Search This Blog

Wednesday 1 December 2010

வசிஷ்டர் வாயால் அருளிய ‘பிரும்மரிஷி’ப் பட்டம்!

மு.க.ஸ்டாலின்
நமது வாழ்நாளில் எத்தனை எத்தனையோ தலைவர்களின் பிறந்த நாள் - நினைவு நாளையொட்டி பல்வேறு பத்திரிகைகளும் வெளியிடும் மலர்களையும், சிறப்பிதழ் களையும் பார்த்திருக்கிறோம்; படித்திருக்கிறோம். அவைகளில் பெரும்பாலும் - அந்த மலர் அல்லது சிறப்பிதழின் கதாநாயகர் யாரோ அவரைப்பற்றிய கட்டுரைகளே இடம் பெற்றிருக்கும். ஆனால் அவர்களது வளர்ச்சிப் பாதையில் அவரோடு தோளோடு தோள் நின்று அவர்களது வளர்ச்சியிலும், தளர்ச்சியிலும் - கஷ்ட நஷ்டங்களிலும் உறுதுணையாக நின்றவர்கள் பற்றிய கட்டுரைகள் எதையும் காணமுடியாது.

இந்த விஷயத்தில் இந்தியா டுடே - ஸ்டாலின் சிறப்பிதழ் வித்தியாசமான கோலத்தில் காட்சியளிக்கிறது. ஸ்டாலின் மேயராக இருந்தபோதும், துணை முதல்வராக இன்று பணியாற்றும் இந்தக் காலகட்டத்திலும் ஸ்டாலின் கண்ட கனவுகள் நனவாகவும் அவர் தமது துறையில் பல்வேறு சாதனைகளைக் குவிக்கவும் அவருக்குப் பக்கபலமாக இருந்து பாடுபட்டவர்கள் நிர்வாகத்திறமை வாய்ந்த அதி காரிகளே, ஸ்டாலின் நினைப்பதை யெல்லாம் நூற்றுக்கு நூறு சில சமயங்களில் நூற்றுக்கு இருநூறு என்ற விகிதத்தில்கூட முழுமையாக நிறைவேற்றி வைப்பதில் அவர்களது நிர்வாகத்திறமைக்கு பெருமளவில் பங்குண்டு. ஸ்டாலினின் வெற்றிகள் தனி நபரின் வெற்றிகளல்ல, அது அவர் தேர்ந்தெடுத்த அதிகாரிகள் அணியின் கூட்டு முயற்சிக்குக் கிடைத்த வெற்றி என்பதை விளக்கி, ‘தளபதியின் தளகர்த்தர்கள்’ என்கிற தலைப்பில் கா.சு.துரையரசு எழுதிய ஓர் அருமையான கட்டுரையை வெளியிட்டதின் மூலம் - நமது அரசு அதிகாரிகள் எவ்வளவு ஆற்றல்மிக்கவர்கள் என்பதை பறைசாற்றி இருக்கிறது இந்தியா டுடே - சிறப்பிதழ்.
அந்தக் கட்டுரையிலிருந்து சில பகுதிகள் வருமாறு :-

இதனை இதனால் இவன்முடிக்கும் என்றாய்ந்து அதனை அவன்கண் விடல் - திருவள்ளுவர் தமிழக துணை முதல்வரும் உள்ளாட்சித்துறை அமைச்சருமான மு.க.ஸ்டாலின் தனக்குக் கீழே உள்ள அதிகாரிகள் அணியை உருவாக்கும் விதத்திற்கு இந்தக் குறள் பொருந்தும். மேயராக இருந்த காலத்திலேயே தன்னைச்சுற்றி திறமையான, நம்பகமான அதிகாரி களின் குழாம் ஒன்றை உருவாக்கி, வளர்ச்சியை சாத்தியமாக்கியவர் ஸ்டாலின். அப் போதைய துணை ஆணையரான பி.செந்தில்குமார், இன்று நகராட்சி நிர்வாகத்துறையில் இயக்குநராக அமர்த்தப்பட்டிருக்கிறார். அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த துறைகளை பெயர்த்தெடுத்து உருவாக்கப்பட்ட தனது அமைச்சகத்தை தன் பொறுப்பில் எடுத்துக் கொண்ட உடனேயே ஸ்டாலின் முதலில் தேடியது சிறந்த ஐ.ஏ.எஸ். அதிகாரிகளைத்தான். கே.தீனபந்து, அசோக்வர்தன் ஷெட்டி, கே.ரகுபதி, டி.உதயசந்திரன், ககன்தீப் சிங் பேடி என தற்போது ஸ்டாலினின் அணியில் இருக்கும் அதிகாரிகள் வெவ்வேறு இடங்களில் சிறப்பாக செயல்பட்டதன் அடிப்படையில் கொண்டுவரப் பட்டவர்களே.

இவர்களில் மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரியும் திறமையா னவர் என்று பெயரெடுத்தவருமான தீனபந்து, ஸ்டாலின் துணை முதல்வரான பிறகு அவரது முதன்மைச் செயலராக நியமிக் கப்பட்டார். நகராட்சி நிர்வாகத்துறை செயலாளராக 2 ஆண்டுகள் இருந்த இவர், இடையில் வருவாய்த்துறைக்குச் சென்றுவிட்டு தற்போது முதன்மைச்செயலாளராகப் பணி அமர்த்தப் பட்டிருக்கிறார். ஸ்டாலின் அணியின் அடுத்த முக்கிய நட்சத்திரமான அசோக்வர்தன் ஷெட்டி, தொடர்ச்சியாக ஊரக வளர்ச்சித் துறையின் பல்வேறு பதவிகளில் இருந்தவர். அவருக்கு ஊரக வளர்ச்சி இயக்குநர் பதவி அளிக்கப்பட்டது (தற்போது நகராட்சி நிர்வாகத்துறையின் முதன்மைச் செயலாளர்). கறார் தன்மையும், சிபாரிசுக்கு இடம் கொடுக்காத நடைமுறையும் ஷெட்டிக்கு கண்டிப் பானவர் என்ற பெயரை வாங்கிக் கொடுத்தது. துறைக்கு ஒதுக்கப்படும் நிதி சரியான முறையில் உள்ளாட்சி அமைப்புகளுக்குச் செல்கி றதா என்பது இவரின் கழுகுப்பார்வையிலிருந்து தப்பாது. லண்டன் பர்மிங்ஹாம் பல் கலைக்கழகத்தின் மேலாண்மையியல் பட்ட தாரியான ஷெட்டிதான் லண்டனில் பெற்ற பல்வேறு பயிற்சிகளையும் திறமைகளையும் இத்துறையில் பயன்படுத்துகிறார். இத்துறை யைச்சேர்ந்த ஊழியர்களுக்குப் பணியிடைப் பயிற்சி வழங்குவதன் மூலம் ஒட்டுமொத்த அதிகாரிகள் அணியின் திறமையை வளர்ப்பதில் இவர் பெரிதும் கவனம் செலுத் தினார்.

தமிழகத்தில் உள்ள ஊரக வளர்ச்சித்துறை பய்றி மையங்கள் மறுசீரமைப்பு செய்யப் பட்டிருப்பதில் ஷெட்டியின் பங்கு முக்கியத்துவம் வாய்ந்தது. அவரோடு ஊரக வளர்ச்சி இயக்குநராக இருந்த (தற்போது குடிநீர் வடிகால் வாரிய மேலாண் இயக்குநர்) ககன்தீப் சிங் பேடி அவருக்கு தோள் கொடுத்ததும் பல திட்டங் களை வெற்றித் திட்டங்களாக்கியது. குறிப்பாக அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சித் திட்டத்தின் வெற்றிக்கு ஸ்டாலினின் அணி கொடுத்த உந்து சக்தியே காரணம். இத்திட்டத்தின்படி தமிழகத்தில் உள்ள 12,618 ஊராட்சிகளுக்கும் தலா ரூ.20 லட்சம் வீதம் நிதி ஒதுக் கீடு செய்யப்படுகிறது. இந்தத் திட்டத்தின் கீழ் அனைத்து ஊராட்சி களிலும் தலா ஒன்று வீதம் முழு நேர நூலகங்கள் திறக்கப்பட்டு இருக்கின்றன. ஓய்வுபெற்ற அரசு ஊழியர்கள் இவற்றில் கௌரவ ஊதியத்தில் நூலகர்களாக நியமிக் கப்பட்டிருக்கிறார்கள். தமிழக கிராமங்களில் சமூக மோதல்கள் உருவாகப் பெரிதும் காரணமாக இருப்பவற்றுள் சுடுகாட்டுப் பிரச்சினை முக்கியப்பங்கு வகிக்கிறது. இதற்கும் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சித்திட்டம் ஒரு தீர்வை கண்டுள்ளது. ஒவ்வொரு கிராமத்திலும் எல்லா சமூகத்தினருக்கும் பொதுவான ஒரு நவீனமயானம் இத்திட்டத்தின் கீழ் உரு வாக்கப்பட்டு இருக்கிறது. அங்கு எரிமேடை, குடிநீர் வசதி, சிமென்ட் சாலை, தெரு விளக்கு என்று எல்லா வசதி களும் செய்து தரப்படுகின்றன.
இது தவிர ஒவ்வொரு ஊராட்சிக்கும் ஒரு ஊருணி (குளம்) வீதம் உருவாக்கித்தரப்படுகிறது. இதனால் அந்த ஊராட்சி முழுமைக்கும் குடிநீர் ஆதாரம் உறுதி செய்யப்படுகிறது. இது தவிர, பாரம்பரிய கிராமப்புறச் சந்தைகளை மேம்படுத்துதல், ஊராட்சி ஒன்றியப் பள்ளி களின் சீரமைப்பு முதலிய அடிப்படை வசதிகளை பூர்த்தி செய்யும் விதமாகவும் இத் திட்டங்கள் வடிவமைக்கப்பட்டிருக்கின்றன. இதுபோன்ற திட்டங்களின் வெற்றி தனி நபர்களின் வெற்றியல்ல. மாறாக, ஸ்டாலினின் தலைமையில் ஆர்வமுடன் செயலாற்றிய அணியின் வெற்றி. தற்போது ஷெட்டி, உதயசந்திரன், ககன் தீப் சிங் பேடி, இப்போது பதவி உயர்வின் மூலம் ஐ.ஏ.எஸ். அதிகாரியாக உயர்ந்திருக்கும் ரகுபதி (ஊரக வளர்ச்சித்துறை வரலாற்றிலேயே இப்போதுதான் இத்துறை அதிகாரி களுக்கு ஐ.ஏ.எஸ் அந்தஸ்து தரப்பட்டிருக்கிறது) ஆகி யோரின் கூட்டு முயற்சியையே பாராட்ட வேண்டும்.

கட்டுமானப்பணிகளையும் ஒப்பந்தக்காரர்களையும் மேற்பார்வையிடும் அதிகாரி களுக்கு, ஸ்டாலினின் அதிகாரிகள் அணி சுதந்திரமாக செயல்பட அதிகாரம் கொடுத் திருக்கிறது. ""எனக்கு டி.ஆர்.டி.ஏ.யைத் தெரியும், அரசுச் செயலாளரைத் தெரியும்"" என்று சொல்லிக் கொண்டு யாரும் எந்த ஊரக வளர்ச்சித் துறை அதிகாரியையும் நெருக்கடிக்கு உள்ளாக்க முடியாது. ஷெட்டி, பேடி, உதயசந்திரன், கே.கோபால் (தமிழ்நாடு மகளிர் நல மேம்பாட்டு நிறுவனத்தின் தற்போதைய மேலாண் இயக்குநர்) என்று,  அனைத்து அதிகாரிகளுமே பரிந்துரைக்கு இடம் கொடுக்காதவர்கள் என்று பெயர் எடுத் திருப்பது தான் இந்த வெற்றிக்குக் காரணம். அதே போல திட்டப் பணிகளின் படிப்படியான வளர்ச்சி நிலையை மதிப்பிட வாராந்தர திறனாய்வுக் கூட்டங்களை நடத்தும் வழக்கத்தை ஷெட்டி அறிமுகப்படுத்தி வைத் திருக்கிறார். இது பல்வேறு திட்டப்பணிகளின் வேகத்தை அதிகமாக்க உதவியிருக் கிறது. அதிகம் கண்டு கொள்ளப்படாத, ஒப்பந்தக் காரர்களுக்கு மட்டுமே பரிச்சயமாக இருந்த உள்ளாட்சித்துறையை புரஃபஷனலாக மாற்றியதில் ஸ்டாலினின் இந்த அதிகாரி கள் படைக்கு பெரும் பங்குண்டு.

துணை முதல்வரின் துறைக்காக தேர்ந்தெடுக்கப்படும் அதிகாரிகளின் நேர்த்தியான பார்வை, அவர்களின் தொழில் நேர்த்தி, வேலையில் அவர்கள் காட்டும் அர்ப்பணிப்பு முதலானவை தமிழக அரசு நிர்வாகத்தின் மற்ற துறைகளுக்கும் நீட்டிக்கப்படுமானால் அது ஒட்டுமொத்த தமிழகத்தின் நல்லாட்சிக்கான ஆரம்பமாக இருக்கும். - என்று எழுதியிருப்பதின் மூலம் - ஸ்டாலின் மட் டுமா? அவர் தேர்வு செய்து கொள்ளும் அதிகாரிகளும் நிர்வாகத்திறமை வாய்ந்தவர்கள் தான் என்பதை எடுத்துக் காட்டியிருக் கிறார் சு.துரையரசு. ம்ம்ம் தலைசிறந்த நிர்வாகிகள் துணையுடன் பதவிக்கு வந்த குறுகிய காலத்தில் - ஸ்டாலின் தமது துறைகளில் குவித்த சாதனைகள் என்னென்ன என்று தகுந்த ஆதாரங்களுடன் ""ஸ்டாலின் கண்ட கனவு"" என்ற தலைப்பில் லட்சுமி சுப்பிரமணியன், ஸ்டாலினின் மகத்தான சாதனைகளைப்பட்டியலிட்டிருக்கிறார்.


அதிலிருந்து சில பகுதிகள் வருமாறு:- தமிழகத்தில் முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு பெண்களின், அதிலும் குறிப்பாக சிற்றூர்களிலும் கிராமங்களிலும் மகளிரின் வாழ்வாதார நிலையும் பொருளாதார நிலையும் மேம்பட்டு வருகின்றன.  துணை முதல்வரின் பெருமுயற்சியாலும் முனைப்பினாலும் முன்னேற்றப்பாதையில் சென்று கொண்டிருக்கும் மகளிர் சுய உதவிக்குழுத்திட்டமே அதற்குக் காரணம். கடந்த 2006ஆம் ஆண்டில் ஸ்டாலின் உள்ளாட்சித் துறை அமைச்சராக பொறுப் பேற்றதும் உடனடியாக நிறைவேற்ற நினைத்தது இரண்டு காரியங்களை : ஒன்று கிராம வளர்ச்சி, மற்றொன்று பெண்களின் மேம்பாடு. கடந்த நான்கு வருடங்களில் 1.59 லட்சம் புதிய மகளிர் சுயஉதவிக் குழுக்கள் ஏற்படுத்தப் பட்டுள்ளன. இந்த புதுக்குழுக்களில் உள்ள பெண் உறுப்பினர்களின் எண்ணிக்கை 23.95 லட்சம், 1989ல் துவங்கிய இந்த மகளிர் சுயஉதவிக்குழுத்திட்டத்தின் வளர்ச்சி கடந்த நான்கு வருடங்களில் உச்சத்தை எட்டி வருகிறது. தற்போது தமிழகத்தில் மொத்தம் 4.74 லட்சம் மகளிர் சுயஉதவிக் குழுக்களும் அதில் 73.60 இலட்சம் பெண்கள் உறுப்பி னர்களும் இருக்கிறார்கள். இவர் களின் மூலம் வங்கிகளில் சுமார் ரூ.2,568 கோடி சேமிக் கப்பட்டிருக்கிறது. 2006ல் ஸ்டாலின் பொறுப்பேற்றவுடன் முதலில் இந்த சுய உதவிக் குழுக்களுக்கான சுழல் நிதியை விரைந்து கொடுக்கவும் ரூ.15,000த்திலிருந்து ரூ.50,000 மாக அதிகரித்துக் கொடுக்கவும் ஏற்பாடு செய்தார். பொறுப்பேற்ற குறுகிய காலத்திற்குள் இதற்கென அரசு, வங்கி அதிகாரிகளுடன் பல கட்ட ஆய்வுக்கூட்டங்களை நடத்தச்செய்து, வங்கி அதிகாரிகளை இதற்கு இணங்க வைத்தது ஸ்டாலினின் துடிப்பான செயல்பாட்டிற்கு சாட்சி. இதனால் சுயஉதவிக் குழுக்களுக்கு முன்பு இருந்ததைவிட அதிக அளவில் கடன் கொடுக்க வங்கிகளும் முன் வந்தன. ஆனால் இந்த வெற்றியோடு இந்தத் திட்டம் நின்று விடக்கூடாது என்பதில் முனைப்போடு இருந்தார் துணை முதல்வர். அதனால் 2007 வரை வெறும் ரூ.593 கோடியாக இருந்த சுயஉதவிக்குழுக்களுக்கு கொடுக்கப்பட்ட கடன் தொகையை 2010ல் ரூ.2,791 கோடி யாக எட்டச்செய்திருக்கிறார். இதைத் தொடர்ந்து இப்போது பஞ்சாயத்து அளவிலான கூட்டமைப்புகளை உருவாக்கி, அதன்மூலம் சுயஉதவிக் குழுக்களுக்கு இன்னும் அதிக உதவிகள் கிடைக்க வழி செய்திருக்கிறார் ஸ்டாலின்.

தற்போது தமிழகத்தில் உள்ள 12,618 கிராமங்களில் ஏறத்தாழ 4000 கிராமங்களில் இந்தக் கூட்டமைப்புகள் துடிப்புடன் செயலாற்றி வருகின்றன. இதன்மூலம் பெண்களும் அவர்கள் வசிக்கும் கிராமங்களும் பொருளாதாரத்தில் புத்துயிர் பெற்று வருகின்றன. தொழில் செய்வதற்கு மட்டும் கடன் வசதி இருந்த நிலை மாறி, இப்போது இந்தப் பெண்களின் தனிப்பட்ட தேவைகளுக்கும் கடன் பெறும் வசதியையும் உருவாக்கி இருக்கிறது தமிழக உள்ளாட்சித்துறை. தனிப்பட்ட செலவுகளுக்காக கந்து வட்டிக்காரர்களின் மீட்டர் வட்டிச் சூழலில் ஏழைக்குடும்பங்கள் சிக்குவது இதன்மூலம் தடுக்கப்படுகிறது. வழக்கமான அரசு அலுவலர்களைப்போல காலையில் குஷன் சேரில் அமர்ந்து அதை ஒரு நாள் தேய்த்துவிட்டு, மாலை ஆஃபிஸ் விட்டாச்சு என்று கிளம்புகிற அமைச்சர்களே தமிழகத்தில் அதிகம். தனது துறையின்கீழ் என்ன செய்யலாம் என்ற சிந்தனையே இல்லாமல், ஏதாவது பிரச்சினைகள் ஏற்படும்போது அதற்கு எதிர் வினை யாற்றினால் போதும் என்று நினைக்கும் ரகத்தினரே அதிகம். இவர்களுக்கு மத்தியில் சமூகத்தின் முக்கிய மான தேவைகள் என்ன, அவற்றை நிறைவேற்ற என் னென்ன திட்டங்களுக்கு முக்கியத்துவம் தர வேண்டும் என்று யோசித்து செயல்படுகிறவர் ஸ்டாலின். இத்தகைய ஈடுபாட்டால் தனது கனவுத் திட்டங்கள் எவ்வாறு நிறை வேற்றப்படுகின்றன என்று அதிகாரிகளிடம் அவ்வப் போது கேள்வி கேட்பதை வழக்கமாகக் கொண்டவர் ஸ்டாலின். ஸ்டாலினின் முக்கியத்துவம் பெற்ற திட்டங்களில் சமீபத்தில் சேர்ந்திருப்பது ‘குடிசை களில்லா மாநிலம்’ என்ற கனவு. கலைஞர் வீட்டு வசதித்திட்டத்தின்மூலம், 2016 ஆம் ஆண்டுக்குள் தமிழகத்தின் ஒரு பிரஜைகூட குடிசையில் வாழும் நிலை இருக்கக்கூடாது என்பதே இத்திட்டத்தின் நோக்கம். முதற்கட்டமாக இந்த வருடம் ரூ.1800 கோடியில் 3 லட்சம் குடிசைகள் கான்கிரீட் வீடு களாக மாறும். கேண்டீனிலும் அரட்டைக்கச்சேரியிலும் ஊதியக்குழு சிபாரிசுகளால் தங்களுக்கு எவ்வளவு லாபம் என்ற கணக்குகளிலும் தங்கள் அலுவல் நேரத்தை அதிகம் செலவிடும் அரசு அதிகாரிகள், ஊழியர்கள் மத்தியில் உள்ளாட்சித்துறை இரவிலும் வார விடுமுறை களிலும் கூட வேலை பார்க்கிறது. இது வெறுமனே அதிகாரிகளுக்கு பயந்து நடக்கும் காரியமாகத் தெரியவில்லை. ஸ்டாலினில் தொடங்கும் சமூக அக்கறை, துறைத்தலைவர்கள் முதல் கீழ்மட்ட ஊழியர்கள் வரை பரவுகிறது. இந்த அமைச்சகத்தின்கீழ் செயல்படும் சுமார் ஒரு டஜன் துறைகளில் மூன்றில் ஒரு பங்கு ஊழியர் களாவது வாங்கும் சம்பளத்தை விட கூடுதலாக உழைக்கிறார்கள் என்று கூறலாம்.

ஸ்டாலினின் கனவுத்திட்டங்கள் துரிதமாக நிறை வேற்றப்படுவதற்கு அதிகாரிகளையும் ஊழியர்களையும் இவ்வாறு சிறப்பாக செயல்பட வைப்பதும் ஒருகாரணம். ""அதிகாரிகள் இவர் துறைகளில் பணியாற்ற வரும் போது உங்களிடம் பணியாற்றுவது பெருமை, பாக்கியம் என்று மகிழ்ந்து சொல்லும் அளவுக்கு துணை முதல்வர், அவர்களை சிறப்பாக கையாள்கிறார்"" சட்டத்திற்கு புறம்பாக அதிகாரிகளிடத்தில் ஸ்டாலின் எதையும் செய்யச்சொல்வதும் இல்லை, சட்டப்படியான பணிகள் நடைபெறுவதில் குறுக்கிடுவதும் இல்லை என்று சொல்லப்படுகிறது. - என்று ஸ்டாலினின் நிர்வாகத்திறமை - சாதனைகளைப்பட்டியலிட்டிருக்கும் லட்சுமி சுப்பிரமணியத்தின் கட்டுரையிலும் அதிகாரி களின் செயல்பாடுகள் முக்கிய இடம் பெற்றிருக் கின்றன! ம்ம்ம் தமது துறையின்கீழ் செயல்படும் அதிகாரிகள் மீது யாராவது வேண்டுமென்றே பொய்ப் புகார் கூறினால் துணை முதல்வர் அவற்றினை எப்படி அணுகுவார் என்பதை எடுத்துக் காட்ட இரண்டு நிகழ்வுகளை சுட்டிக்காட்டியிருக்கிறார், அவரது மக்கள் தொடர்பு அலு வலரான ம.அரிகிருஷ்ணன். - தனது ‘ஓயாது உழைக்கும் இளையசூரியன்’ என்ற கட்டுரையில் சுட்டிக்காட்டி இருக்கிறார். ""ஒரு மாவட்ட ஆட்சியர், பரிந்துரைகளைச்செய்து கொடுப்பதில்லை எனப்புகாராக அவரிடம் கூறப்பட்டபோது தளபதி சொன்னார் ""அந்த மாவட்ட ஆட்சியர் முதலமைச்சரே சொன்னாலும், நியாயமாக இருந்தால் மட்டுமே அதை செய்வார்."" அந்தத் தருணத்தில் அவரது நியாய உணர்வு என்னை பூரிக்க வைத்தது"". பிறரை எடை போட்டுப்பார்க்கும் திறமையையும் அவரிடம் கண்டு வியந்திருக்கிறோம். ஒரு மாவட்ட ஆட்சியர் சமத்துவபுரம் வீடு ஒதுக்கீடு செய்வதில் தன்னிச்சையாக நடந்து கொள்கிறார் என்று ஒரு பிரமுகர் புகார் கூறினார். துணை முதல்வர் அவர்கள் சொன்னார்கள் ""உங்கள் பரிந்துரையை அவர் ஏற்காததால் குற்றம் சுமத்துகின்றீர்கள் என எண்ணுகிறேன். அந்த ஒதுக்கீட்டில் தவறே செய்ய முடியாது. அந்த அளவிற்கு ஒதுக்கீடு செய்வதில் விதிமுறைகளை வகுத்துக்கொடுக்கிறோம்"" என்று உறுதிபடக் கூறினார். - என்கிறார் அவர்.

ஆக இதன் மூலமும் ஸ்டாலின் நிர்வாகத் திறமையும் - அவர் அதிகாரிகளிடம் வைத் திருக்கும் அசைக்க முடியாத நம்பிக்கையும் பளிச்சிடுகின்றன. ம்ம்ம் இந்தச் சிறப்பிதழில் - துணை முதல்வர் ஸ்டாலி னின் குறித்து தி.மு.கழகத்தின் பொதுச் செயலாளரும் தமிழக அரசின் நிதியமைச்சருமான இனமானப் பேராசிரியர் அவர்கள் ‘பெயர் சொல்லும் பிள்ளை’ என்ற தலைப்பில் எழுதியுள்ள சிறப்புக் கட்டுரை - வெறும் கட்டுரை அல்ல - கழக வரலாற்றில் ஸ்டாலின் பங்கும் பணியும் - அவரது எதிர்காலம் எப்படி அமையும் என்பது பற்றியும் செதுக் கப்பட்ட கல்வெட்டு சாசனம் ஆகும். அவர் கூறுகிறார் :- ""25 ஆண்டு காலம். கலைஞர் முதல் அமைச்சராகி தமிழ்நாட்டிலே ஒரு நிலையான இயக்கமாக திராவிட முன்னேற்றக்கழகத்தை நிலைநிறுத்தி, எதிர்க்கட்சியாக வாழ வைத்து, இந்த சமுதாயத்துக்கு போராடக்கூடிய ஆற்றல்மிக்க அமைப்பாக இதைக்காப் பாற்றினார். 25 ஆண்டு காலத்தில் ஸ்டாலினும் ஒரு பெரிய வளர்ச்சி பெற்று இந்த இயக்கத்தின் சார்பாக போராடக்கூடிய அளவிற்கு ஒரு பெரும் படையின் தளபதியாக உருவாகி இருக்கும் இந்த நேரத்தில், அவரை வாழ்த்துவதற்கு அவர் வெற்றி பெறவேண் டும். வேறு யாராவது இதைவிட ஆற்றல்மிக்க தம்பி, ஆற்றல்மிக்க போராட்ட வீரர், ஆற்ற லோடு செயல் படக்கூடியவர், அனைவரையும் அரவணைத்துச்செல்லக்கூடியவர், சமுதாயத்தோடு இரண்டறக் கலந்து விடுகின்ற அந்த மனப்போக்கு கொண்ட தம்பி ஸ்ட hலினைப் போல இன்னொருவர் இருப்பதாகத்தெரியவில்லை. ஒரு குறிப்பிட்ட செயலுக்கு ஒரு இயக்கத்தை வழிநடத்த கலைஞர் பெயரைச்சொல்லுகிற வர்கள், அடுத்து யார் பெயரைச்சொல்வார்கள் என்று எண்ணிப் பார்க்கிற போது திராவிட முன் னேற்றக் கழகம் ஸ்டாலினால் தொடர்ந்து காப்பாற்றப்படும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது.

 இந்த இயக்கத்திற்கு தொடர்ந்து மக்களுக்கு பணியாற்றக்கூடிய வல்லமை இருக்க வேண்டுமானால், ஸ்டாலின் கையிலே ஒப்படைக்கப்பட்ட அந்த வாள் என்றைக்கும் வெற்றிகரமான வாளாக இருக்க வேண்டுமானால், இன்னும் குறிப்பாக ஒரே வார்த்தையில் சொல்ல வேண்டுமானால், இந்த சமுதாயம் சொரணையுள்ள சமுதாயமாக இருக்க வேண்டுமானால் ஸ்டாலினைப் போன்ற வர்கள் வரவேண்டும். எனக்கு ஏதோ ஸ்டாலின் இடத்திலே தனிப்பட்ட பற்று பாசம் என்று கருத வேண்டாம். நான் தனிப்பட்ட முறையில் யாரிடமும் பற்று பாசம் வைப்பதில்லை. இன்னும் சொல்லப் போனால் கலைஞர் வாய் திறந்து அடையாளம் காட்ட முடியாத காரணத்தால் நான் அவர் சார்பாக நான் வாய் திறந்து அடையாளம் காட்டுகிறேன்."" - என்று ஸ்டாலினை - கழக உடன்பிறப்புகளுக்கும் தமிழகப்பொது மக்களுக்கும் அடையாளம் காட்டி இருக்கிறார். இதை விடப் பெரிய நற்சான்று வேறு என்ன இருக்க முடியும்?

வசிஷ்டர் வாயால் பிரம்மரிஷிப் பட்டம் வாங்கியது போல என்பார்களே; அதுதானே இது?

No comments:

Post a Comment