Search This Blog

Wednesday 1 December 2010

கொக்கென்று நினைத்தாயோ கொங்கணவா?

""அலைக்கற்றை ஒதுக்கீட்டு விவகாரத்தில் முன்னாள் அமைச்சர் ஆ.ராசா வெறும் அம்பு தான், அம்பை எய்தவரின் பதவி விரைவில் பறிக்கப்படும்"" - என்று மண்டை கொழுத்துப்போன நிலையில் ஜெயலலிதா அறிக்கை விட்டிருக்கிறார்.

எய்தவர் என்று அவர் யாரைக்குறிப்பிடுகிறார்? எந்தப் பிரச்சினையானாலும் அதற்குக் காரணம் கருணாநிதிதான் என்று கலைஞர்மீது நக்கலும் நையாண்டியும் பொங்க சேறு வாரி இறைப்பது அவரது வாடிக்கை. அதனால்தான் அவரது பக்த கோடியான தினமணி வைத்தினாத அய்யர் - அந்த அறிக்கைக்கு ரொம்பவும் முக்கியத்துவம் கொடுத்து - எல்லோரும் எய்தவர் கலைஞர் தான் என்று நினைக்கும் படியாகத் தலைப்பிட்டு பிரசுரித் திருக்கிறார்.

கலைஞரின் பதவியைப் பறிக்குமளவுக்கு அவர் என்ன குற்றமிழைத்து விட்டார்?
 - வருமானத்துக்கு அதிகமாக; லஞ்சம் ஊழல் மூலமாக வசூல் கொள்ளையடித்து சொத்து குவித்துவிட்டார் என்று அவர் மீது ஏதாவது வழக்கு நடைபெறுகிறதா?
- வருமான வரிக்கணக்கை காட்டாமல் - வரி ஏய்ப்புச்செய்ததாக கலைஞர்மீது வழக்கு நடைபெற்று வருகிறதா?
 - பிறந்த நாள் பரிசு என்ற பெயரில் அந்நியச்செலாவணி மோசடி செய்ததாக சி.பி.ஐ. வழக்குத் தொடர்ந்து இருக்கிறதா? -
எனினும் கலைஞரின் பதவி விரைவில் பறிக்கப்படும் என்று தனது நாற்றம் பிடித்த வாயால் ஜெய லலிதா - கலைஞரை, தி.மு.க. தொண்டர்களை வம்புக்கு இழுக்கிறாரே; ஏன்?
ஜெயலலிதாவுக்கு வன்முறை அதாவது காலித்தனம், கலவரத்தைத்தூண்டி வன்முறை நடத்துவதில் அபார நம்பிக்கை உண்டு. வன்முறை மூலமே தான் நினைக்கிற காரியங்களை நிறைவேற்றிவிடலாம் என் பதில் அசைக்க முடியாத நம்பிக்கை படைத்தவர் அவர். காலித்தனத்தைக் கட்டவிழ்த்து விட அவர் கையாளும் இன்னொரு சாதனம் - வாய் கூசாது அன்டப்புளுகுகளை, ஆகாசப் புளுகுகளை அவிழ்த்துக் கொட்டுவதிலும் வாய் தேர்ந்தவர்தான் அவர். கடந்த காலத்தில் அவர் கட்டவிழ்த்த பொய்களையும் காலித்தனங்களையும் பட்டியிலிட நினைத்தால் ஒரு குறு நூலே எழுதி விடலாம்.

- எம்.ஜி.ஆர்.- தனது வளர்ச்சியைக்கண்டு பொறாமைப்படுவதாக டெல்லிக்குக் கடிதம் எழுதினார்.
  - எம்.ஜி.ஆர். மறைவுக்குப் பிறகு அ.தி.மு.க. அணி - ஜா அணி, ஜெ அணி என்று இரண்டா கப் பிளவுபட்டுக்கிடந்தபோது - சேலம் பொருட்காட்சித்திடலில் பேசிய ஜெயலலிதா, ஜானகி அம்மையாரை ""சாராய வியாபாரிகளோடு சரச சல்லாபத்தில் ஈடு பட்டவர்"" என்று நாராச நடையில் ஏசினார்.
 - ""எம்.ஜி.ஆர். இறப்பதற்கு நான்கு நாட்களுக்கு முன்பு ஒரு பட அதிபர் எம்.ஜி.ஆரைச் சந்தித்து - ஒரு தியேட்டரை வாங்குவதற்காக ஒண்ணேகால் கோடி பணம் கொடுத்தார். எம்.ஜி.ஆர். இறந்ததும் அந்தப்பெருந்தொகையை எடுத்துக்கொண்டு போய், ராமச்சந்திரா பல்கலைக்கழகக்கட்டிடத்தின் அடியில் உள்ள பாதாள அறையில் வி.என். ஜானகி பதுக்கி விட்டார் என்றார்

ஜெயலலிதா. - ஜெ.அணியில் தன்னிடம் கருத்து வேறுபாடு கொண்ட 4 அடுத்தக்கட்ட தலை வர்களை தெருநாய்கள் என்றார்.
 - நாவலரை ‘‘எனது உடம்பிலிருந்து உதிர்ந்த ரோமம்"" என்றார்.
 - 93 எம்.எல்.ஏ.க்கள் கொண்ட ஜா அணி - சட்டமன்றத்தில் நம்பிக்கை கோரும் தீர்மானம் கொண்டுவந்தபோது 32 எம்.எல்.ஏ.க்களே கொண்ட தனது அணி ஜெயிக்காது - ஜானகி அம்மையார் வெற்றி பெற்றுவிடுவார் என்பதற்காக - சட்ட மன்றத்தில் வன்முறையை கட்டவிழ்த்து விட ஏற்பாடு செய்து - சட்ட மன்றத்தில் போலீஸ் தடியடி நடத்துமளவுக்கு வன்முறையைக் கட்டவிழ்த்துவிட பின்புலனாயிருந்து - ஜானகி ஆட்சியை டிஸ்மிஸ் செய்வதில் வெற்றி பெற்றார்.
 வன்முறை மூலம் ஒரு ஆட்சியையே கவிழ்க்கலாம் - என்ற அவரது காலித்தனத்திற்கு அதுவே முதல் வெற்றியைத் தந்தது. அன்று அவரது வன்முறை மனோபாவத்திற்குக்கிடைத்த வெற்றி - இன்று வரையில் அவரைக் காலித்தனத்தின் நாயகியாக தொடர வைத்திருக்கிறது.
 எம்.ஜி.ஆர். மறைவிற்குப்பின் நடந்த முதல் சட்டமன்றத் தேர்தலில் அவரது கட்சி படு தோல்வி அடைந்தது. வழக்கம் போல் ஆட்சி யைக் கவிழ்க்க திட்டமிட்டார் (திருநாவுக் கரசரே சாட்சி) சட்டமன்றத்தில் முதல்வர் கலைஞர் நிதிநிலை அறிக்கையைப் படிக்க எழுந்த போது ""குத்துடா அவனை"" - என்று கூக்குரலிட்டார். அவ்வளவுதான் அ.தி.மு.க. எம்.எல்.ஏ., ஒருவர் - முதல்வரின் முகத்தில் குத்து விட்டார், கையிலிருந்த பட்ஜெட் காகிதங்க ளைக் கிழித்து காற்றில் பறக்கவிட்டார். அவ்வளவுதான் சட்டமன்றம் அமளிமய மாயிற்று. ஜெயலலிதா தலையைப் பிரித்துப்போட்டுக்கொண்டு, ‘ஐயோ என் சேலையைப்பிடித்து இழுத்து அவமானப்படுத்தி விட்டார்கள்’ என்று நீலிக்கண்ணீர் வடித்தபடியே சட்ட சபையிலிருந்து ஓட்டமெடுத்தார்.
- இந்த இரண்டாவது நிகழ்வின் மூலமும் ஜெயலலிதா - ஆட்சியை வன்முறை - பொய் மூலம் கவிழ்த்து விடவே முயன்றார். ஆனால் இம் முறை அவரது பொய் பலிக்கவில்லை. எனினும், புலிகளுக்கு ஆதரவான அரசு என்ற புரளி யைக் கிளப்பிவிட்டு அன்று குடியரசுத் தலைவ ராக இருந்த வெங்கட்ராமன் என்ற பார்ப்பனரின் உதவியோடு தி.மு.க. ஆட்சியைக் கவிழ்ப்பதில் வெற்றி பெற்று விட்டார். வன்முறை பொய்கள் மூலம் நினைத்ததை முடிக்கலாம் ஆட்சியையே கூட கவிழ்க்கலாம் - என்ற அவரது நச்சுத் தன்மை கொண்ட அவரது நம்பிக்கை மேலும் வலு பெற்றது அவரிடம்.
 1991ம் ஆண்டு தேர்தலில் ராஜீவ்காந்தி மரணம் காரணமாக எழுந்த அனுதாப அலையில் அவர் முதலாக ஆட்சிக்கு வந்து விட்டார். அவ்வளவுதான் - தன்னை விமர்சித்தவர்களை எல்லாம் பொய்கள் - வன்முறைகள் மூலம் ஒடுக்க முற்பட்டார் அவர்.
- சந்திரலேகா என்ற ஐ.ஏ.எஸ். அதிகாரியின் முகத்தில் திராவகம் வீசப்பட்டது. - விஜயன் என்ற வக்கீலின் கால் வெட்டப்பட்டது.
- சண்முகசுந்தரம் என்ற வக்கீலின் கை விரல்கள் துண்டிக்கப்பட்டன.
- அன்று தலைமைத் தேர்தல் ஆணையராக இருந்த சேஷன் விமான நிலையத்திலிருந்து வெளியே வர முடியாமல் 700க்கு மேற்பட்ட பயங்கர ஆயுதங்களுடன் கூடிய ஆட்டோக் கள் மூலம் 9 மணி நேரம் முற்றுகையிடப்பட்டது.
- சேஷன் தங்கியிருந்த தாஜ் ஓட்டல் அடித்து நொறுக்கப்பட்டது.
- மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தின்மீது வன்முறை ஏவிவிடப்பட்டு அவரது கார் அடித்து நொறுக்கப்பட்டது.
- வழக்கு மன்றத்திற்கு வந்த சுப்பிரமணிய சுவாமிக்கு எதிராக ஆயிரக்கணக்கான பெண்கள் துணியைத்தூக்கி - திவ்ய தரிசனம் காட்டினார்கள்.
- கவர்னர் சென்னாரெட்டி - தனிமையில் இருக்கும்போது என்னிடம் தகாத முறையில் நடந்து கொண்டார் என்று சட்டமன்றத்திலேயே துணிந்து புளுகினார் ஜெயலலிதா.
- உயர்நீதிமன்ற நீதிபதியின் மருமகன் கஞ்சா விற்றதாக பொய் வழக்குப்போடப்பட்டது.
 - கவர்னர் சென்னாரெட்டியின் காரை - புதுச்சேரி செல்லும் சாலையில் மறித்து அடித்து நொறுக்கினார்கள்.
- அருணாசலம் என்கிற தாழ்த்தப்பட்ட வகுப்பினைச்சேர்ந்த மத்திய அமைச்சரை - ""நான் பயணம் செய்யும் விமானத்தில் வரக்கூடாது"" என்று கூறி விமானத்திலிருந்து இறக்கி விட்டார் ஜெயலலிதா.
- எம்.ஜி.ஆரின் விசுவாசத்துக்குரிய ஊழியரான முத்துவை கஞ்சா வழக்கில் கைது செய்து சிறையிலடைத்தார்.
 இப்படி சொல்லிக்கொண்ட போகலாம் அடுக்கடுக்காக! இவைகளைப் பட்டியலிட்டுக் காட்ட வேண்டிய அவசியம் என்ன என்பதுதான் அனைவரது கவனத்திற்கும் உரியது. எதையும் வன்முறை மூலம் சாதிக்கலாம். பொய், காலித்தனம் மூலம் ஆட்சியையே கவிழ்த்துவிடலாம் என்பது ஜெயலலிதாவின் நெடுநாள் நம்பிக்கை. அந்த அடிப்படையில்தான் எய்தவர் பதவியும் விரைவில் பறிக்கப்படும். என்று வாய்க்கொழுப்பு சேலையில் வடிய வடிய ஆணவத்துடன் அறிக்கை விட்டிருக்கிறார்.
 இந்தத்தீய எண்ணத்துடன்தான் அவர் கோவை - திருச்சி - மதுரை கூட்டங்களில் ‘தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு கெட்டுவிட்டது - என்று விஷமப் பிரச்சாரம் செய்தார். இதிலிருந்து அவரது நஞ்சு கலந்த நெஞ்சில் - தமிழகத்தில் சட்டம் ஒழுங்கை குலைக்கும் வரையில் வன்முறையைத் தூண்டிவிட ஏதோ ஒரு சூது நிழலாடிக் கொண்டிருக்கிறது. விரைவில் வன்முறை வெறியாட்டங்களைத்தூண்டிவிட்டு அதன்மூலம் சட்டம் ஒழுங்கு கெட்டுவிட்டது என்றுகூறி ஆட்சியையே கவிழ்த்துவிடலாம் - என்று அவர் நம்புகிறார் என்பது தெரிகிறது.
 நண்டு கொழுத்தால் வளையில் இருக்காது என்பார்கள்.
 மண்டை ரொம்பவும் கொழுத்து விட்டது ஜெயலலிதாவுக்கு.
 வெளியே வந்து விட்டார் விஷம் தோய்ந்த வஞ்சகத்திட்டங்களுடன்! அவரை ஆதரிக்கும் பார்ப்பன பேனாக்கள் எல்லாம் ""ஆகா, ஜெயலலிதாவின் திறமைதான் என்னே என்னே"" என்று வியந்து பாராட்டி எழுதலாம்; ஆனால் வல்லவனுக்கு வல்லவன் வையகத்தில் உண்டு. லட்சோபலட்சம் தி.மு.க.காரர்கள் ஜெயலலிதாவின் பேச்சையும் நடவடிக்கை களையும் கூர்ந்து கவனித்த படியேதான் இருக்கிறார்கள்.
அவர்களிடம் கேட்டால் என்ன சொல்லுவார்கள்
கொக்கென்று நினைத்தாயோ கொங்கணவா?
- என்று சவால் விடமாட்டார்களா என்ன?
                                                    - சின்னகுத்தூசி
                                                நன்றி:முரசொலி(23-11-2010)

No comments:

Post a Comment