிங்க நடைபோடும் தன்மை உடைய தாகவே இருந்து வருகிறது.
1950 களில் - குலக் கல்வி திட்ட எதிர்ப்பு - கல்லக்குடி போராட்டம் - நான்சென்ஸ் - கண்டன ரயில் நிறுத்தப் போராட்டம் ஆகிய மும்முனை போராட்டங் களை அது நடத்தியபோது, தி.மு.க.வை மூட்டைபூச்சி நசுக்குவது போல நசுக்கி காட்டுவேன் என்று சட்ட சபையிலேயே முதலமைச்சர் ராஜாஜி சூளுரைத்தார். ஆனால், மும்முனை போராட்டத் தின்போது அவரது ஆட்சி அவிழ்த்து விட்ட பல்வேறு கொடுமைகளையும் மீறி தி.மு.க. அகில இந்திய செல்வாக்கு மட்டுமின்றி உலகப் புகழை அடைந்தது. அப்போது அமெரிக்காவில் இருந்து வெளி வரும் ‘நியூயார்க் டைம்ஸ், தி.மு.க. போராட் டத்தை பற்றி உயர்வாக செய்தி வெளியிட்டது. அதன்பின்னர் நடைபெற்ற விலைவாசி உயர்வு எதிர்ப்பு போராட்டத்தின் போது அண்ணா உட்பட அனைத்து தலைவர்களும், தொண்டர்களும் ஆறுமாதம் , ஒரு வருடம் என்று சிறை தண்டனை விதிக்கப்பட்டு சிறையில் இருந்தனர். அந்த நிலையிலும் காமராஜர் ஆட்சியில் நடந்த திருவண்ணாமலை சட்டமன்ற இடைத் தேர்தலில் தி.மு.கழகம் மகத்தான வெற்றி பெற்றது. அதனால் தான் பெருந்தலைவர் காமராஜர் ‘கே.பிளான்’ என்ற பெயரால் முதல்வர் பதவியை ராஜினாமா செய்து விட்டு டெல்லியில் அகில இந்திய காங்கிரஸ் தலைவர் ஆனார். அதற்கு மூல காரணம் தி.மு.க.வின் வளர்ச்சி தான் என்று அகில இந்தியாவும் தி.மு.க.வின் பலம் குறித்து வியந்து எழுதின. இதன்மூலம் தி.மு.க.வை அடக்கி ஒடுக்க முயன்றால் அது முன்னிலும் பலமடங்கு பலத் தோடு எழுந்து நிற்கும் என்பது தெளிவானது.
தி.மு.கழகம் 1965ல் மத்தியில் இந்தி மட்டுமே ஆட்சி மொழி என்பதை எதிர்க்கும் வகையில் குடியரசு தினத்தை துக்க நாள் என்று அறிவித்தது. அதனையொட்டி மாணவர்கள் கிளர்ந்து எழுந்து நடத்திய வீரம் செறிந்த போராட்டம் அகில இந்திய அரசியலை குலுக்கிய போராட்டம் ஆகும். அப்போது சிங்கத் தமிழன் சின்னசாமி உள்ளிட்ட பல பேர் தாய் மொழிகாக்க தங்கள் மீது தாங்களே பெட்ரோலையும், மண் ணெண்ணை யையும் ஊற்றிக் கொண்டு தீக்குளித்து தங்களது இன்னுயிரையே மாய்த்துக்கொண்டது என்பது தமிழ் மொழி வரலாற்றுல் தமிழக வரலாற்றில் பொன் எழுத்துகளால் பொறிக்கப் பட்ட தியாக வரலாறு ஆகும். அந்த போராட்டத்தின்போது தமிழகம் முழுவதும் தி.மு.க.வை இதன் மூலம் ஒழித்தே கட்டி விடுவது என்பது போல அடக்குமுறை அவிழ்த்து விடப்பட்டது. எனினும் அடக்கு முறை கள் முதுகெலும்பு ஒடிந்து முறிந்து விழுந்தன. ""பிரதமர் நேரு இந்தி பேசாத மக்கள் விரும்பும் வரையில் மத்தியில் இந்தியுடன் ஆங்கிலமும் துணை ஆட்சி மொழியாக நீடிக்கும்"" என்று தமது வாக்குறுதிக்கு சட்ட வடிவம் வழங்கினார். தி.மு.க. வின் செல்வாக்கை அடக்க அடக்க ஒடுக்க ஒடுக்க அது முன்னை விட பலமாக வளரும் என்பது இதன்மூலம் மீண்டும் ஒரு முறை நிருபணம் ஆகியது.
இந்தி எதிர்ப்பு போராட்டத்துக்குப் பின்னர் நடந்த தமிழக சட்டமன்ற தேர்தலில் தி.மு.க. அமோக வெற்றிப் பெற்று ஆட்சியை கைப்பற்றியது. அவசர நிலை மத்தியில் பிரகடனப்படுத்தப்பட் டது. அந்த காலக் கட்டத்தில் தி.மு.க.வின் தலைவர்கள், தொண்டர்கள், முக்கியஸ்தர்கள் ஆகியவர்கள் 500க்கும் மேற்பட்டவர் களை மத்திய அரசு ""மிசா"" சட்டத்தின் கீழ் கைது செய்து வழக்கு போட்டு ஜாமீனில்கூட வெளிவர முடியாது என்கிற நிலையில் காராகிருகத்தில் அடைத்தது. அதே சமயம் கலைஞர், தி.மு.க. தலைவர் கள் ஆகியோரது நற்பெயருக்கு புகழுக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் அவர்கள் மீது ஊழல் முத்திரை குத்த வேண்டும் என்ற கெட்ட எண்ணத்தின் அடிப்படையிலேயே சர்க்காரியா கமிஷன் என்கிற ஒரு விசாரனைக் கமிஷனை நியமித்தது அன்றைய மத்திய அரசு.
அந்த காலக்கட்டத்தில் அவிழ்த்து விடப்பட்ட அடக்குமுறைகள், போலீஸ் கொடுமை களை கண்டு தி.மு.க.வில் இருந்த வெகு சில பயந்த சுபாவம் உடையவர்கள், "" நாங்கள் தி.மு.க. அல்ல"" என்று பத்திரிகையிலேயே விளம்பரங் கள்கூட கொடுத்தார்கள். அப் போது தி.மு.க. எதிர்ப் பாளர்கள் எல்லாம் இத்தோடு தி.மு.க. கதை முடிந்து விட்டது என்று கணக்கிட்டு பரவச கூத்தாடினார்கள். ஆனால் அவர்களது கனவு பகல் கனவாயிற்று.
1977-ல் எம்.ஜி.ஆர். முதல்வர் ஆனார். அவர் பதவியேற்ற நாள் முதலே தி.மு.க.வை ஒழிக்க பல்வேறு நடவடிக்கைகள் முடுக்கி விட்டார். தி.மு.க. ஆட்சிக்காலத்தில் கலைஞர் அடிக்கல் நாட்டி திறந்து வைத்த கட்டிடங்கள் எதுவாக ஆனாலும் அவைகளில் கலைஞர் பெயர் இருக்கக்கூடாது என்று கலைஞர் பெயர் கொண்ட கல்வெட்டுகளை எல்லாம் இடித்து அகற்றினார். கலைஞர் பெயர் வைக்கப்பட்ட கட்டிடங்களில் இருந்து அவர் பெயரை அகற்றி அவற்றுக்கு வேறு பெயர்களைச் சூட்டினார். அவரது ஆட்சிக் காலத்தில் ஈழத்தமிழர்களுக்காக தி.மு. கழகம் பல்வேறு போராட்டங் களை நடத்தியது. அப்போது 50 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் மீது வழக்கு போட்டு சிறையில் அடைத்தார். 86-ல் நடைபெற்ற மொழிப் போரில் கலைஞரையும் அவர் விட்டு வைக்கவில்லை. கலைஞர் தனது இல்லத்திலிருந்து புறப்பட்டு சில அடி தூரம் வந்தபோதே அவரை கைது செய்து சிறையில் அடைத்தார். சிறையில் கலைஞருக்கு சிறைக் கைதிகளுக்கு அளிக்கப்படும் ஆடையையே அணிய வேண்டும் என்று நிர்ப்பந்தித்தார்கள்.
இப்படி எம்.ஜி.ஆர். ஆட்சியில் தி.மு.க.வை ஒழிக்க அடுக்கடுக்கான கொடுமைகள் தி.மு.க. மீது ஏவப்பட்டன என்றாலும் தி.மு.க. ஒன்றும் ஒழிந்து போய் விடவில்லை. அதன் செல்வாக்கு ஒன்றும் சரிந்து போய்விட வில்லை. இத்தனை கொடுமைகளுக்கு நடுவிலும் எம்.ஜி.ஆர். ஆட்சியில் நடைபெற்ற உள்ளாட் சித் தேர்தலில் தி.மு.கழகம் வரலாறு காணாத வகையில் எம்.ஜி.ஆர். கட்சியை வீழ்த்தி வெற்றி பெற்று தி.மு.க.வை யாரும் ஒழித்து விடமுடியாது. தி.மு.க.வின் செல்வாக்கு ஒரு போதும் சரிந்து விடாது என்பதை நிரூபித்துக் காட்டியது.
1991-லும் 2001 - லும் நடைபெற்ற தேர்தல் களில் ஜெயலலிதா வெற்றி பெற்று ஆட்சி அமைத்த காலத்திலும் இதுபோல தான் தி.மு.க. எதிர்பாளர்கள் இனி தி.மு.க. எழ முடியாது என்று நினைத்தார்கள். ஆனால் நடந்தது என்ன 1989 தேர்தலிலும் தி.மு.க. வெற்றி முரசு கொட்டி ஆட்சியை கைப்பற்றியது. அதன் பிறகு 1996-ல் நடைபெற்ற சட்ட மன்ற தேர்தலிலும் தி.மு.க.வே அபார வெற்றி பெற்றது. மீண்டும் 2006-ல் நடந்த தேர்தலிலும் தி.மு.க. வெற்றி பெற்று கலைஞர் 5-வது முறையாக முதல் அமைச்சர் ஆனார்.
2011 தேர்தலிலும் அவரே வெற்றி பெற்று 6-வது முறையாகவும் முதல் அமைச்சர் ஆவார் என்பதே பெரும்பான்மையான வர்களின் கணிப்பாக இருந்து வருகிறது. ம்ம்ம் எனவே; தி.மு.கழகம் ராசாவின் பதவி விலகலால் செல்வாக்கு இழந்துவிட்டது என மக்களை நம்ப வைக்க தினமணி போன்ற ஜெயலலிதா ஆதாரவாளர்கள் நடத்தும் பொய் பிரச்சாரங்கள் எல்லாம் ஒரு போதும் நிறைவேறாது.
மடுத்தவா யெல்லாம் பகடன்னான் உற்ற
இடுக்கண் இடர்ப்பாடு உடைத்து.
என்கிற பொய்யா மொழியார் வள்ளுவப் பெருந்தகையின் வாசகத்திற்கேற்ப - எத்தனை இடர்ப்பாடுகள் - இன்னல்கள் - துன்பங்கள், துயரங்களை சந்திக்க நேர்ந்தாலும் அவைகளை எல்லாம் தி.மு.கழகம் சந்தித்து சமாளித்து அடுத்த வெற்றியை நோக்கி நடை போடுமே தவிர, அது ஒருபோதும் வீழ்ந்து விடாது;
தனது செல்வாக்கினை இழந்து விடாது; அடிக்க அடிக்க எழும் பந்துபோல அரைக்க அரைக்க மணக்கும் சந்தனம் போல முன்னைவிட பல்லாயிரம் மடங்கு வேகத் துடனும் புகழுடனும் அது மக்கள் பேராதரவைப் பெற்று வெற்றி முரசு கொட்டும் என்பதையே மேற்கண்ட தி.மு.க.வின் கடந்த காலம் ‘தினமணி’களுக்கு எடுத்துக்காட்டுகிறது!
-சின்னகுத்தூசி
நன்றி:முரசொலி (22-11-2010)
கொக்கென்று நினைத்தாயோ கொங்கணவா?
""அலைக்கற்றை ஒதுக்கீட்டு விவகாரத்தில் முன்னாள் அமைச்சர் ஆ.ராசா வெறும் அம்பு தான், அம்பை எய்தவரின் பதவி விரைவில் பறிக்கப்படும்"" - என்று மண்டை கொழுத்துப்போன நிலையில் ஜெயலலிதா அறிக்கை விட்டிருக்கிறார்.
எய்தவர் என்று அவர் யாரைக்குறிப்பிடுகிறார்? எந்தப் பிரச்சினையானாலும் அதற்குக் காரணம் கருணாநிதிதான் என்று கலைஞர்மீது நக்கலும் நையாண்டியும் பொங்க சேறு வாரி இறைப்பது அவரது வாடிக்கை. அதனால்தான் அவரது பக்த கோடியான தினமணி வைத்தினாத அய்யர் - அந்த அறிக்கைக்கு ரொம்பவும் முக்கியத்துவம் கொடுத்து - எல்லோரும் எய்தவர் கலைஞர் தான் என்று நினைக்கும் படியாகத் தலைப்பிட்டு பிரசுரித் திருக்கிறார்.
கலைஞரின் பதவியைப் பறிக்குமளவுக்கு அவர் என்ன குற்றமிழைத்து விட்டார்?
- வருமானத்துக்கு அதிகமாக; லஞ்சம் ஊழல் மூலமாக வசூல் கொள்ளையடித்து சொத்து குவித்துவிட்டார் என்று அவர் மீது ஏதாவது வழக்கு நடைபெறுகிறதா?
- வருமான வரிக்கணக்கை காட்டாமல் - வரி ஏய்ப்புச்செய்ததாக கலைஞர்மீது வழக்கு நடைபெற்று வருகிறதா?
- பிறந்த நாள் பரிசு என்ற பெயரில் அந்நியச்செலாவணி மோசடி செய்ததாக சி.பி.ஐ. வழக்குத் தொடர்ந்து இருக்கிறதா? -
எனினும் கலைஞரின் பதவி விரைவில் பறிக்கப்படும் என்று தனது நாற்றம் பிடித்த வாயால் ஜெய லலிதா - கலைஞரை, தி.மு.க. தொண்டர்களை வம்புக்கு இழுக்கிறாரே; ஏன்?
ஜெயலலிதாவுக்கு வன்முறை அதாவது காலித்தனம், கலவரத்தைத்தூண்டி வன்முறை நடத்துவதில் அபார நம்பிக்கை உண்டு. வன்முறை மூலமே தான் நினைக்கிற காரியங்களை நிறைவேற்றிவிடலாம் என் பதில் அசைக்க முடியாத நம்பிக்கை படைத்தவர் அவர். காலித்தனத்தைக் கட்டவிழ்த்து விட அவர் கையாளும் இன்னொரு சாதனம் - வாய் கூசாது அன்டப்புளுகுகளை, ஆகாசப் புளுகுகளை அவிழ்த்துக் கொட்டுவதிலும் வாய் தேர்ந்தவர்தான் அவர். கடந்த காலத்தில் அவர் கட்டவிழ்த்த பொய்களையும் காலித்தனங்களையும் பட்டியிலிட நினைத்தால் ஒரு குறு நூலே எழுதி விடலாம்.
- எம்.ஜி.ஆர்.- தனது வளர்ச்சியைக்கண்டு பொறாமைப்படுவதாக டெல்லிக்குக் கடிதம் எழுதினார்.
- எம்.ஜி.ஆர். மறைவுக்குப் பிறகு அ.தி.மு.க. அணி - ஜா அணி, ஜெ அணி என்று இரண்டா கப் பிளவுபட்டுக்கிடந்தபோது - சேலம் பொருட்காட்சித்திடலில் பேசிய ஜெயலலிதா, ஜானகி அம்மையாரை ""சாராய வியாபாரிகளோடு சரச சல்லாபத்தில் ஈடு பட்டவர்"" என்று நாராச நடையில் ஏசினார்.
- ""எம்.ஜி.ஆர். இறப்பதற்கு நான்கு நாட்களுக்கு முன்பு ஒரு பட அதிபர் எம்.ஜி.ஆரைச் சந்தித்து - ஒரு தியேட்டரை வாங்குவதற்காக ஒண்ணேகால் கோடி பணம் கொடுத்தார். எம்.ஜி.ஆர். இறந்ததும் அந்தப்பெருந்தொகையை எடுத்துக்கொண்டு போய், ராமச்சந்திரா பல்கலைக்கழகக்கட்டிடத்தின் அடியில் உள்ள பாதாள அறையில் வி.என். ஜானகி பதுக்கி விட்டார் என்றார்
ஜெயலலிதா. - ஜெ.அணியில் தன்னிடம் கருத்து வேறுபாடு கொண்ட 4 அடுத்தக்கட்ட தலை வர்களை தெருநாய்கள் என்றார்.
- நாவலரை ‘‘எனது உடம்பிலிருந்து உதிர்ந்த ரோமம்"" என்றார்.
- 93 எம்.எல்.ஏ.க்கள் கொண்ட ஜா அணி - சட்டமன்றத்தில் நம்பிக்கை கோரும் தீர்மானம் கொண்டுவந்தபோது 32 எம்.எல்.ஏ.க்களே கொண்ட தனது அணி ஜெயிக்காது - ஜானகி அம்மையார் வெற்றி பெற்றுவிடுவார் என்பதற்காக - சட்ட மன்றத்தில் வன்முறையை கட்டவிழ்த்து விட ஏற்பாடு செய்து - சட்ட மன்றத்தில் போலீஸ் தடியடி நடத்துமளவுக்கு வன்முறையைக் கட்டவிழ்த்துவிட பின்புலனாயிருந்து - ஜானகி ஆட்சியை டிஸ்மிஸ் செய்வதில் வெற்றி பெற்றார்.
வன்முறை மூலம் ஒரு ஆட்சியையே கவிழ்க்கலாம் - என்ற அவரது காலித்தனத்திற்கு அதுவே முதல் வெற்றியைத் தந்தது. அன்று அவரது வன்முறை மனோபாவத்திற்குக்கிடைத்த வெற்றி - இன்று வரையில் அவரைக் காலித்தனத்தின் நாயகியாக தொடர வைத்திருக்கிறது.
எம்.ஜி.ஆர். மறைவிற்குப்பின் நடந்த முதல் சட்டமன்றத் தேர்தலில் அவரது கட்சி படு தோல்வி அடைந்தது. வழக்கம் போல் ஆட்சி யைக் கவிழ்க்க திட்டமிட்டார் (திருநாவுக் கரசரே சாட்சி) சட்டமன்றத்தில் முதல்வர் கலைஞர் நிதிநிலை அறிக்கையைப் படிக்க எழுந்த போது ""குத்துடா அவனை"" - என்று கூக்குரலிட்டார். அவ்வளவுதான் அ.தி.மு.க. எம்.எல்.ஏ., ஒருவர் - முதல்வரின் முகத்தில் குத்து விட்டார், கையிலிருந்த பட்ஜெட் காகிதங்க ளைக் கிழித்து காற்றில் பறக்கவிட்டார். அவ்வளவுதான் சட்டமன்றம் அமளிமய மாயிற்று. ஜெயலலிதா தலையைப் பிரித்துப்போட்டுக்கொண்டு, ‘ஐயோ என் சேலையைப்பிடித்து இழுத்து அவமானப்படுத்தி விட்டார்கள்’ என்று நீலிக்கண்ணீர் வடித்தபடியே சட்ட சபையிலிருந்து ஓட்டமெடுத்தார்.
- இந்த இரண்டாவது நிகழ்வின் மூலமும் ஜெயலலிதா - ஆட்சியை வன்முறை - பொய் மூலம் கவிழ்த்து விடவே முயன்றார். ஆனால் இம் முறை அவரது பொய் பலிக்கவில்லை. எனினும், புலிகளுக்கு ஆதரவான அரசு என்ற புரளி யைக் கிளப்பிவிட்டு அன்று குடியரசுத் தலைவ ராக இருந்த வெங்கட்ராமன் என்ற பார்ப்பனரின் உதவியோடு தி.மு.க. ஆட்சியைக் கவிழ்ப்பதில் வெற்றி பெற்று விட்டார். வன்முறை பொய்கள் மூலம் நினைத்ததை முடிக்கலாம் ஆட்சியையே கூட கவிழ்க்கலாம் - என்ற அவரது நச்சுத் தன்மை கொண்ட அவரது நம்பிக்கை மேலும் வலு பெற்றது அவரிடம்.
1991ம் ஆண்டு தேர்தலில் ராஜீவ்காந்தி மரணம் காரணமாக எழுந்த அனுதாப அலையில் அவர் முதலாக ஆட்சிக்கு வந்து விட்டார். அவ்வளவுதான் - தன்னை விமர்சித்தவர்களை எல்லாம் பொய்கள் - வன்முறைகள் மூலம் ஒடுக்க முற்பட்டார் அவர்.
- சந்திரலேகா என்ற ஐ.ஏ.எஸ். அதிகாரியின் முகத்தில் திராவகம் வீசப்பட்டது. - விஜயன் என்ற வக்கீலின் கால் வெட்டப்பட்டது.
- சண்முகசுந்தரம் என்ற வக்கீலின் கை விரல்கள் துண்டிக்கப்பட்டன.
- அன்று தலைமைத் தேர்தல் ஆணையராக இருந்த சேஷன் விமான நிலையத்திலிருந்து வெளியே வர முடியாமல் 700க்கு மேற்பட்ட பயங்கர ஆயுதங்களுடன் கூடிய ஆட்டோக் கள் மூலம் 9 மணி நேரம் முற்றுகையிடப்பட்டது.
- சேஷன் தங்கியிருந்த தாஜ் ஓட்டல் அடித்து நொறுக்கப்பட்டது.
- மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தின்மீது வன்முறை ஏவிவிடப்பட்டு அவரது கார் அடித்து நொறுக்கப்பட்டது.
- வழக்கு மன்றத்திற்கு வந்த சுப்பிரமணிய சுவாமிக்கு எதிராக ஆயிரக்கணக்கான பெண்கள் துணியைத்தூக்கி - திவ்ய தரிசனம் காட்டினார்கள்.
- கவர்னர் சென்னாரெட்டி - தனிமையில் இருக்கும்போது என்னிடம் தகாத முறையில் நடந்து கொண்டார் என்று சட்டமன்றத்திலேயே துணிந்து புளுகினார் ஜெயலலிதா.
- உயர்நீதிமன்ற நீதிபதியின் மருமகன் கஞ்சா விற்றதாக பொய் வழக்குப்போடப்பட்டது.
- கவர்னர் சென்னாரெட்டியின் காரை - புதுச்சேரி செல்லும் சாலையில் மறித்து அடித்து நொறுக்கினார்கள்.
- அருணாசலம் என்கிற தாழ்த்தப்பட்ட வகுப்பினைச்சேர்ந்த மத்திய அமைச்சரை - ""நான் பயணம் செய்யும் விமானத்தில் வரக்கூடாது"" என்று கூறி விமானத்திலிருந்து இறக்கி விட்டார் ஜெயலலிதா.
- எம்.ஜி.ஆரின் விசுவாசத்துக்குரிய ஊழியரான முத்துவை கஞ்சா வழக்கில் கைது செய்து சிறையிலடைத்தார்.
இப்படி சொல்லிக்கொண்ட போகலாம் அடுக்கடுக்காக! இவைகளைப் பட்டியலிட்டுக் காட்ட வேண்டிய அவசியம் என்ன என்பதுதான் அனைவரது கவனத்திற்கும் உரியது. எதையும் வன்முறை மூலம் சாதிக்கலாம். பொய், காலித்தனம் மூலம் ஆட்சியையே கவிழ்த்துவிடலாம் என்பது ஜெயலலிதாவின் நெடுநாள் நம்பிக்கை. அந்த அடிப்படையில்தான் எய்தவர் பதவியும் விரைவில் பறிக்கப்படும். என்று வாய்க்கொழுப்பு சேலையில் வடிய வடிய ஆணவத்துடன் அறிக்கை விட்டிருக்கிறார்.
இந்தத்தீய எண்ணத்துடன்தான் அவர் கோவை - திருச்சி - மதுரை கூட்டங்களில் ‘தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு கெட்டுவிட்டது - என்று விஷமப் பிரச்சாரம் செய்தார். இதிலிருந்து அவரது நஞ்சு கலந்த நெஞ்சில் - தமிழகத்தில் சட்டம் ஒழுங்கை குலைக்கும் வரையில் வன்முறையைத் தூண்டிவிட ஏதோ ஒரு சூது நிழலாடிக் கொண்டிருக்கிறது. விரைவில் வன்முறை வெறியாட்டங்களைத்தூண்டிவிட்டு அதன்மூலம் சட்டம் ஒழுங்கு கெட்டுவிட்டது என்றுகூறி ஆட்சியையே கவிழ்த்துவிடலாம் - என்று அவர் நம்புகிறார் என்பது தெரிகிறது.
நண்டு கொழுத்தால் வளையில் இருக்காது என்பார்கள்.
மண்டை ரொம்பவும் கொழுத்து விட்டது ஜெயலலிதாவுக்கு.
வெளியே வந்து விட்டார் விஷம் தோய்ந்த வஞ்சகத்திட்டங்களுடன்! அவரை ஆதரிக்கும் பார்ப்பன பேனாக்கள் எல்லாம் ""ஆகா, ஜெயலலிதாவின் திறமைதான் என்னே என்னே"" என்று வியந்து பாராட்டி எழுதலாம்; ஆனால் வல்லவனுக்கு வல்லவன் வையகத்தில் உண்டு. லட்சோபலட்சம் தி.மு.க.காரர்கள் ஜெயலலிதாவின் பேச்சையும் நடவடிக்கை களையும் கூர்ந்து கவனித்த படியேதான் இருக்கிறார்கள்.
அவர்களிடம் கேட்டால் என்ன சொல்லுவார்கள்
கொக்கென்று நினைத்தாயோ கொங்கணவா?
- என்று சவால் விடமாட்டார்களா என்ன?
- சின்னகுத்தூசி
நன்றி:முரசொலி(23-11-2010)
எய்தவர் என்று அவர் யாரைக்குறிப்பிடுகிறார்? எந்தப் பிரச்சினையானாலும் அதற்குக் காரணம் கருணாநிதிதான் என்று கலைஞர்மீது நக்கலும் நையாண்டியும் பொங்க சேறு வாரி இறைப்பது அவரது வாடிக்கை. அதனால்தான் அவரது பக்த கோடியான தினமணி வைத்தினாத அய்யர் - அந்த அறிக்கைக்கு ரொம்பவும் முக்கியத்துவம் கொடுத்து - எல்லோரும் எய்தவர் கலைஞர் தான் என்று நினைக்கும் படியாகத் தலைப்பிட்டு பிரசுரித் திருக்கிறார்.
கலைஞரின் பதவியைப் பறிக்குமளவுக்கு அவர் என்ன குற்றமிழைத்து விட்டார்?
- வருமானத்துக்கு அதிகமாக; லஞ்சம் ஊழல் மூலமாக வசூல் கொள்ளையடித்து சொத்து குவித்துவிட்டார் என்று அவர் மீது ஏதாவது வழக்கு நடைபெறுகிறதா?
- வருமான வரிக்கணக்கை காட்டாமல் - வரி ஏய்ப்புச்செய்ததாக கலைஞர்மீது வழக்கு நடைபெற்று வருகிறதா?
- பிறந்த நாள் பரிசு என்ற பெயரில் அந்நியச்செலாவணி மோசடி செய்ததாக சி.பி.ஐ. வழக்குத் தொடர்ந்து இருக்கிறதா? -
எனினும் கலைஞரின் பதவி விரைவில் பறிக்கப்படும் என்று தனது நாற்றம் பிடித்த வாயால் ஜெய லலிதா - கலைஞரை, தி.மு.க. தொண்டர்களை வம்புக்கு இழுக்கிறாரே; ஏன்?
ஜெயலலிதாவுக்கு வன்முறை அதாவது காலித்தனம், கலவரத்தைத்தூண்டி வன்முறை நடத்துவதில் அபார நம்பிக்கை உண்டு. வன்முறை மூலமே தான் நினைக்கிற காரியங்களை நிறைவேற்றிவிடலாம் என் பதில் அசைக்க முடியாத நம்பிக்கை படைத்தவர் அவர். காலித்தனத்தைக் கட்டவிழ்த்து விட அவர் கையாளும் இன்னொரு சாதனம் - வாய் கூசாது அன்டப்புளுகுகளை, ஆகாசப் புளுகுகளை அவிழ்த்துக் கொட்டுவதிலும் வாய் தேர்ந்தவர்தான் அவர். கடந்த காலத்தில் அவர் கட்டவிழ்த்த பொய்களையும் காலித்தனங்களையும் பட்டியிலிட நினைத்தால் ஒரு குறு நூலே எழுதி விடலாம்.
- எம்.ஜி.ஆர்.- தனது வளர்ச்சியைக்கண்டு பொறாமைப்படுவதாக டெல்லிக்குக் கடிதம் எழுதினார்.
- எம்.ஜி.ஆர். மறைவுக்குப் பிறகு அ.தி.மு.க. அணி - ஜா அணி, ஜெ அணி என்று இரண்டா கப் பிளவுபட்டுக்கிடந்தபோது - சேலம் பொருட்காட்சித்திடலில் பேசிய ஜெயலலிதா, ஜானகி அம்மையாரை ""சாராய வியாபாரிகளோடு சரச சல்லாபத்தில் ஈடு பட்டவர்"" என்று நாராச நடையில் ஏசினார்.
- ""எம்.ஜி.ஆர். இறப்பதற்கு நான்கு நாட்களுக்கு முன்பு ஒரு பட அதிபர் எம்.ஜி.ஆரைச் சந்தித்து - ஒரு தியேட்டரை வாங்குவதற்காக ஒண்ணேகால் கோடி பணம் கொடுத்தார். எம்.ஜி.ஆர். இறந்ததும் அந்தப்பெருந்தொகையை எடுத்துக்கொண்டு போய், ராமச்சந்திரா பல்கலைக்கழகக்கட்டிடத்தின் அடியில் உள்ள பாதாள அறையில் வி.என். ஜானகி பதுக்கி விட்டார் என்றார்
ஜெயலலிதா. - ஜெ.அணியில் தன்னிடம் கருத்து வேறுபாடு கொண்ட 4 அடுத்தக்கட்ட தலை வர்களை தெருநாய்கள் என்றார்.
- நாவலரை ‘‘எனது உடம்பிலிருந்து உதிர்ந்த ரோமம்"" என்றார்.
- 93 எம்.எல்.ஏ.க்கள் கொண்ட ஜா அணி - சட்டமன்றத்தில் நம்பிக்கை கோரும் தீர்மானம் கொண்டுவந்தபோது 32 எம்.எல்.ஏ.க்களே கொண்ட தனது அணி ஜெயிக்காது - ஜானகி அம்மையார் வெற்றி பெற்றுவிடுவார் என்பதற்காக - சட்ட மன்றத்தில் வன்முறையை கட்டவிழ்த்து விட ஏற்பாடு செய்து - சட்ட மன்றத்தில் போலீஸ் தடியடி நடத்துமளவுக்கு வன்முறையைக் கட்டவிழ்த்துவிட பின்புலனாயிருந்து - ஜானகி ஆட்சியை டிஸ்மிஸ் செய்வதில் வெற்றி பெற்றார்.
வன்முறை மூலம் ஒரு ஆட்சியையே கவிழ்க்கலாம் - என்ற அவரது காலித்தனத்திற்கு அதுவே முதல் வெற்றியைத் தந்தது. அன்று அவரது வன்முறை மனோபாவத்திற்குக்கிடைத்த வெற்றி - இன்று வரையில் அவரைக் காலித்தனத்தின் நாயகியாக தொடர வைத்திருக்கிறது.
எம்.ஜி.ஆர். மறைவிற்குப்பின் நடந்த முதல் சட்டமன்றத் தேர்தலில் அவரது கட்சி படு தோல்வி அடைந்தது. வழக்கம் போல் ஆட்சி யைக் கவிழ்க்க திட்டமிட்டார் (திருநாவுக் கரசரே சாட்சி) சட்டமன்றத்தில் முதல்வர் கலைஞர் நிதிநிலை அறிக்கையைப் படிக்க எழுந்த போது ""குத்துடா அவனை"" - என்று கூக்குரலிட்டார். அவ்வளவுதான் அ.தி.மு.க. எம்.எல்.ஏ., ஒருவர் - முதல்வரின் முகத்தில் குத்து விட்டார், கையிலிருந்த பட்ஜெட் காகிதங்க ளைக் கிழித்து காற்றில் பறக்கவிட்டார். அவ்வளவுதான் சட்டமன்றம் அமளிமய மாயிற்று. ஜெயலலிதா தலையைப் பிரித்துப்போட்டுக்கொண்டு, ‘ஐயோ என் சேலையைப்பிடித்து இழுத்து அவமானப்படுத்தி விட்டார்கள்’ என்று நீலிக்கண்ணீர் வடித்தபடியே சட்ட சபையிலிருந்து ஓட்டமெடுத்தார்.
- இந்த இரண்டாவது நிகழ்வின் மூலமும் ஜெயலலிதா - ஆட்சியை வன்முறை - பொய் மூலம் கவிழ்த்து விடவே முயன்றார். ஆனால் இம் முறை அவரது பொய் பலிக்கவில்லை. எனினும், புலிகளுக்கு ஆதரவான அரசு என்ற புரளி யைக் கிளப்பிவிட்டு அன்று குடியரசுத் தலைவ ராக இருந்த வெங்கட்ராமன் என்ற பார்ப்பனரின் உதவியோடு தி.மு.க. ஆட்சியைக் கவிழ்ப்பதில் வெற்றி பெற்று விட்டார். வன்முறை பொய்கள் மூலம் நினைத்ததை முடிக்கலாம் ஆட்சியையே கூட கவிழ்க்கலாம் - என்ற அவரது நச்சுத் தன்மை கொண்ட அவரது நம்பிக்கை மேலும் வலு பெற்றது அவரிடம்.
1991ம் ஆண்டு தேர்தலில் ராஜீவ்காந்தி மரணம் காரணமாக எழுந்த அனுதாப அலையில் அவர் முதலாக ஆட்சிக்கு வந்து விட்டார். அவ்வளவுதான் - தன்னை விமர்சித்தவர்களை எல்லாம் பொய்கள் - வன்முறைகள் மூலம் ஒடுக்க முற்பட்டார் அவர்.
- சந்திரலேகா என்ற ஐ.ஏ.எஸ். அதிகாரியின் முகத்தில் திராவகம் வீசப்பட்டது. - விஜயன் என்ற வக்கீலின் கால் வெட்டப்பட்டது.
- சண்முகசுந்தரம் என்ற வக்கீலின் கை விரல்கள் துண்டிக்கப்பட்டன.
- அன்று தலைமைத் தேர்தல் ஆணையராக இருந்த சேஷன் விமான நிலையத்திலிருந்து வெளியே வர முடியாமல் 700க்கு மேற்பட்ட பயங்கர ஆயுதங்களுடன் கூடிய ஆட்டோக் கள் மூலம் 9 மணி நேரம் முற்றுகையிடப்பட்டது.
- சேஷன் தங்கியிருந்த தாஜ் ஓட்டல் அடித்து நொறுக்கப்பட்டது.
- மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தின்மீது வன்முறை ஏவிவிடப்பட்டு அவரது கார் அடித்து நொறுக்கப்பட்டது.
- வழக்கு மன்றத்திற்கு வந்த சுப்பிரமணிய சுவாமிக்கு எதிராக ஆயிரக்கணக்கான பெண்கள் துணியைத்தூக்கி - திவ்ய தரிசனம் காட்டினார்கள்.
- கவர்னர் சென்னாரெட்டி - தனிமையில் இருக்கும்போது என்னிடம் தகாத முறையில் நடந்து கொண்டார் என்று சட்டமன்றத்திலேயே துணிந்து புளுகினார் ஜெயலலிதா.
- உயர்நீதிமன்ற நீதிபதியின் மருமகன் கஞ்சா விற்றதாக பொய் வழக்குப்போடப்பட்டது.
- கவர்னர் சென்னாரெட்டியின் காரை - புதுச்சேரி செல்லும் சாலையில் மறித்து அடித்து நொறுக்கினார்கள்.
- அருணாசலம் என்கிற தாழ்த்தப்பட்ட வகுப்பினைச்சேர்ந்த மத்திய அமைச்சரை - ""நான் பயணம் செய்யும் விமானத்தில் வரக்கூடாது"" என்று கூறி விமானத்திலிருந்து இறக்கி விட்டார் ஜெயலலிதா.
- எம்.ஜி.ஆரின் விசுவாசத்துக்குரிய ஊழியரான முத்துவை கஞ்சா வழக்கில் கைது செய்து சிறையிலடைத்தார்.
இப்படி சொல்லிக்கொண்ட போகலாம் அடுக்கடுக்காக! இவைகளைப் பட்டியலிட்டுக் காட்ட வேண்டிய அவசியம் என்ன என்பதுதான் அனைவரது கவனத்திற்கும் உரியது. எதையும் வன்முறை மூலம் சாதிக்கலாம். பொய், காலித்தனம் மூலம் ஆட்சியையே கவிழ்த்துவிடலாம் என்பது ஜெயலலிதாவின் நெடுநாள் நம்பிக்கை. அந்த அடிப்படையில்தான் எய்தவர் பதவியும் விரைவில் பறிக்கப்படும். என்று வாய்க்கொழுப்பு சேலையில் வடிய வடிய ஆணவத்துடன் அறிக்கை விட்டிருக்கிறார்.
இந்தத்தீய எண்ணத்துடன்தான் அவர் கோவை - திருச்சி - மதுரை கூட்டங்களில் ‘தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு கெட்டுவிட்டது - என்று விஷமப் பிரச்சாரம் செய்தார். இதிலிருந்து அவரது நஞ்சு கலந்த நெஞ்சில் - தமிழகத்தில் சட்டம் ஒழுங்கை குலைக்கும் வரையில் வன்முறையைத் தூண்டிவிட ஏதோ ஒரு சூது நிழலாடிக் கொண்டிருக்கிறது. விரைவில் வன்முறை வெறியாட்டங்களைத்தூண்டிவிட்டு அதன்மூலம் சட்டம் ஒழுங்கு கெட்டுவிட்டது என்றுகூறி ஆட்சியையே கவிழ்த்துவிடலாம் - என்று அவர் நம்புகிறார் என்பது தெரிகிறது.
நண்டு கொழுத்தால் வளையில் இருக்காது என்பார்கள்.
மண்டை ரொம்பவும் கொழுத்து விட்டது ஜெயலலிதாவுக்கு.
வெளியே வந்து விட்டார் விஷம் தோய்ந்த வஞ்சகத்திட்டங்களுடன்! அவரை ஆதரிக்கும் பார்ப்பன பேனாக்கள் எல்லாம் ""ஆகா, ஜெயலலிதாவின் திறமைதான் என்னே என்னே"" என்று வியந்து பாராட்டி எழுதலாம்; ஆனால் வல்லவனுக்கு வல்லவன் வையகத்தில் உண்டு. லட்சோபலட்சம் தி.மு.க.காரர்கள் ஜெயலலிதாவின் பேச்சையும் நடவடிக்கை களையும் கூர்ந்து கவனித்த படியேதான் இருக்கிறார்கள்.
அவர்களிடம் கேட்டால் என்ன சொல்லுவார்கள்
கொக்கென்று நினைத்தாயோ கொங்கணவா?
- என்று சவால் விடமாட்டார்களா என்ன?
- சின்னகுத்தூசி
நன்றி:முரசொலி(23-11-2010)
Subscribe to:
Posts (Atom)