Search This Blog

Wednesday, 19 January 2011

பா.ஜ.க அரசு கவிழ்ந்து அது காபந்து அரசாக நீடித்த போது....!

1998ல் மத்தியில் பா.ஜ.க. ஆட்சி நடந்தபோது தொலைத்தொடர்புத் துறையில் நடத்தப்பட்ட ஊழல் இது. தொலைத்தொடர்புத்துறையில் ஊழல் செய்வதற்காக - பா.ஜ.க. ஆட்சி எப்படிப்பட்ட தில்லு முல்லுகளை எல்லாம் செய்தது என்பதை விளக்கும் கட்டுரை இது. அன்று நடத்தப்பட்டதையும் - இன்று நடந்ததையும் ஒப்பிட்டுப் பார்க்க இது உதவும். பா.ஜ.க.வினருக்கு சொல் வேறு, செயல்வேறு என் பதையும் அவர்களது இரட்டை வேடத்தையும் அம்பலப்படுத்தவே - இது இங்கே மீண்டும் நினைவுபடுத்தப்படு கிறது. ம்ம்ம் பா.ஜ.க. ஆட்சியில் பங்குப் பத்திர ஊழலை மெகா ஊழல் என்று அழைத்தனர் என்றால் செல்லுலர் ஊழலை மஹா மெகா ஊழல் என்றும் 20ம் நூற்றாண்டின் இணையற்ற ஊழல் என்றும் வர்ணித்தனர். நல்ல பிரதமர், ‘ஜென்டில்மேன் பாலிடிஷியன்என்று சான்றிதழ்கள் வழங்கப்பட்ட வாஜ்பாயின் நேரடிப் பார்வையில் நடந்த ஊழல் இது. 1998ம் ஆண்டு பா.ஜ.க. ஆட்சி கவிழ்க்கப் பட்ட பின்னர் காபந்து சர்க்காரை நடத்திய போது மிகத் துணிச்சலோடு நடத்தப்பட்ட இந்த ஊழலைக் குடியரசுத் தலைவர், தில்லி உயர்நீதிமன்றம், தேர்தல் கமிஷன் என முக்கிய அரசமைப்புச் சட்ட அங்கங்கள் கண்டித் துள்ளன. ஆட்சேபித்துள்ளன. ஊழல் மூலம் பிரதமர் வாஜ்பாய்க்கு நெருக்கமானவர்கள், பிரதமர் அலுவலகத்தில் உள்ளவர்கள், பிரதமர் இல்லத்தைச் சேர்ந்தவர்கள் ரூ.300 கோடி அளவுக்கு லஞ்சம் பெற்றனர் என்று அவுட் லுக் பத்திரிகை செய்து வெளியிட்டது. செல்லுலர் நிறுவனங்களுக்கு லைசென்ஸ் கட்டணச் சலுகை அளிக்கப்பட்டதால் பத்து ஆண்டுகளில் ரூ.50,000 கோடி அரசுக்கு இழப்பு ஏற்பட் டது. இப்போது இந்த ஊழலின் அடிப்படைகளைக் காண்போம். 1994ம் ஆண்டு தொலைபேசிக் கொள்கை அறிவிக்கப்பட்டபோது செல்லுலர் மற்றும் அடிப்படைத் தொலைபேசி வசதியை ஏற்படுத்தும் பணிகள் தனியாரிடம் அனுமதிக்கப்பட்டன. இதற்காகப் பகிரங் டெண்டர் கள் கோரப்பட்டன. வட்டார வாரியாக உயர்ந்த ஒப்பந்தம் கோரியவர்களுக்கு காண்ட்ராக்ட் வழங்கப்பட்டது. சென்னை, மும்பை, தில்லி, கொல்கத்தா ஆகிய பெருநகரங்களில் செல்லுலர் தொலை பேசி வசதி செய்ய பத்து வருட காண்ட்ராக்ட் தரப்பட்டது. ஒவ்வொரு பெருநகரத்திற்கும் இரண்டு கம்பெனிகளுக்கு கான்ட்ராக்ட் தரப்பட்டது. முதல் மூன்று ஆண்டுகளுக்குக் குறிப்பிட்ட அளவு லைசென்ஸ் கட்டணமும் எஞ்சியுள்ள ஏழு ஆண்டுகளுக்கு வெவ்வேறு கட்டண விகிதங்களும் நிர்ணயிக்கப்பட்டன. உதாரணமாக, மும்பையில் செயல்படுகின்ற தனியார் தொலைபேசிக்காரர்கள் முதலாவது, இரண்டாவது, மூன்றாவது ஆண்டுகளுக்கு முறையே ரூ.3 கோடி, ரூ.6 கோடி, ரூ.12 கோடி லைசென்ஸ் கட்டணம் செலுத்த வேண்டும். நான்காவது ஆண்டு முதல், ஆண்டு ஒன்றுக்கு, ஒவ்வொரு நூறு தொலைபேசிக்கும் ரூ.5 லட்சம் செலுத்த வேண்டும். நான்கு முதல் ஆறாவது ஆண்டுகள் வரை குறைந்த அளவுக் கட்டணம் ஆண்டுக்கு ரூ.18 கோடி செலுத்த வேண்டும். ஏழாவது ஆண்டிலிருந்து பத்தாம் ஆண்டு வரை ஓர் ஆண்டுக்குக் குறைந்த அளவு கட்டணம் ரூ.24 கோடியாகும். அடிப்படைத் தொலைபேசி வசதிகளைச் செய்து தருகின்ற தனியாரைப் பொறுத்தவரையில், மொத்தமுள்ள பணிகளில் தொலைபேசித் தொடர்புகளில் பத்து சதவீதத்தைச் சமூக நல உதவியாகக் கிராமங்களில் செய்து தருவதாக அரசிடம் உறுதி அளித்திருந்தனர். ஒப்பந்தம் செய்து மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு ஒட்டுமொத்தமாக எல்லா தனியார் காண்ட் ராக்டர்களும் லைசென்ஸ் கட்டணத்தைச் செலுத்தவில்லை. வாக்குறுதி அளித்த படி கிராமப்புறங் களுக்கும் தொடர்பு வசதிகளைச் செய்து தர வில்லை. இந்தக் காண்ட்ராக்டர்கள் தொடர்ந்து லைசென்ஸ் கட்டணம் செலுத்தாததால் உயர்ந்து வந்த கட்டணப்பாக்கி குறித்து இந்தியக் கணக்குத் தணிக்கை அதிகாரி அடுத்தடுத்து கண்டனத்தை வெளியிட்டு வந்தார். இந்தப் பிரச்சினையில் முன்னாள் பிரதமர் தேவெகௌட உள்பட பல எம்.பி.க்கள் கண்டனம் தெரிவித்தனர். தில்லி உயர்நீதிமன்றத்தில் இரண்டு பொதுநல வழக்குகளும் தொடரப்பட்டன. காண்ட்ராக்டர்கள் குறித்துக் கடும் விமர்சனங்கள் எழுந்ததால் அவர்கள் ஒன்று சேர்ந்து சில சலுகைகளைக் கோரினர். தாங்கள் நஷ்டம் அடைந்து விட்டதாகவும், அதனால் கட்டணப் பாக்கியைத் தள்ளுபடி செய்ய வேண்டும் என்றும் கோரினர். கட்டணம் செலுத்துவதற்கான கால அளவில் மாறு தல் செய்ய வேண்டும் என்றும் லைசென்ஸ் கட்ட ணம் எப்போது முதல் விதிக்க வேண்டும் என்பதில் மாற்றம் வேண்டும் என்றும் கோரிக்கை வைத்தனர். இந்நிலையில் பாரதி செல்லுலர் லிமிடெட் நிறுவனத்தின் உரிமையாளர் சுனில்மிட்டல் அடிக்கடிப் பிரதமர் அலுவலகத்திற்குச் சென்று வருபவர் என்ப தாலும் பிரதமரின் வளர்ப்பு மகளின் கணவரிடம் நெருங்கிய தொடர்பு வைத்திருந்ததாலும் தொலை பேசிக் காண்ட் ராக்டர்கள் பிரச்சினையைத் தீர்க்கும் பெரும் பணியை அவர் எடுத்துக் கொண்டார். இதற்கிடையே காண்ட்ராக்டர்கள் ஒன்று சேர்ந்து தங்களிடையே லஞ்சப் பணத்தை திரட்டினர். சலுகைக்கேற்றபடி லஞ்சம் தரத் தயாரானார்கள். இதற்கிடையே புட்டப்பர்த்தி சாய்பாபாவும் இந்தப் பேரத்திற்கு உதவினார் என்று சொல்லப்படுகிறது. தொலைபேசித் தொழிலில் ஈடுபட்டுள்ள கோஷிகா என்ற மற்றொரு கம்பெனியின் உரிமையாளர்     குல்வந்த்ராயின் தில்லி வீட்டிற்கு சாய்பாபா வந்திருந்தார். தொலைபேசித் தொழிலில் ஈடுபட்டுள்ள எஸ்ஸார் என்ற பெரிய நிறுவனம் உள்துறை அமைச்சர் அத்வானிக்கு நெருக்கமாக இருந்தது என்றும் தெரிகிறது. தொலைத் தொடர்புத்துறை 1999 செப்டம்பரில் தற்காலிகமாக வாஜ்பாய் பொறுப்பில் இருந்தது. அப்போது தனியார் தொலைத்தொடர்பு ஒப்பந்தக் காரர்களின் வஞ்சகமான கோரிக்கைகளை அமைச்சரவை பரிசீலனைசெய்தது. அதனைத் தொடர்ந்து, வெளி யுறவுத் துறை அமைச்சர் ஜஸ்வந்த்சிங்கைப் பின்னிருந்து இயக்கும் சக்தியாகக் கொண்டு ஒரு தொலைத் தொடர்புக் குழு அமைக்கப்பட்டது. தனியார் தொலைத்தொடர்பு காண்ட்ராக்டர்களுக்கு உதவிசெய்வதற்கான வழிவகைகளைக் கண்டு பிடிப்பதுதான் அந்தக் குழுவின் மிகப்பெரிய பணியாகும். அந்தக் குழு தனது பணியைச் செய்து கொண்டிருந்தபோது ஜக்மோகன் தொலைத் தொடர்புத்துறை அமைச்சராகப் பொறுப்பேற்றார். புதிய அமைச்சரும் பிரதமர் அலுவலகம் தொடங்கி வைத்த நற்பணி யைத்தொடர்ந்து நிறைவேற்றுவார் என்று எதிர் பார்க்கப் பட்டது. ஆனால் எதிர்பார்ப்பு பொய்த்தது. ஒப்பந்தக்காரர்களின் கட்டணப்பாக்கி ரூ.300 கோடி என்ற அளவில் இருந்தது. ஆனால் அவர்களோ, 3.5 கோடியைத்தான் லைசென்ஸ் கட்டணமாகச் செலுத்தியிருந்தனர். மொத்தத் தொகையில் 20 சதவீதத்தைச் செலுத்த வேண்டும் என்று தொலைத் தொடர்புக் குழு கேட்டுக் கொண்டது. இது ஒரு தற்காலிக ஏற்பாடு என்று அட்டர்னி ஜெனரல் சோலி சோரப்ஜி தெரிவித்தார். ஆனால் ஒப்பந்தத்தின் ஷரத்துகளை மாற்ற வேண்டும் என்ற யோசனையை அட்டர்னி ஜெனரல் ஏற்கவில்லை. 1999 ஜனவரி 6-ம் தேதி சோலி சோரப்ஜி இதுபற்றி எழுதிய குறிப்பில் லைசென்ஸ் தாரர்கள் பெரிய அளவு தொகையைக் கட்டணப் பாக்கியாக வைத்திருந்துவிட்டு தவறான எதிர்பார்ப் பால் நிதி நெருக்கடி ஏற்பட்டு விட்டது என்று கூறிப் பெரிய அளவில் சாதகமான மாற்றங்களைச் செய்ய வேண்டும் என்று கோருகி றார்கள். இவர்களின் கோரிக்கைகளை ஏற்றால் அரசாங்கத்தின் செயல்பாடுகள் தவறான சமிக்ஞையை - தகவலைப் பரப்பக் கூடியதாக அமைந்து விடும்.


கட்டண பாக்கியாளர்களுக்கு உதவுவதாக, ஊக்கம் தருவதாக அரசின் செயல்பாடு அமைந்துவிடக் கூடாது என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்தச் சலுகைப் பிரச்சினை தொடர்பாகப் பொதுநல வழக்குதில்லி உயர்நீதிமன்றத்தில் நடந்து கொண்டிருந்த போது ஒப்பந்ததாரர்களில் ஒருவர் நிருபர்களிடம் ஒரு தகவலை வெளியிட்டார். அதாவது ஜக்மோகன் அவரது பொறுப்பிலிருந்து நீக்கப்படுவதற்கு எத்தனை மணிநேரம் இருக்கிறது என்பதை எண்ணிப் பார்த்துக் கொண்டிருக்கிறார் என்பதுதான். அந்தத் தகவலும் தில்லி பத்திரிகையில் செய்தி யாக வெளி வந்தது. இச்செய்தி வெளியான அடுத்த நாளே 1999 ஜூன் 8-ம் தேதி ஜக்மோகன் நகர்ப்புற வளர்ச்சித் துறைக்கு மாற்றப்பட்டுவிட்டார். அதன்பின்தான் தகவல் தொடர்புத்துறையைப் பிரதமர் தன் பொறுப்பில் எடுத்துக் கொண்டார். தொலைபேசி காண்ட்ராக்டர்களுக்குக் கொண்டாட்டம் அதிகமானது. தனியாரின் கோரிக்கை களை நிறைவேற்றும் வகையில் புதிய கொள்கையை வரையுமாறு பிரதமர் அலுவலகத்தில் உள்ள செயலாளர் ஒருவர் கேட்டுக் கொள்ளப்பட்டார். ஒப்பந்தத்தில் மாறுதல் செய்யக்கூடாது என்று அட்டர்னி ஜெனரல் சோலி சோரப்ஜி கூறியிருந்ததால் அவரது திருத்தப்பட்ட கருத்து இப்போது தேவைப்பட்டது. அதனால் பிரிட்டனில் விடுமுறையைக் கழித்துக் கொண்டிருந்த சோலி சோரப்ஜி வரவழைக்கப் பட்டார். புதிய கொள்கைக்கு ஏற்ற மாற்றுக் கருத்தைத் தரும்படி கேட்டுக் கொள்ளப்பட்டார். சோரப்ஜியின் இந்தக் குறிப்பு மூலம் மத்திய அரசு தனியாருக்குச் சலுகை தர ஏற்கெனவே ஒப்புக் கொண்டுள்ளது என்ற உண்மை தெரியவந்தது. கட்டணத்தைச் செலுத்தியவர்களையும் செலுத் தாதவர்களையும் சமநிலையில் வைத்துப் பார்க்கும் போக்கு தவறானது. இந்தப் போக்குக் காரணமாக ஒழுங்காகக் கட்டணம் செலுத்துபவர்கள் இடையே கட்டணம் செலுத்தும் ஆர்வம் குறைந்து விட்டது என்று சோரப்ஜி தனது குறிப்பில் தெரிவித்துள்ளார். சோரப்ஜியின் இந்தச் சந்தேகம் சரியானது என்பது நிரூபணமாகிவிட்டது. கோஷிகா உள்பட இரண்டு கம்பெனிகள் 20 சதவீத பாக்கியையும் செலுத்தவில்லை. இந்தப்பாக்கியைச் செலுத்தியே தீர வேண்டும் என்று அமைச்சர் ஜக்மோகன் வலி யுறுத்தினார். ஒப்பந்த நிபந்தனைகளை மாற்றுவதற்கு எதிர்ப் பையும் தெரிவித்தார். ஒப்பந்த நிபந்தனைகளை மாற்றுவதற்கு எதிராக ஜக்மோகன் சில கேள்விகளை எழுப்பினார்.  அந்தக் கேள்விகள் வருமாறு:- போட்டி முறையில் ஒருவரை ஒப்பந்ததாரராகத் தேர்ந்தெடுத்து அவருடன் ஒப்பந்தம் செய்து கொண்ட பிறகு, அந்த ஒப்பந்த உறுதி மொழிகளைக் கடைப்பிடிக்காமல் இருப்பது சட்டப்படியோ, அரச மைப்புச் சட்டப்படியோ, நிதி வருமான அடிப்படையிலோ, வணிக ரீதியாகவோ, ஒழுக்க ரீதியாகவோ நியாயமான செயலா? அரசுக்குக் கிடைக்க வேண்டிய ரூ.4000 கோடி பாக்கியை வசூலிக்காமல் இருப்பது பற்றிப் பொது மக்கள், பத்திரிகைகள், நாடாளுமன்றம், ஆடிட்டர் ஜெனரல், கோர்ட் ஆகியோர் என்ன நினைப்பார் கள்? சில கம்பெனிகள் அவற்றின் பங்கு முதலீட்டை விற்று மிகப்பெரிய அளவுக்கு லாபம் அடைந்துள்ளன. அப்படி இருக்கும் போது அவர்களுடைய தொழில் நன்றாக நடைபெற வில்லை என்றால் இது சாத்தியமானதா? அந்தக் கம்பெனியில் சலுகைகளைக் கோரி இப்போது கொடுத்து வருகின்ற நிர்பந்தம் தங்களது பங்கு முதலீட்டை அதிகரித்துக் கொள்வதற்கான தந்திரம் இல் லையா? லைசென்ஸ்தாரர்கள் உண்மையில் நஷ்டம் அடைந்திருப்பார்களானால் அவர்களில் ஒருவர் கூட லைசென்சைத் திருப்பித்தர முன்வராதது ஏன்? ஒரு தொழில் முயற்சியில் நஷ்டமடைகிறயாராக இருந்தாலும் அந்தத் தொழிலைத் தொடர்ந்து செய்து நஷ்டத்தைப் பெருக்கிக் கொண்டே இருப்பார்கள் என்று சொல்வது அறிவுக்குப் பொருத்தமாக இருக் கிறதா? தொழில் லாபமாக இல்லை என்றால் புதிய லைசென்ஸ்தாரர்களையும் டெலிலிங்க் 1998 மார்ச்சிலும் ஸ்ரீனிவாஸ் செல்காம் 1998 மே-யிலும் செல்லுலார் வசதித் தொழிலில் ஈடுபட முன்வந்திருப்பது எப்படி? ஒவ்வொரு கம்பெனிக்கும் தனித்தனியே வெவ் வேறு வட்டாரங்கள் செயல்பாட்டுக்காகப் பிரித்துக் கொடுக்கப்பட்டுள்ள நிலையில், ஒவ்வொரு கம்பெனியும் தனித்தனியே ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ள நிலையில் அவர்கள் ஒன்றுபட்டு ஒரே வகையான கோரிக்கையை எழுப்புவது நியாயமா? லைசென்ஸ் விதிமுறைகள் உறுதியாகப்பின் பற்றப்படாவிட்டால் அது ஒரு தவறான முன்னுதாரணமாக ஆகிவிடாதா? வேறு துறைகளில் உள்ள தொழில் முனைவர்களும் ஒப்பந்த விதிகளை மீறும் வகையில், இதுபோன்ற கோரிக்கைகளை எழுப்பு வார்களே? ஒப்பந்த நிபந்தனைகளைச் சாதாரணமாக எடுத்துக் கொள்வதும் மீறுவதும் நடைமுறை ஆகி விடாதா? சந்தைப் பொருளாதாரத்தை ஏற்றுக் கொண்டுள்ள எந்த நாட்டிலாவது திறந்த ஒப்பந்தம் மூலம் செய்யப்பட்ட ஒப்பந்தத்தில் தலையீடு நடைபெற அனுமதித்துள்ளனரா? ஜக்மோகனின் இந்த முக்கியமான கேள்விகள் தொலைபேசி ஒப்பந்ததாரர்களுக்கும் பிரதமர் அலுவலகத்தில் உள்ள காப்பாளர்களுக்கும் மிகுந்த சிக்கலைத் தந்தன. தங்கள் விருப்பப்படி ஆட வேண்டும் என்று ஜக்மோகன் கேட்டுக் கொள்ளப்பட்டார். ஆனால் அவர் மசியவில்லை. இதற்கு மாறாக 20 சதவீதப் பாக்கியைச் செலுத்தத் தவறிய இரண்டு கம்பெனிகளின் லைசென்சை ஜக்மோகன் ரத்து செய்துவிட்டார். பெருநகரங்களில் உள்ள எட்டு மிகப் பெரிய நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கத் திட்டமிட்டு வந்தார். இவைகளில் 1999 ஜனவரி 31ஆம் தேதி வரை பார்தி 28.74 கோடியும் பிபிஎல் 26.45 கோடியும், ஸ்டெர்லிங் 19.73 கோடியும் ஹட்சின்சன் 29.29 கோடியும் பாக்கி வைத் திருந்தன. அமைச்சரின் உறுதியான நிலை பிரதமர் அலு வலகத்தில் உள்ளவர்களுக்கும் தொலை பேசி காண்ட்ராக்டர்களுக்கும் ஒரு தலைவலியாக உரு வெடுத்து விட்டது. அந்நிலை யில்தான் தொலைத் தொடர்புத் துறை அமைச்சர் பொறுப்பிலிருந்து ஜக் மோகனை நீக்க நிர்பந்தங்களை உருவாக்கத் தொடங்கினர். அமைச்சரவை கூடிப் புதிய கொள்கைக்கு ஒப்புதலும் வழங்கி விட்டது. தனியார் காண்ட் ராக்டர்கள் என்ற மிகப் பெரிய சுறா மீன்களின் முன்பு மத்திய அரசு சரணடைந்தது. இதற்கிடையே நிதித் துறை அமைச்சகத்தின் குறிப்பு, அமைச்சரவையின் ஒவ்வொரு நடவடிக்கையையும் ஆட்சேபித்தது. ஆனால் அரசு ஆறுமாத காலத்திற்கு லைசென்சைப் புதுப்பித்ததோடு அக்கால கட்டத்திற்கான லைசென்ஸ் கட்டணத்தையும் தள்ளுபடி செய்தது. இந்த வகையில் அரசு கஜானாவிற்கு ரூ.400 கோடி இழப்பு ஏற்பட்டது. இதன் மூலம் பிரிட்டனைச் சேர்ந்த சிவசங்கரன் மற்றும் ஸ்விஸ் நிறுவனத்தைச் சேர்ந்த எஸ்ஸார், ஹாங்காங்கைச் சேர்ந்த ஹட்சின்சன் மற்றும் பிபிஎல் ஆகியவை பயன்பெற்றன. தொலைத்தொடர்புத் துறையின் மொத்தப் பணப்புழக்கம் ரூ.12,000 கோடியாகும். இதில் 60 சதவீதம் 4 பெருநகரங்களின் தொலைபேசி காண்ட்ராக்டர்கள் வசம் ஒப்படைக்கப்பட்டது. லைசென்ஸ் கட்டணம் ஒழிக்கப்பட்டு லைசென்ஸ் தாரர்கள் வருவாய்ப் பங்கீட்டு முறைக்கு மாறிக் கொள்ள அனுமதிக்கப்பட்டனர். செயல்பட ஆரம்பித்த பின்னர் நான் காம் ஆண்டில் ஒவ்வொரு காண்ட்ராக்டரும் ஒரு சந்தாதாரருக்கு ரூ.6023 தர வேண்டும் என்று நிர்ணயிக்கப்பட்டது. இதன் மூலம் நான்காம் ஆண்டில் ரூ.300 கோடி நஷ்டம் என ஆரம்பித்து, பத்தாவது ஆண்டில் ரூ.50,000 கோடி வரை அரசுக்கு நஷ்டம் ஏற்படும் நிலை உருவாக்கப்பட்டது. கிராமப்புறங்களில் தொலைபேசி உறுதி செய்து தருகிற சமூக நலச் செயல்பாட்டுத் திட்டத்தையும் ரத்து செய்து மத்திய அரசு தனியாருக்கு உதவி யாகக் கரிசனத்துடன் செயல்பட்டுள்ளது. இந் நிலை தொலைத் தொடர்புத் துறை நஷ்டத்தையும் தனியார் காண்ட்ராக்டர்கள் கொள்ளை லாபத்தையும் அடையும் நிலையை உருவாக்கியது. சோழியன் குடுமி சும்மா ஆடுமா? தனியாரைக் காப்பாற்றும் வகையில் செய்யப்படும் முயற்சி தவறு என்று குடியரசுத் தலைவர் தந்த யோசனையை மீறி மூன்று ஆண்டுகள் கட்டாமல் இருந்த கட்டணப் பாக்கியையும் காபந்து சர்க்காராக இருந்த பா.ஜ.க. அரசு ரத்து செய்திருக் கிறது. இந்தப் பிரச்சினை குறித்து இடதுசாரிக் கட்சிகள் குடியரசுத் தலைவரைச் சந்தித்து சில சான்று ஆதாரங் களையும் வழங்கினார்கள். இதையடுத்து குடியரசுத் தலைவர் கே.ஆர்.நாராயணன், வேறு துறைக்கு மாற்றப்பட்ட ஜக் மோகனை அழைத்து இப்பிரச்சினை குறித்து கேட்டறிந்ததாகத் தெரிகிறது. தனியாருக்கு மூன்று ஆண்டுக் கட்டணத்தை ரத்து செய்யக் கூடாது என்று தெரிவித்து குடியரசுத் தலைவர் கடிதம் எழுதியுள்ளார் என்றும் தெரிகிறது. இக்கடிதம் நிராகரிக்கப் பட்டது என்ற விவரம் சில பத்திரிகைகளில் வெளியானது. அப்படிச் செய்ததின் மூலம் அதிகாரபூர்வமாகக் குடியரசுத் தலைவருக்குப் பதில் கடிதம் எழுதாமல் அவரைப் காபந்து சர்க்கார் அவமதித்து விட்டது. மொத்தத்தில் இந்த விவகாரத்தில் பல்லாயிரம் கோடி லஞ்சமாகப் பெறப்பட்டிருக்கும் என்று தெரிவிக்கப்படுகிறது. ஜக்மோகனை மாற்றியது போல்தான் இப்பிரச்சினையில் ஒத்துழைப்புத் தராத நிதித்துறைச் செயலாளரும் மாற்றப்பட்டார் என்ற சந்தேகம் உருவெடுத்தது. மக்களவைத் தேர்தலுக்கு முன்பு தேர்தல் நன்னடத்தை விதிமுறைக்கு மாறாக இது போன்ற சலுகையை அளித்துத் தேர்தலுக்குப் பெருமளவு நிதியை பா.ஜ.க. திரட்டுகிறது என்ற புகாரை அடுத்து தேர்தல் கமிஷனும் அமைச்சரவைச் செயலாளருக்கு இப்பிரச்சினை குறித்து கடிதத்தை அனுப்பியது. இது குறித்துக் கேள்வி எழுப்பத் தேர்தல் கமிஷ னுக்கு என்ன அதிகாரம் இருக் கிறது என்று பிரதமர் அலுவலகம் கேள்வி எழுப்பி யது.  ஆனால் பா.ஜ.க.வோ இப்பிரச்சினை குறித்துப் பொதுமக்களிடமோ, ராஜ்யசபாவிலோ விவாதிக்க முன்வரவில்லை. இவ்விஷயத்தில் பா.ஜ.க. அரசு அவசரம் காட்டியது ஏன் என்று டெல்லி உயர்நீதி மன்ற நீதிபதி வரியவா கேள்வி எழுப்பினார். அட்டர்னி ஜென ரலின் ஆலோசனையும் அதைக் கேட்டுச் செயல்பட வேண்டும் என்று பிரதமர் வாஜ்பாய் அனுப்பிய கோப்பின் நகலும் பத்திரிகை களுக்கு கிடைத்துவிட்டன. அட்டர்னி ஜெனர லின் யோசனையை வாபஸ் பெறச் செய்தது ஏன்? கோர்ட்டில் தனது யோசனைக்கு மாறாக சோரப்ஜி வாதிட்டது ஏன்? இடையில் நடந்தது என்ன என்பதுதான் கேள்விகள். - என்று தமது ஊழலோ ஊழல்என்ற நூலில் தலைசிறந்த அரசியல் விமர்சகரான தி.சிகாமணி எழுதியிருக்கிறார்.
*** இன்று அதே பா.ஜ.க.வினர்தான் - அதே தொலைபேசித் தொடர்பு தொடர்பாக ஊழல் ஊழல் என்று கூக்குரலிடுகிறார்கள். பா.ஜ.க. ஆட்சிக்கு ஒரு நியாயம் - மன்மோகன் அரசுக்கு ஒரு நியாயமா? 
நன்றி:முரசொலி 20-12-2010      

ஜெயலலிதாவைக் கைது செய்யலாமா?

    
அ.தி.மு.க. தலைமை நிலையத்தில் ஒரு விழா. அதிலே கலந்து கொண்ட ஜெயலலிதாவிடம் பத்திரிகையாளர்கள், 2ஜி அலைக்கற்றை விவகாரம் தொடர்பாக முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசாவுக்கு சி.பி.ஐ. நோட்டீஸ் அனுப்பியுள்ளதே என்று கேட்டிருக்கிறார்கள். அதற்கு பதிலளித்த ஜெயலலிதா ""ஆ.ராசாவை சி.பி.ஐ. உடனடியாகக் கைது செய்ய வேண்டும்"" என்று குறிப்பிட்டிருக்கிறார். நோட்டீஸ் அனுப்பினாலே போதும் கைது செய்யத்தான் வேண்டும் என்றால் முதலில் கைது செய்யப்படவேண்டியவர் ஜெயலலிதா வாகத்தான் இருக்கமுடியும். 

*** ராசா மீது எந்த வழக்கும் இல்லை. எந்த எப்.ஐ.ஆரும் போடப்பட்டதில்லை. எந்தவித குற்றப் பத்திரிகையும் தாக்கல் செய்யப்பட வில்லை. எனினும், சி.பி.ஐ. அவருக்கு சம்மன் அனுப்பிவிட்டது என்ற ஒரு காரணத்துக்காகவே அவரை கைது செய்யவேண்டும் என்கிறார் ஜெயலலிதா. இந்த விசயத்தில் ஜெயலலிதாவின் யோக்கியதை என்ன? அவர் மீது சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கே நடந்து வருகிறது. 10 ஆண்டு களுக்கு மேலாக நடைபெற்று வரும் இந்த வழக்கு அன்னிய செலாவணி மோசடி என்ற குற்றப் பிரிவின்கீழ் தொடரப்பட்ட வழக்கு ஆகும். சி.பி.ஐ. சம்மன் அனுப்பிவிட்டது - என்பதற்காகவே ராசாவை கைது செய்ய வேண்டும் என்றால், - ஜெயலலிதாவுக்கு சி.பி.ஐ. சம்மன் அனுப்பியது. அந்த சம்மன் தொடர்பாக ஜெயலலிதா சி.பி.ஐ. அலுவலகத்தில் நேரடியாக ஆஜராகி விளக்கமும் அளித்தார். - அந்த வழக்கில் அவர் மீது குற்றப் பத்திரிகை பதிவு செய்து 10 ஆண்டுகளாக அது நடந்து வருகிறது. 

*** 1991-ல் ஜெயலலிதா முதலமைச்சர் ஆனார். அந்த ஆண்டு எந்த ஆண்டிலும் இல்லாத வகையில் அவரது பிறந்த தினத்தை அ.தி.மு.க. வினர் கொண்டாடினார்கள். பிறந்த தினத்தை யொட்டி அவருக்கு ஏராளமான பரிசுகள் வந்து குவிந்தன. வெளிநாட்டிலிருந்து அவருக்கு பிறந்த தின பரிசாக 3,00,000 அமெரிக்க டாலர்கள் அனுப்பி வைக்கப்பட்டிருந்தது. அந்தத் தொகையை வாங்கி ஜெயலலிதா அப்படியே தனது வங்கிக் கணக்கில் போட்டுக் கொண்டார். இந்தப் பணம் எங்கிருந்து யாரிடமிருந்து அனுப்பப்பட்டது என்ற கேள்வி எழுந்தபோது அவர் எனக்குத் தெரியாது என்று மறுத்தார். அன்றைய ரூபாய் மதிப்பில் அந்த பணம் 77 லட்சத்து 52 ஆயிரத்து 501 ரூபாய் ஆகும். ""எனக்குக் கிடைத்த இந்தத் தொகைகள் அனுப்பப்பட்ட கவர்களில் இந்தத் தொகை யாரிடமிருந்து வந்தன என்பதற்கான முகவரி எதுவும் இல்லை. நான் இதனை எனது ஆடிட்டரிடம் கொடுத்து பரிசீலிக்க சொன்னேன். அவர் இதை பிறந்தநாள் பரிசாகத்தான் அனுப்பியிருக்கிறார்கள். ஆகவே நீங்கள் இந்தத் தொகையை உங்கள் கணக்கிலேயே வரவு வைத்துக் கொள்ளலாம்என்று ஆலோசனை கூறினார். அதன்படியே நான் அந்த தொகைகளை என்னுடைய கணக்கில் வரவு வைத்துக் கொண்டேன்"" என்று விளக்கம் அளித்தார் ஜெயலலிதா. 

வெளிநாட்டில் இருந்து பணம் பெறுவது தொடர்பாக அன்னிய செலாவணி தடுப்புச் சட்டம் சில நிபந்தனைகளை விதிக்கிறது. அதன்படி பெறப்பட்ட தொகைகள் அல்ல இவை. ஆகவே அன்னிய செலாவணி குற்றத் தடுப்பு சட்ட பிரிவுகளின்கீழ் ஜெயலலிதா மீது சி.பி.ஐ. வழக்கு கொடுத்தது. எனினும் பணம் எங்கிருந்து வந்தது என்று ஆய்வு நடத்தியபோது நியுயார்க்கில் உள்ள பாஸ்கத் டிரஸ்ட் கம்பெனி இதற்கான பண விடையை அனுப்பி வைத்துள்ளது என்பது தெளிவாகியது. ஜெயலலிதா ஒரு அரசாங்க ஊழியர் (முதலமைச்சர்) என்பதால் வெளிநாட்டில் இருந்து வரும் தொகைகளை பெறமுடியாது. எனினும் ஜெயலலிதா அதுபற்றி கண்டு கொள்ளாமல் வழக்கை நடத்த முடியாமல் எத்தனை காலம் இழுத்தடிக்க முடியுமோ அத்தனை காலமாக அதாவது 10 ஆண்டு காலத்துக்கும் மேலாக இழுத் தடித்து வருகிறார். சி.பி.ஐ.-யின் இந்த வழக்கு அவர் மீது தொடரப்பட்ட பின்னரும் அவர் (1991 - 96, 2001 - 2006) இருமுறை முதலமைச்சர் பதவியை வகித்திருக்கிறார். உங்கள் மீது வழக்குகள் இருக்கின்றனவே குற்றவாளியாக நீங்கள் பதவியில் நீடிக்க லாமா?’ என்ற கேள்வி எழுந்தபோதெல்லாம் குற்றம் சாட்டப் பட்டதாலேயே ஒருவரைக் குற்றவாளி என்று கூறிவிட முடியாது. நீதிமன்றத்தின் இறுதித் தீர்ப்பு வரும் வரையில் நான் குற்றவாளி அல்ல. குற்றஞ்சாட்டப் பட்டவள்தான்’ - என்று வியாக்கியானம் சொல்லிக் கொண்டிருந்தார் ஜெயலலிதா. ஆனால் இப்போதோ ராசாவிற்கு சி.பி.ஐ. சம்மன் அனுப்பிவிட்டது. ஆகவே அவரை கைது செய்ய வேண்டும் என்று கூக்குரலிடுகிறார் அவர். 

ஜெயலலிதா மீது மட்டும்தானா? அவரது ஆருயிர் தோழியும் பினாமியுமான சசிகலா-வுக்கும் துபாயில் உள்ள பேங்க் ஆப் பரோடா மூலம் 2 லட்சம் அமெரிக்க டாலருக்கான பணவிடை (எண். 085346) வந்தது. இதற்கான இந்தியப் பணம் 51 இலட்சத்து 47 ஆயிரத்து 955-யை சசிகலா தன் வங்கிக் கணக்கில் போட்டுக்கொண்டார். இங்கிலாந்தில் உள்ள இண்டர் போல் போலீஸ் மூலம் சி.பி.ஐ. இந்த வழக்கிலும் விசாரணையை மேற்கொண்டது. ம்ம்ம் இந்த இலட்சணத்தில்தான் ஜெயலலிதா ராசாவை கைது செய்யவேண்டும் என்கிறார். 10 ஆண்டு காலத்துக்கு மேலாக சி.பி.ஐ.யின் வழக்கிலேயே சிக்கிக்கொண்டு தள்ளாடும் ஜெயலலிதா, சி.பி.ஐ. நோட்டீஸ் அனுப்பி இருக்கிறது என்பதற்காகவே ராசாவை கைது செய்ய வேண்டும் என்பது விந்தையிலும் விந்தை

வெங்காய விலை உயர்வும் தமிழக அரசு படைத்த முன்னுதாரணமும்!

    
மற்ற உணவு தானியங்களைப் போலவே வெங்காயத்தின் விலையும் கடந்த சில நாட்களில் கற்பனை செய்து பார்க்க முடியாத அளவிற்கு உயர்ந்து விட்டது. விலைவாசி உயர்வு இறக்கை கட்டிக் கொண்டு பறக்கிறது. விண்ணை முட்டிக் கொண்டு போகிறது என்று மற்ற பண்டங்களின் விலை உயரும் போதெல்லாம் சொல்வது வழக்கம். அதை உண்மை தான் என்று எல்லோரும் ஆமோதிக்கும் வகையில் இப்போது வெங் காயத்தின் விலை கிடுகிடு என உயர்ந்து இருக்கிறது.  இந்த விலை உயர்வுக்கு காரணம் என்ன? தமிழ்நாடு வியாபாரிகளைப் பொறுத்தவரையில் வெங்காய விலை உயர்வுக்கு கூறும் காரணம், பொதுவாக கோயம்பேடு மார்க்கெட்டுக்கு தமிழ்நாட்டில் பாவூர்சத்திரம், பல்லடம், தாராபுரம், உடுமலைப்பேட்டை, வத்தலகுண்டு, பழனி, திண்டுக்கல், ஒட்டன்சத்திரம் ஆகிய பகுதிகளில் இருந்தும், ஆந்திரா, கர்நாடகா, மகாராஷ்ட்ரா ஆகிய பகுதிகளில் இருந்தும் தினமும் 70 லாரிகளில் வெங்காயம் வந்து இறங்கும். ஆனால் மழையின் காரணமாக தமிழகத்தில் பல இடங்களில் வெங்காயம் விளையவில்லை. 

கர்நாடகா, ஆந்திரா, மகாராஷ்ட்ரா ஆகிய பகுதிகளில் இருந்து மட்டும் தற்போது 30 லாரிகளில் மட்டுமே வெங்காயம் வந்து இறங்குகிறது. வெங்காயவரத்து குறைந்ததின் காரணமாக வெங்காயத்தின் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது. வெங்காயம் அதிகம் விளையும் பகுதிகளில் அதிக மழை பெய்ததால் வெங்காயம் அழுகிவிட்டது. இதன் காரணமாக குறைவான வெங்காயமே மார்க்கெட்டுக்கு வந்துள்ளது. இதைத் தொடர்ந்து வெங்காயத்தின் விலையும் உயர்ந்துள்ளது. வெங்காயத்தின் உற்பத்தி அதிகரித்து மார்க்கெட்டுக்கு வந்தால்தான் விலை குறையும் என்று தமிழக வெங்காய வியாபாரிகள் சார்பில் சமாதானம் கூறப்படுகிறது. எனினும் எதிர்க்கட்சிகள் பலவும் இந்த வெங்காயத்தின் விலை உயர்வுக்கு ஏதோ அரசாங்கம் தான் காரணம் என்பது போல இந்தப் பிரச்சினையால் அரசியல் ஆதாயம் தேடும் நோக்கத்துடன் இதனை பெரிதுபடுத்தி வருகிறார்கள். இவர்கள் எல்லோரும் வெங்காய விலை உயர்வை வாயாலே வெளியில் எதிர்க்கிறார்களே தவிர, அவர்கள் மனசுக்குள் எல்லாம் வெங்காயம் இன்னும் விலை உயர வேண்டும், சட்டமன்றத் தேர்தல் வரையில் விலை உயர்ந்து கொண்டே போகவேண்டும். அப்போது இந்த வெங்காய விலை உயர்வை வைத்து ஆளும் கட்சியை தோற்கடித்து விட முடியும் என்கிற நப்பாசை மேலோங்கிக் கிடக்கிறது. இதற்கு அவர்கள் ஒரு முன்னுதாரணத்தையும் நினைத்துப் பார்க்கிறார்கள். அது என்ன? 1998-ல் டெல்லியில் வெங்காயத்தின் விலை கிடுகிடுவென உயர்ந்தது. அப்போது டெல்லி யில் பா.ஜ.க. ஆட்சிதான் நடைபெற்று வந்தது. ஒரு கிலோ 7 ரூபாய்க்கு விற்ற வெங்காயம் கிலோ 20 ரூபாய் என்று விலை உயர்ந்து இறக்கை கட்டிக் கொண்டு பறந்தது. அப்போது நடந்த தேர்தலில் வெங்காய விலை காரணமாகவே பா.ஜ.க. ஆட்சி கவிழ்ந்து காங்கிரஸ் அமோக வெற்றி பெற்றது. இதனை மனதில் வைத்துக்கொண்டுதான் எதிர்க்கட்சியினர் இப்போது வெங்காய விலை உயர்வை பூதாகரமாக பெரிதுபடுத்தி விட முயற்சிக் கிறார்கள். ஆனால் வெங்காய விலை உயர்வு என்பது தமிழகத்தில் மட்டுமே உள்ள விலைவாசி நிலவரம் அல்ல. 

தமிழகத்தில் வெங்காய விலை கிலோ 85 ரூபாய் என்பதாகத்தான் இருக்கிறது. அதே சமயம் கொல்கத் தாவில் கிலோ 60 ரூபாய்க்கும், டில்லியில் கிலோ  70 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது. நாடு முழுவதும் வெங்காய விலை தொடர்ந்து அதிகரித்தே வருகிறது. மொத்த விற்பனை யில் கிலோ 70 ரூபாய்க்கும் சில்லறையில் அதிகபட்சமாக நூறு ரூபாய் வரையிலும் உயர்த்தியே விற்கப் பட்டு வருகிறது. இந்த வெங்காய விலை உயர்வுக்கு எதிர்க்கட்சிகள், தவறான பொருளாதார குழுவை திறமையற்ற நிர்வாகம் உள்ளிட்டவைகளே காரணம் என்று கூறுகின்றன. எனினும் வெங்காய விலை உயர்வைக் கட்டுப்படுத்த மத்திய அரசு விரைந்து நடவடிக்கைகளை எடுக்காமல் இல்லை. அது பதுக்கலை தடுக்க அதிரடி சோதனைகளுக்கான ஏற்பாடு களை செய்து வருகிறது. பாகிஸ்தானில் இருந்து இந்திய மக்களுக்குத் தேவையான அளவு வெங்காயத்தை இறக்குமதி செய்ய ஏற்பாடு செய்துள்ளது. விலை உயர்வுக்கு பிரதமர் மன்மோகன் சிங் கவலை தெரிவித்துள்ளார். விலையை குறைக்க உடனடி நடவடிக்கை எடுக்குமாறு நுகர்வோர் விவகாரம் விவசாயத் துறை களின் செயலாளர்களுக்கு அவர் உத்தரவு இட்டுள்ளார். ஜனவரி 15 வரை வெங்காய ஏற்றுமதிக்கு மத்திய அரசின் வேளாண் பொருட்கள் விலைகளை முறைப்படுத்தும் அமைப் பான ""நட்பெட்"" நேற்று முன்தினம் தடை விதித்துள்ளது.  இதுகுறித்து பேட்டி அளித்த மத்திய நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜி, ""வெங்காய ஏற்று மதிக்கு ஏற்கனவே தடை செய்யப்பட்டுள்ளது. தேவைக்கும் சப்ளைக்கும் இடையே வேறு பாடு இருப்பது தெரிகிறது. சப்ளைக்கு உள்ள தடங்கல் என்ன என அரசு விசாரிக்கும். சம்மந்தப்பட்ட அமைச்சர்களுடன் பேசுவேன்"" என்றார். மத்திய விவசாய அமைச்சர் சரத்பவார் ""இன்னும் 2 அல்லது 3 வாரங்களுக்கு விலை இப் படியே நீடிக்கக்கூடும். அதன் பிறகு விலை குறைந்துவிடும்"" என்றார். ஆகவே, வெங்காய விலை உயர்வை தடுக்க மத்திய சர்கார் நடவடிக்கை எதுவும் மேற்கொள்ள வில்லை. அது சந்தை முதலாளிகளிடம் சரணடைந்து விட்டது என்று எதிர்க்கட்சிகள் பிரச்சாரம் செய்தது நூற்றுக்கு நூறும் உண்மை அல்ல. அது போலவே வெங்காய விலை தமிழகத்தில் மட்டும் தான் உயர்ந்துவிட்டது என்பது அல்ல.

நாடு முழுவதிலும் இக்கால கட்டத்தில் விலை தமிழகத்தைப் போலவே உயர்ந்துதான் இருக்கிறது என்பதையும் மேலே கண்ட தகவல்கள் உறுதி படுத்துவதாக அமைந்திருக்கின்றன. தமிழக அரசைப் பொறுத்தவரையில் எந்த மாநிலத்திலும் இல்லாத வகையில் எல்லா மாநிலங்களுக்கும் வழிகாட்டும் வகையில் வெங்காய விலை உயர்வில் இருந்து பொது மக்களை காப்பாற்ற மின்னல் வேக நடவடிக்கைகளை முடுக்கிவிட்டு முன்னுதாரண மாகத் திகழ்கிறது. இதனை நாம் சொல்லவில்லை. தி.மு.கழகத்தையும், தமிழக அரசையும் நாள் தவறாமல் எதிர்ப்பதையே வாடிக்கையாக்கிக் கொண்டுவிட்ட ""தினமணி"" ஒரு செய்தி மூலம் உறுதிப்படுத்தியுள்ளது. அது என்ன செய்தி

தமிழகத்தில் வெங்காயத்தை கிலோ 40 ரூபாய்க்கு விற்பனை செய்யும் நடவடிக்கையை தமிழக அரசு முடுக்கிவிட்டுள்ளது என்பதே அந்த செய்தி. அது வருமாறு :- சென்னையில் தமிழ்நாடு கூட்டுறவுத் துறைக்குச் சொந்தமான கடைகளில் ஒரு கிலோ வெங்காயம் ரூ.40க்கு விற்கப்பட்டு வருகிறது. வெங்காயம் விலை அதிகம் உள்ள மாவட்டங்களில் இந்தத் திட்டத்தை விரிவுபடுத்த மாநில அரசு முடிவு செய்துள்ளது. தமிழகம் உள்பட இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் வெங்காயத்தின் விலை கடுமை யாக உயர்ந்துள்ளது. கடந்த வாரம் கிலோவுக்கு ரூ.40 வரை விற்ற வெங்காயத்தின் விலை இப்போது ரூ.60ஐ தாண்டி விற்று வருகிறது. விலை உயர்வு அடுத்த மூன்று வாரங் களுக்குத் தொடரும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. இந்த நிலையில், தமிழ்நாடு கூட்டுறவுத் துறை கடைகளில் விற்கப்பட்டு வரும் வெங் காயத்துக்கு அமோக வரவேற்பு கிடைத்து வருகிறது. சென்னையில் திருவல்லிக்கேணி, ராயப்பேட்டை உள்ளிட்ட சில இடங்களில் உள்ள டி.யு.சி.எஸ். கடைகளில் மட்டுமே இதுவரை வெங்காயம் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. விலை இறங்கு முகத்தில் இருந்தபோது கிலோ ரூ.25 வரை விற்கப்பட்டது.  விலை உச்சத்தை எட்டியுள்ள நிலையில், சென்னையில் வெங்காயம் விற்கப்படும் அனைத்து டி.யு.சி.எஸ். கடைகளிலும் மக்களின் கூட்டம் அலை மோதுகிறது. இதனால், தேனாம்பேட்டை பெசன்ட் நகர், அசோக்நகர், செனாய்நகர், நுங்கம்பாக்கம், கீழ்ப்பாக்கம், பெரியார்நகர் ஆகிய இடங்களில் உள்ள டி.யு.சி.எஸ். கடைகளிலும் மலிவு விலையில் வெங்காயம் விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்கப் பட்டு வருவதாக உணவு, கூட்டுறவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை முதன்மைச் செயலாளர் ஸ்வரன்சிங் தெரிவித் துள்ளார். சாம்பார் வெங்காயம் கிலோ ரூ.35க்கும், பெங்களூர் வெங்காயம் (பல்லாரி) கிலோ ரூ.40க் கும், நாசிக் வெங்காயம் கிலோ ரூ.55க்கும் டி.யு.சி.எஸ். கடைகளில் விற்பனை செய்யப் படுகிறது. ஆனால், வெளிச்சந்தையில் செவ்வாய்க் கிழமை நிலவரப்படி, ஒரு கிலோ வெங்காயம் ரூ.65 வரை விற்கப்பட்டது. கிருஷ்ணகிரி, தருமபுரி, மதுரை உள்ளிட்ட இடங்களில் வெங்காயத்தை மொத்தமாக கொள்முதல் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும்

வெங்காயத்துக்கு இணையாக உருளைக் கிழங்கையும் கொள்முதல் செய்து விற்பனை செய்யப்படும் என்றும் ஸ்வரன் சிங் கூறினார். டி.யு.சி.எஸ். கடைகளில் விற்கப்படும் வெங்காயத்தை வாங்குவதற்கு அளவு உண்டு. ஒருவருக்கு 2 கிலோ மட்டுமே அளிக்கப்படும். ஹோட்டல்களின் பயன்பாட்டுக்கோ, மொத்தமாக 5 அல்லது 10 கிலோ என்ற நிலையிலோ வெங்காயம் விற்பனை செய்யப்பட மாட்டாது என கூட்டுறவுத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர். பல்லாரி வெங்காயம் நான்கு டன்னும், உருளைக் கிழங்கை 4 டன்னும் கொள்முதல் செய்து விநியோகிக்க தமிழக அரசு முடிவெடுத்துள்ளது. சாம்பார் வெங்காயம் (சின்ன வெங்காயம்) 2 டன்னும் கொள்முதல் செய்யப்படுகிறது. டி.யு.சி.எஸ். கடைகளுக்காக கொள்முதல் செய்யப்படும் காய்கறிகளை இருப்பு வைக்க தனியான குளிர்பதனக் கிடங்கு இல்லை. இதற்கான மாற்று ஏற்பாடு செய்யவும் உணவுத் துறை நட வடிக்கை எடுத்து வருகிறது என்கிறார் ஸ்வரன் சிங். கொள்முதல் விலையுடன் போக்குவரத்துச் செலவு எவ்வளவு என்பதைக் கணக்கிட்டு விற்பனை செய்கிறோம். ஈரோடு, நாகர்கோவில் போன்ற நகரங்களில் வெங்காயத்தின் விலை சென்னை நகருக்கு இணையாக கடுமையாக உள்ளது. எனவே, அங்கெல்லாம் மலிவு விலையில் வெங்காயம் விற்பனை செய்வது குறித்து ஆலோசிக்கப்பட்டு வருவ தாக ஸ்வரன்சிங் தெரிவித்தார். - என்பதே தினமணிவெளியிட்டுள்ள அந்த நற்செய்தியாகும். ம்ம்ம் இந்தச் செய்தி உணர்த்தும் உண்மை என்ன? வெங்காயத்தின் விலை உயர்வுக்கு அரசாங்கம் காரணமல்ல; பற்றாக்குறையைப் பயன் படுத்தி பண்டங்களைப் பதுக்கி வைத்து கொள்ளை லாபம் சம்பாதிக்கும் வியாபாரிகளே காரணம் ; அதனால் தான் வெங்காயத்தின் விலை மாநிலத்துக்கு மாநிலம் வித்தியாசப்படுகிறது. தமிழக அரசால் மட்டும் கிலோ 40 ரூபாய் விலைக்கு வழங்க முடிகிறதே ; அது எப்படி? அந்த ரகசியத்தைத்தான் ""கொள்முதல் விலையுடன் போக்குவரத்து செலவு எவ்வளவு என்பதை கணக்கிட்டு அதன் அடிப்படையிலேயே குறைந்த விலையில் அதாவது வெளி சந்தைகளின் விற்பனை விலையைவிட பாதி அளவே விலை வைத்து விற்பனை செய்கிறோம்"" என்பதாக தமிழ்நாடு உணவு கூட்டுறவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை முதன்மை செயலாளர் ஸ்வரன்சிங் கூறினார். அதுதான் அந்த ரகசியம் என்பது மட்டு மின்றி தமிழக அரசின் சாதனை மகுடத்தில் இன்னொரு ஒளி வீசும் வைர கல்.      
நன்றி:முரசொலி 23-12-2010