Search This Blog

Thursday 20 January 2011

நுழைவுத்தேர்வு: ஜெயலலிதாவின் அற்ப ஆயுசுக் குற்றச்சாட்டுக்கு கபில்சிபல் கொடுத்த மரண அடி!


மருத்துவப் படிப்பில் சேர அகில இந்திய அளவிலான பொது நுழைவுத் தேர்வை தடுக்க கருணாநிதி என்ன செய்யப் போகிறார்? என்று ஜெயலலிதா ஓர் அறிக்கையின் மூலம் வழக்கம்போல் தனக்குத்தான் எல்லாம் தெரியும் என்கிற பாணியில் கேள்வி எழுப்பி உள்ளார். 2011 - 2012ம் கல்வி ஆண்டில் இருந்து மருத்துவப் படிப்புகளுக்கு அகில இந்திய அளவில் நுழைவுத் தேர்வை நடத்த இந்திய மருத்துவக் கவுன்சிலுக்கு உச்சநீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. இதை தடுத்து நிறுத்த முதல்வர் கருணாநிதி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கடந்த மாதம் வலியுறுத்தி இருந்தேன். நுழைவுத்தேர்வு குறித்து எல்லா மாநிலங் களுடனும் மருத்துவக் கல்வியாளர்களுடனும் விரிவாக விவாதித்து இறுதி முடிவு எடுக்கப் படும் என்று மத்திய மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் தன்னிடம் தெரிவித்ததாக அப்போது கருணாநிதி கூறினார்.
நுழைவுத் தேர்வின் வரைவு விதிகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து 22.11.2010 அன்று மத்திய அரசுக்கு தமிழக அரசின் கருத்து அனுப்பப் பட்டு விட்டது எனவும் குறிப்பிட்டார். வரும் 2011 - 2012 கல்வியாண்டில் இப் போது உள்ள நிலையிலேயே தொடர்வதற்கு தமிழக அரசு அனைத்து விதமான நட வடிக்கைகளையும் மேற்கொண்டுள்ளது எனவும் எனக்கு பதிலளிக் கும் விதத்தில் கருணாநிதி கூறியிருந்தார். மேலும் எதையும் புரிந்து கொண்டு பேச வேண்டும் என்றும் கருணாநிதி தெரிவித்திருந் தார். புரிந்து கொண்டு யார் பேசியது, புரியாமல் யார் பேசியது என்பது இப்போது வெட்ட வெளிச்சமாகிவிட்டது. எம்.பி.பி.எஸ். மருத்துவப் படிப்புகளில் இனி சேர வேண்டுமானால் மாணவர்கள் தேசிய அளவில் நடத்தப்படும் தகுதி நுழைவுத் தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என்று இந்திய மருத்துவக் கவுன்சில் விதிமுறைகளில் திருத்தம் கொண்டு வரப்பட்டு இது இந்திய அரசு இதழிலும் வெளியிடப்பட்டு விட்டது. இதே முறைதான் முதுநிலை மருத்துவப் படிப்புக்கும் கடைப் பிடிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதுதான் கருணாநிதி தலைமையிலான தி.மு.க. அரசு எடுத்த நடவடிக்கை. - என்பதாக கலைஞர் மீது நாள் தவறாமல் ஏதாவது ஒரு குற்றச்சாட்டைக் கூற வேண்டும் என்கிற தீய நோக்கத்துடன் நாள் தவறாமல் அறிக்கைகளை வெளியிட்டப் படியே இருக் கும் ஜெயலலிதாவின் ஜனவரி 4 செவ்வாய்க் கிழமை வெளியிட்ட குற்றச் சாட்டு ஆகும். இப்போதெல்லாம் ஜெயலலிதாவின் குற்றச் சாட்டுகள் கெட்டிக்காரன் புளுகு 8 நாட்களில் அம்பலமாகி விடும்என்பதைப் போல கூட இல்லாமல் ஒரே நாளில் அற்ப ஆயுளில் முடிந்து விடும் குற்றச்சாட்டாகவே அமைந்திருக்கின்றன. ஜெயலலிதாவின் மருத்துவக் கல்வி தொடர்பான இந்தக் குற்றச்சாட்டும் 24 மணி நேரத்தில் பாதாள குழிக்குப் போய் விட்டது. ஜெயலலிதா 3ம் தேதி வெளியிட்ட இந்த குற்றச்சாட்டு மறுநாள் 4ம் தேதியே மரணித்து விட்டது. 
திருச்சியில் ஐ.எம். அடிக்கல் நாட்டு விழாவில் பேசிய மத்திய மனித வள மேம்பாட்டுத் துறை அமைச்சர் கபில்சிபல் ஜெயலலிதாவின் குற்றச்சாட்டுக்கு மரண அடி கொடுத்து பேசியிருக்கிறார். அது வருமாறு :- அகில இந்திய அளவில் மருத்துவப் படிப்புக்கு பொது நுழைவுத் தேர்வு நடத்துவது தொடர்பாக, இந்திய மருத்துவக் கவுன்சில் அறிக்கை வெளியிட்டு இருந்தது. அந்த அறிக்கை செல்லாது என்று மத்திய சுகாதார அமைச்சகம் அறிவித்துள் ளது. எனவே, அந்த அறிக்கையை வாபஸ் பெறுமாறு நான் இந்திய மருத்துவக் கவுன்சிலுக்கு உத்தர விட்டுள்ளேன். மருத்துவ பொது நுழைவுத்தேர்வு பிரச்சினையில் மாநிலங்களுக்கிடையே வேறுபட்ட கருத்து நிலவுகிறது. இந்த விவகாரம் தொடர்பாக மாநில அரசுகளின் கருத்துக்களை கேட்க டெல்லியில் வருகிற 11-ம் தேதி முதல் 13ந் தேதி வரை ஆலோசனைக் கூட்டம் நடக்கிறது. அதில் மாநில அரசுகளின் கருத்துக்களை கேட்ட பிறகே இவ்விவகாரத் தில் இறுதி முடிவு எடுக்கப்படும். - என்பதே கபில்சிபல் ஜெயலலிதாவின் குற்றச்சாட்டுக்கு கொடுத்த மரண அடி ஆகும். அதுமட்டுமின்றி -  இன்னொரு செய்தியும் இன்றைய ஏடுகளில் வெளிவந்திருக்கிறது.  
அது வருமாறு :- மருத்துவப் படிப்பில் (எம்.பி.பி.எஸ்.) சேருவதற்கு நாடு தழுவிய அளவில் பொது நுழைவுத் தேர்வு நடத்த அகில இந்திய மருத்துவக் கவுன்சில் முடிவு செய்தது. அதன் கொள்கை முடிவில் தலையிட முடியாது என உச்சநீதி மன்றம் தெரிவித்ததால், பல்வேறு மாநில அரசுகள் மற்றும் அரசியல் கட்சிகளின் எதிர்ப்பையும் மீறி நுழைவுத் தேர்வுக்கான அறிவிப்பை மருத்துவக் கவுன்சில் வெளி யிட்டது. இதனால், எம்.பி.பி.எஸ். மற்றும் மருத்துவ முதுநிலைப் படிப்புகளுக்கு 2011 - 12 கல்வி ஆண்டு முதல் நாடு தழுவிய பொது நுழைவுத் தேர்வு நடத்த முடிவு செய்தது. இந்த நிலையில், அகில இந்திய மருத்துவக் கவுன்சில் முடிவை வாபஸ் பெறுமாறு மத்திய சுகாதாரத்துறை உத்தர விட்டுள்ளது. இதுதொடர்பாக, அகில இந்திய மருத்துவக் கவுன்சில் தலைவருக்கு மத்திய சுகாதார அமைச்சக துணைச் செயலாளர் சுபே சிங், கடந்த 3ந் தேதி அன்று கடிதம் அனுப்பியுள்ளார்.  அதில் கூறப்பட்டுள்ளதாவது :- இந்திய மருத்துவக் கவுன்சில் சட்டம் 1956, பிரிவு 33-ன் படி, விதிமுறைகளை வகுக்கும் முன்பாக மத்திய அரசின் ஒப்புதலைப் பெற வேண்டும். ஆனால், மருத்துவப் பட்டப்படிப்பு விதி 1997 மற்றும் முதுநிலை மருத்துவ படிப்பு விதி 2000 ஆகியவற்றை மருத்துவக் கவுன்சில் உறுப்பினர்கள் (கவர்னர்கள்) திருத்தம் செய்துள்ளனர். மத்திய அரசிடம் முன்கூட்டியே ஒப்புதல் பெறாமலேயே மருத்துவ படிப்பு மற்றும் முதுநிலை மருத்துவ படிப்புகளுக்கு பொது நுழைவுத் தேர்வு நடத்தப்படும் என அறிவிக் கப்பட்டு இருக்கிறது. இந்த அறிவிப்பை வெளியிடுவதற்கு முன் மத்திய அரசிடம் முன் அனுமதி பெறப்படவில்லை. எனவே, இந்த அறிவிப்பு செல்லாது.  மேற்கூறிய காரணத்தால், பொது நுழைவுத் தேர்வு நடத்துவதற்காக மருத்துவக் கவுன்சி லால் மேற்கொள்ளப்பட்ட திருத்த சட்டத்தை உடனடியாக வாபஸ் பெற வேண்டும். நுழைவுத் தேர்வு அறிவிப்பு வாபஸ் பெறப்பட்ட தகவலை சுகாதார அமைச்சகத்துக்கு உடனடியாக தெரிவிக்க வேண்டும். இவ்வாறு உத்தரவில் கூறப்பட்டுள்ளது. - என்பதே அந்தச் செய்தி. அதுமட்டுமா? புதுச்சேரியில் நிருபர்களுக்கு பேட்டியளித்த மத்திய மந்திரி நாராயணசாமி அவர்களும் ""மருத்துவப் பொது நுழைவுத் தேர்வு தொடர்பாக பல மாநிலங்களில் எதிர்ப்பு ஏற்பட்டு இருக்கிறது. எனவே, நுழைவுத் தேர்வில் நல்ல முடிவு எடுக்க வேண்டும் "" என்று குறிப்பிட்டுள்ளார். ஆக 3-ம் தேதியன்று ஜெயலலிதா சுமத்திய குற்றச்சாட்டு 4ம் தேதியே அற்ப ஆயுள் குற்றச்சாட்டாக மாறி மரண மடைந்துவிட்டது.

நன்றி : முரசொலி 07-01-2011    

நீதிபதி ஸ்ரீகிருஷ்ணா அறிக்கையும், அமைச்சர் சிதம்பரத்தின் வேண்டுகோளும்!


ஆந்திராவை இரண்டாகப் பிரித்து தனித் தெலுங்கானா மாநிலம் பிரிக்க வேண்டும் என்று நீண்ட காலமாக - ஏறத்தாழ 30 ஆண்டுகளுக்கும் மேலாக - ஆந்திரத்தில் பல்வேறு கட்சிகளும் பல்வேறு போராட்டங்களை நடத்தி வந்திருக்கின்றன. இந்தப் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வுகாண வேண்டும் என்று மத்திய அரசு, உச்சநீதி மன்றத்தின் முன்னாள் நீதிபதி ஸ்ரீகிருஷ்ணா தலைமையில் ஐந்து பேர் கொண்ட கமிட்டியை கடந்த பிப்ரவரி மாதம் 3-ஆம் தேதி அமைத்தது. அந்தக் கமிட்டி ஆந்திரா முழுவதும் சுற்றுப்பயணம் செய்து 11 மாதங்களாக பல்வேறு தரப்பினரிடமும் கருத்து களைக் கேட்டு ஆய்வு நடத்தியது.

கடந்த டிசம்பர் 30-ம் தேதிஅன்று மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரத்திடம் இரண்டு பகுதிகள் கொண்ட 461 பக்க அறிக்கையைக் கொடுத்தது.  அந்த அறிக்கையை 6.1.2011 வியாழன்று விவாதிப்பதற்காக ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த அங்கீகரிக்கப்பட்ட அனைத்துக் கட்சிகளுக்கும் அழைப்பு விடுத்து டெல்லியில் ப. சிதம்பரம் கூட்டம் நடத்தினார். இதில் ஆந்திர மாநில முதல்வர் கிரண்குமார் ரெட்டி மற்றும் காங்கிரஸ், பிரஜா ராஜ்யம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், மஜ்லிஸ் கட்சி ஆகியவற்றின் பிரதிநிதி கள் கலந்து கொண்டார்கள். ஆனால் தெலுங்கு தேசம், தெலுங்கானா ராஷ்டிர சமிதி, பாரதிய ஜனதா ஆகிய கட்சிகள் இந்தக் கூட்டத்தில் கலந்து கொள்ளாமல் புறக்கணிப்புச் செய்துவிட்டன. நீதிபதி கிருஷ்ணா தமது பரிந்துரைகளை ஒரு தலைப்பட்சமாக எல்லோர் மீதும் திணிக்க முயலாமல் எல்லாத் தரப்பினரும் தம்மிடம் தெரிவித்துக் கருத்துக்களை எல்லாம் மிகுந்த பொறுப்புணர்வுடன் ஆய்வு செய்து அனைத்துத் தரப்பினரும் கூறிய கருத்துக்கள் உள்ள டங்கிய ஒரு நடுநிலை மிகுந்த அறிக்கையை அளித்து இருக்கிறார்.
அந்த அறிக்கையில் எடுத்த எடுப்பில் அவர் தமது கருத்து என்ன என்பதையும் அழுத்தம் திருத்தமாகத் திட்ட வட்டமாகக் குறிப்பிட்டு இருக்கிறார். ஆந்திராவை ஆந்திரம் என்றும், தெலுங்கானா என்றும் பிரிக்கத் தேவையில்லை. அது மாநிலத்தின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்கு உகந்ததும் அல்ல. இப்போது இருப்பது போல ஆந்திரா பிரிக்கப்படாத ஒரே மாநிலமாகத் தொடர்ந்து நீடிப்பதே நல்லது என்று அவர் தமது சொந்தக் கருத்தை ஒளிவு மறைவுக்கு இடமில்லாமல் உறுதிபடத் தெரிவித்திருக்கிறார். அதன்பிறகு அவர் இந்தப் பிரச்சினைக்குத் தீர்வு காண 6 தனித்தனி வழிகள் உள்ளன. அந்த ஆறு வழிகளையும் ஆராய்ந்து பார்த்து எது நல்ல வழியோ அதனை ஆந்திர மாநிலத்தின் அனைத்துத் தரப்பினரும் ஒற்றுமையுடன் தேர்வு செய்து அமல் நடத்துவதன் மூலம் இந்த பிரச்சினைக்கு தீர்வு காணலாம். அதுமட்டுமின்றி தாம் தெரிவித்த 6 யோசனைகளில் 3 யோசனைகள் எல்லோராலும் ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது என்பதையும் அவர் ஒப்புக் கொண்டு, மீதமுள்ள 3 யோசனை களில் ஒன்றை பிரச்சினைக்குத் தீர்வாக ஏற்றுக் கொள்ள வேண்டும் என்றும் கோரி யிருக்கிறார்.

இனி நீதிபதி கிருஷ்ணா கூறிய 6 வழிகள் என்னென்ன என்பதைப் பரிசீலிக்கலாம்.
 1) ஆந்திரம் இப்படியே நீடிப்பதே சிறந்தது: ஆந்திர மாநிலம் பிரிக்கப்படாமல் இப்படியே நீடிப்பதே அதன் தெலுங்கானா, ராயல சீமை, கடலோர மாவட்டங்களின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்கு நல்லது. தெலுங்கானா பகுதியின் வளர்ச்சிக்கு சட்டப்பூர்வ பிராந்திய கவுன்சில் போன்ற அமைப்பை ஏற்படுத்தி வளர்ச்சித் திட்டங்களைத் தீட்டுவது, நிறை வேற்றுவது, நிர்வகிப்பது போன்ற நடவடிக்கைகள் மூலம் பின்தங்கிய நிலைமையை மாற்ற முடியும். ஆந்திரத்தை ‘‘முன்னேற்ற இதுவே சிறந்த வழி"".
 2) வேறு வழியே இல்லை என்றால் ஆந்திர மாநிலத்தை (ராயல) சீமா ஆந்திரா, தெலுங் கானா என்று இரு தனித்தனி மாநிலங்களாகப் பிரித்து விடலாம். இதனால் தனி மாநில கோரிக்கையைப் பூர்த்தி செய்தோம் என்ற சாதனை மட்டுமே மிஞ்சும். சமூக, பொரு ளாதார ரீதியாக பின் தங்கிய நிலைமை இந்த ஒரு நடவடிக்கையாலேயே மாறிவிடாது.
 3) (ராயல) சீமா ஆந்திரத்தையும் தெலுங்கானாவையும் பிரித்து விட்டு இரு மாநிலப் பகுதிகளுக்கும் தனித்தனி தலைநகரங்களை உருவாக்க அல்லது தேர்வு செய்யச் சொல்லலாம். ஹைதராபாத் நகரம் இப்போது தகவல் தொழில் நுட்பக் கேந்திரமாக உருவெடுத்தி ருப்பதாலும் ஆந்திரத்தின் அனைத்துப் பகுதி மக்களுடன் பிற மாநிலத்தவர்களும் கணிசமாகக் குடியேறியிருப்பதாலும் வெளிநாட்டு நிறு வனங்கள் உள்பட ஏராளமான நிறுவனங்கள் கோடிக் கணக்கான ரூபாய்களை இங்கு முதலீடு செய்திருப்பதாலும், தகவல் தொழில்நுட்ப வளர்ச்சிக்குத் தேவையான எல்லா அடித்தள கட்டமைப்புகளும் இங்கு இருப்பதாலும் ஹைதராபாத்தை மட்டும் மத்திய ஆட்சிக்குட்பட்ட பகுதியாக (யூனியன் பிரதேசமாக) அறிவித்து விடலாம். அதன் நிர்வாகத்தை, பாதுகாப்பை மத்திய அரசு நேரடியாகத் தன் பொறுப்பில் எடுத்துக் கொண்டு விடலாம்.
4) (ராயல) சீமா ஆந்திரா, தெலுங்கானா என்ற இரு பகுதிகளைப் பிரித்துவிடலாம். ஹைதராபாத் நகரப் பகுதியுடன் அருகில் உள்ள பல நிலப் பகுதிகளை இணைத்து மத்திய ஆட்சிக்குட்பட்ட பகுதியாக அறிவிக்கலாம். நலகொண்டா மாவட்டம் வழியாக குண்டூர் மாவட்டம் வரை யிலும் நில எல்லையைச் சேர்க்கலாம். அதே போல, மஹபூப்நகர் மூலம் கர்நூல் மாவட்டம் வரையில் (ராயல சீமையில் உள்ள) பகுதியை ஹைதராபாத்துடன் இணைக்கலாம்.
 5) தெலுங்கானாவையும் (ராயல) சீமா ஆந்திராவையும் பிரித்து விடலாம். தெலுங்கானா வுக்கு ஹைதராபாத்தைத் தலைநகரமாக்கி விடலாம். (ராயல) சீமா ஆந்திரா புதிய தலை நகரைத் தேர்வு செய்து கொள்ளட்டும். 6) ஆந்திரத்தைப் பிரிக்காமல் இப்போதுள்ள படியே ஒரே மாநிலமாக வைத்துக் கொள்ள லாம். தெலுங்கானாவின் பின்தங்கிய பகுதிகளை முன்னேற்ற அரசியல் சட்டம் அளித் துள்ள வழிகளின்படி, சட்டப்படி உருவாக்கப்பட்ட நிர்வாக அமைப்புகளைக் கொண்டு பிராந்திய கவுன்சிலை ஏற்படுத்தலாம். இதற்கு போதிய நிதியை ஒதுக்குவதுடன் செயல்படுவதற்கான அதிகாரங்களையும் வழங்கலாம். இப்படிச் செய்வதன் மூலம் பின் தங்கிய பகுதிகளின் வளர்ச்சிக்கு தனி முக்கியத்துவம் அளிக்கலாம். - என்பதே நீதிபதி கிருஷ்ணா தொகுத்து வழங்கியுள்ள ஆறு வழிகளாகும்.
நீதிபதி கிருஷ்ணா தமது அறிக்கையின் கடைசிப் பகுதியில், ""தெலுங்கானா கிளர்ச்சி என்பது பல்லாண்டுகளாக ஆந்திரத்தில் நடைபெற்று வருகிறது. இது உணர்ச்சிமய மானது. இந்தக் கோரிக்கையை மறுப்பதால் மாவோயிஸ்ட் இயக்கம் வலுப்பெறும் ஆபத்தும் இருக்கிறது. தனி மாநில கோரிக்கையை நியாயமற்றது என்று கூறிவிட முடியாது. சமூக, பொருளாதார ரீதியாக ஆந்திரத்தின் பிற பகுதிகளைவிட தெலுங்கானாப் பகுதி பின்தங்கித் தான் இருக்கிறது. எனவே, ஆந்திரத்தை பிரிக்கக் கூடாது என்ற முடிவை தெலுங்கானா ஆதரவாளர்கள் கடுமையாக எதிர்க்கக் கூடும்.
ஆட்சி நிர்வாகத்தில் இருப்பவர்கள் பொறுமையாகவும், திறமையாகவும் கிளர்ச்சியாளர் களை கையாள வேண்டும்.  அவர்கள், நம்பிக்கை கொள்ளும் வகையில், அரசியல் நடவடிக்கைகள் அமைந்தால் இந்தக் கோரிக்கையை ஆதரிப்பவர்களும் மனம் மாறுவதற்கு வாய்ப்பு இருக்கிறது"" என்று உள்ளது உள்ளபடி இருதரப்பு நியாயங் களையும் எடுத்துக் கூறி ஆலோசனை வழங்கியிருக்கிறது, ஸ்ரீகிருஷ்ணா கமிஷன் அறிக்கை. நீதிபதி ஸ்ரீகிருஷ்ணா அறிக்கை பற்றி எல்லோரும் எதிர்பார்த்தது போலவே தெலுங்கானா ஆதரவாளர் கள்அனைவரும் காங்கிரஸ் உள்ளிட்ட அனைத்துக் கட்சியினரும், ‘‘ஸ்ரீகிருஷ்ணா அறிக்கையை நாங்கள் ஏற்க மாட்டோம். அதனை முற்றாக நிராகரிக்கி றோம். தனித் தெலுங்கானா பிரித்து தருவது ஒன்றே வழி. அதுவல்லாது கூறப்படும் எந்தவித யோசனைகளையும் நாங்கள் ஏற்றுக் கொள்ள மாட்டோம்"" என்று ஒருமித்த குரலில் உறுதிபடத் தெரிவித்திருக்கிறார்கள்.

நீதிபதி ஸ்ரீகிருஷ்ணா அறிக்கை பற்றி உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் விடுத்துள்ள வேண்டுகோள் எல்லோராலும் கவனிக்கத்தக்கது. ""ஸ்ரீகிருஷ்ணா கமிட்டி 6 யோசனைகளைத் தெரிவித்து அவற்றின் சாதக பாதகங்களை யும் கூறியிருக்கிறது. அவற்றில் 3 யோசனைகள் நடைமுறைப்படுத்த சாத்தியம் இல்லாத வை என்றும் கூறி அவற்றை அதுவே நிராகரித்தும் உள்ளது. ஸ்ரீகிருஷ்ணா கமிட்டி தீவிரமாக ஆய்வு நடத்தி தாக்கல் செய்துள்ள இந்த அறிக்கைக்கு அனைத்து அரசியல் கட்சிகளும், குழுக்களும், தனிப்பட்ட நபர்களும் மதிப்பு அளிக்க வேண்டும். இந்த அறிக்கையை கவனமாகப் படித்து விரைவில் உரிய முடிவை எடுக்க வேண்டும். இது தொடர்பாக அரசு கூட்டிய அனைத்துக் கட்சி ஆலோசனைக் கூட்டத்தில் சில கட்சி கள் கலந்து கொள்ளாதது வருத்தம் அளிப்பதாகவே இருக்கிறது. அந்தக் கட்சிகளுக்கும் ஸ்ரீகிருஷ்ணா அறிக்கையின் பிரதிகள் அனுப்பி வைக்கப்படும். மேலும் இந்த அறிக்கை உள்துறை அமைச்சகத்தின் இணையதளத்திலும் வெளியிடப்படும். இந்த மாத இறுதியில் மீண்டும் அனைத்துக் கட்சிக் கூட்டம் நடத்தப்படும்"" என்று தமது வேண்டுகோளில் குறிப்பிட்டு இருக்கிறார், அமைச்சர் ப.சிதம்பரம். ஸ்ரீகிருஷ்ணா கமிட்டி எந்த அளவுக்கு பாரபட்சமாகவோ ஒருதலைச் சார்புடையதாகவோ இல்லாத நடுநிலை வாய்ந்த நல்ல அறிக்கையோ, அதுபோலவே இந்தப் பிரச்சினையில் உள்துறை அமைச்சர் ப.சிதம்பரத்தின் அணுகு முறையும், பிரச்சினையின் நிரந்தத் தீர்வுக்கு எது நியாயமானதாகவும், நேர்மையானதாகவும் இருக்குமோ அதையே ஏற்று மத்திய அரசு அமலுக்குக் கொண்டு வரும் என்பதையே பிரதிபலிப்பதாக இருக்கிறது!


நன்றி:முரசொலி 08-01-2011

ஸ்பெக்ட்ரம் பற்றிய இமாலயக் கற்பனைக் கணக்குகளும் நிதின் கட்காரியின் மிரட்டலும், கபில் சிபல் அளித்த ஆணித்தரமான பதில்களும்!


அஸ்ஸாம் மாநிலத்தின் தலைநகரம் கௌகாத்தியில் பா.ஜ.க.வின் தேசிய செயற்குழுக் கூட்டம் சனி, ஞாயிறு ஆகிய 2 நாட்கள் நடைபெற ஏற்பாடாகியிருக்கிறது. முதல் நாள் கூட்டத்தில் கலந்து கொண்டு அக்கட்சியின் அகில இந்தியத் தலைவர் நிதின் கட்காரி தலைமை உரை நிகழ்த்தியிருக்கிறார். செயற்குழுக் கூட்டத்தில் கட்காரி பேசியது என்ன என்பதை பா.ஜ.க.வின் பத்திரிகைத் தொடர்பாளர் ரவி சங்கர் பிரசாத் நிருபர்கள் மத்தியில் சுருக்கமாக எடுத்துரைத்தார்.
கூட்டத்தில் பேசிய நிதின் கட்காரி, ""2ஜி அலைக்கற்றை ஊழலை இதுவரை நடந்த அனைத்து ஊழல்களுக்கும் அன்னை என்றே அழைக்கலாம். அந்த அளவுக்கு அது பெரியது, தீவிரமானது. பிரதமர் மன்மோகன் சிங் யோக்கியமானவர். பொதுக் கணக்குக் குழு, கூட்டுக்குழு முன்னால் ஆஜராகத் தயாராக இருப்பவர் என்றால் நாடாளு மன்றக் கூட்டுக் குழு முன்னால் ஆஜராகத் தயங்குவது ஏன்?"" என்று கேட்டிருக்கிறார் அவர்.
 1. ஸ்பெக்ட்ரம் 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டில் ரூபாய் ஒரு லட்சத்து எழுபத்து ஆறாயிரம் கோடி இழப்பு என்று தணிக்கைக் குழு அதிகாரியின் இமாலயக் கற்பனையைப் பிடித்துக் கொண்டு தொங்குகிறார்கள் பா.ஜ.க. தலைவர்கள்.
 2. தணிக்கைக் குழு அதிகாரியே - இந்தக் கணக்கிற்கு என்னிடம் எந்தவித ஆதாரமும் இல்லை. இது துல்லியமான கணக்கும் ஆகாது.
 3. அலைக்கற்றை ஒதுக்கீடு முதலில் வந்தவர் களுக்கு முன்னுரிமை என்ற அடிப்படை யில் ஒதுக்கீடு செய்ததால் எவ்வளவு ரூபாய் இழப்பு ஏற்பட்டு இருக்கும் என்று நான் 3 வகையான முறைகளில் கணக்குப் போட்டு பார்த்தேன். 4. அதிலே, ஒரு முறையின் அடிப்படையில் இழப்பு 500 கோடி அளவுக்குத்தான் இருக்கும் என்று என்னால் யூகிக்க முடிந்தது.
5. இன்னொரு முறையில் நான் அனுமானிக்க முயன்றபோது இழப்புத்தொகை ஒரு லட்சத்து எழுபத்து ஆறாயிரம் கோடி என்பதாக வந்தது.
 6. எனினும் இந்த இழப்பீடு பற்றிய தொகைகள் எல்லாமே துல்லியமானவை அல்ல. முழுக்க முழுக்க யூகத்தின் அடிப்படையில் கணக்கிடப் பட்ட வெறும் அனுமானமே ஆகும் என்று - - விசாரணைக் குழுவினர் முன்பே நேரில் ஆஜராகி அந்த தலைமைத் தணிக்கை அதிகாரி வாக்கு மூலம் அளித்திருக்கிறார். இவற்றையெல்லாம் அனுமானம்தான், யூகத்தின் அடிப்படையிலான கணக்குகள்தான் என் பதை நான் மத்திய அரசிடம் சமர்ப்பித்த 76 பக்க அறிக்கையிலேயே தெளிவாகக் குறிப்பிட்டு இருக்கிறேன் என்றும் அவர் விசாரணை அதிகாரிகள் முன்பு நேரில் ஆஜராகி தெள்ளத் தெளிவாக, திட்டவட்டமாகக் குறிப்பிட்டு இருக்கிறார்.
எனினும், பா.ஜ.க.வினர் இந்தப் பிரச்சினையை தேர்தல் வரையில் எப்படியாவது இழுத் தடித்துக் கொண்டே போனால் மத்திய காங்கிரஸ் ஆட்சியைக் கவிழ்த்து விடலாம் என்று பகல் கனவு காண்கிறார்கள்.

அதனடிப்படையிலேயே கௌகாத்தியில் நடந்த செயற்குழுக் கூட்டத்திலும் பா.ஜ.க. தலைவர் நிதின் கட்காரி, ""இந்தியாவில் இதுவரை நடந்துள்ள ஊழல்களிலேயே மிகப்பெரிய ஊழல் 2ஜி அலைக் கற்றை ஏல ஊழல்தான். இந்த விவகாரத்தை ஆராய நாடாளுமன்ற கூட்டுக் குழு விசா ரணைக்கு உத்தரவிடாமலேயே காங்கிரஸ் தலைமை பிடிவாதம் காட்டுகிறது. இதனால் ஆட்சியையே அது இழக்கப் போகிறது என்று எச்சரிக்கை என்ற பெயரால் மிரட்டல் விடுத்து இருக்கிறார். இப்படி எந்தவித அடிப்படை ஆதாரமும் இல்லாமல் கணக்குத் தணிக்கை அதிகாரியின் கற்பனை, யூகம், அனுமானம் அடிப்படையிலான - அஸ்திவாரம் எதுவும் இல்லாத - மணலால் கட்டப்பட்ட வீட்டை கான்கிரீட் வீடு போல பூதாகாரமாக்கி காங்கிரஸ் ஆட்சிக்கு கெட்ட பெயர் ஏற்படுத்த வேண்டும், அதன்மூலம் அந்த ஆட்சியையே கவிழ்த்து விட வேண்டும் என்கிற சுயநல அரசியல்ஆதாயம் அடிப் படையிலான ஒரு பொய்யை பா.ஜ.க.வினர் திரும்பத் திரும்ப, கீறல் விழுந்த ரெக்கார்டு போல கூறியபடியே இருக்கிறார்கள். - இவர்களை பலமாக ஆதரித்து நிற்கும் சுப்ரமணிய சுவாமியே இழப்புத் தொகை அவ்வளவு இருக்காது. 50,000 கோடி ரூபாய் தான் இருக்கும் என்று ஒரு புதுக்கணக்கைச் சொல்லி வருகிறார். -

பா.ஜ.க. ஆட்சிக் காலத்தில் தொலைத் தொடர்புத் துறையில் அமைச்சராக இருந்த அருண்ஷோரி இழப்பு என்பது இவ்வளவு கோடியாக இருக்காது, 30,000 கோடி ரூபாயாகத்தான் இருக்கும் என்று வேறொரு கணக்கைச் சொல்லி வருகிறார்.
- ஆனால் சி.பி.ஐ.யின் மேலிடத் தரப்பினரோ இழப்பு 22,000 கோடி அளவுக்குத்தான் இருக் கும் என்று மற்றுமொரு அனுமானத்தை வெளியிட்டு இருக்கிறார்கள். இந்த நிலையில்தான் யார் என்ன சொன்னால் எங்களுக்கு என்ன? எங்கள் கட்சியைச் சார்ந்த முன்னாள் அமைச்சர் அருண் ஷோரியே சொன்னால் தான் என்ன? நாங்கள் அதை எல்லாம் கண்டு கொள்ளத் தயாராக இல்லை. இந்தக் கணக்குகளில் மிக அதிக யூகமும், அனுமானமும், இமாலயக் கற்பனையுமான 1,76,000 கோடி இழப்பு என்பதைத் தான் நாங்கள் நம்பு வோம். அதுதான் எங்களது பித்த லாட்ட அரசியலுக்கு உதவும்படியாக இருக்கிறது என்பதுபோல திரும்பத் திரும்ப பொய் பேசி வருகிறார்கள் அவர்கள்.
 நிதின் கட்காரி கௌகாத்தி செயற்குழுக் கூட்டத்தில் பேசியதற்கு முதல் நாள், பா.ஜ.க. வினரின் இந்த ஜமக்காளத்தில் வடிகட்டிய பொய்யின் தோலை உரித்து தொங்கப்போட்டு இருக்கிறார், மத்திய தொலைத் தொடர்புத் துறை அமைச்சர் கபில் சிபல். அவர் டெல்லியில் பா.ஜ.க. வினரின் முகத்திரையைக் கிழிக்கும் வகையில் நிருபர் களிடம் அளித்த பேட்டியின் சாராம்சம் வருமாறு:-
  1) ""2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் ஏற்பட்ட இழப்பைக் கணக்கிடுவதற்கு தணிக்கை கட்டுப் பாட்டு அதிகாரி பின்பற்றிய வழிமுறை வேதனை அளிப்பதாக இருக்கிறது.
 2) அவர் குறிப்பிட்டதுபோல ஒரு லட்சத்து எழுபத்து ஆறாயிரம் கோடி இழப்பு என்பதற்கு எந்தவித அடிப்படை ஆதாரமும் இல்லை.
 3) அவர் தமது அறிக்கையில் தெரிவித்துள்ள ஒரு லட்சத்து எழுபத்தி ஆறாயிரம் கோடி இழப்பு என்கிற புள்ளி விவரம் முழுக்க முழுக்க தவறான புள்ளி விவரம் ஆகும்.
 4) இந்த விவகாரத்தில் அரசின் கஜானாவுக்கு எந்தவித இழப்பும் பைசா அளவுக்குக்கூட இல்லை.
5) இழப்பு தொடர்பாக தனது யூகத்தின், அடிப்படையில் புள்ளி விவரங்களை அவர் வெளியிட்டு இருக்கக்கூடாது.
6) இதன் மூலம் அரசுக்கும் இந்த நாட்டுக்கும் அவர் பெரிய அளவில் தர்ம சங்கடத்தை ஏற்படுத்தி விட்டார்.
 7) கணக்குத் தணிக்கை அதிகாரி தனது மனச்சாட்சிக்கு அநீதி இழைத்துவிட்டார்.
8) எதிர்க்கட்சிகள் நாட்டின் சாமான்ய மக்களுக்கு துரோகம் இழைத்துவிட்டனர். தொலைத்தொடர்புத் துறையில் லைசன்ஸ் வழங்கிட ‘முதலில் வருகிறவர்களுக்கு முன் னுரிமை’ என்ற கொள்கை பாரதீய ஜனதா ஆட்சிக் காலத்தில்தான் முதன்முதலில் அமலுக்கு வந்தது. கடந்த 1999ம் ஆண்டில் அவர்களுடைய ஆட்சியின் போது - நிலையான லைசென்ஸ் கட்டண முறை; வருவாயில் பங்கு என்கிற அடிப் படையிலான கட்டண முறை அரசின் கொள்கை யாக மாற்றப்பட்டதால், அப்போது ஏற்பட்ட வருவாய் இழப்பு மட்டும் ரூபாய் ஒன்றரை லட்சம் கோடியாகும். கடந்த 2002ம் ஆண்டின் 10வது 5வது ஆண்டுத் திட்ட அறிக்கையில், ஸ்பெக்ட்ரம் ஒதுக் கீட்டுக்கு வருவாய் மட்டுமே அடிப்படை அளவுகோல் அல்ல என்று குறிப்பிடப்பட்டு இருந்தது. அதே கொள்கையைத்தான் நாங்களும் பின்பற்றி அமல் நடத்தி வருகின்றோம். - என்று பதிலளித்ததின் மூலம் கபில்சிபல் பா.ஜ.க.வின் பொய்களுக்கான விஷமப் பிரச்சாரத் திற்கான அஸ்திவாரத்தையே அடித்து நொறுக்கி தகர்த்து விட்டார்.
அதேசமயம் அவர், ""இருந்தபோதிலும் 2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட் டில் சில தவறுகள் நடந்து இருக்கலாம். அது இயல்புதான். அதற்காகத்தான் தொலைத் தொடர்புத்துறை சார் பில் ஒரு நபர் கமிஷன் அமைக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. அதன் அறிக்கை வந்தவுடன் முறைகேட்டில் ஈடுபட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். அத்துடன் இந்த விவகாரத்தில் நடைபெற்றுள்ள கிரிமினல் குற்றம் தொடர்பாக உச்சநீதி மன்றத்தின் மேற்பார்வையில் சி.பி.ஐ. விசாரணையும் நடந்து வருகிறது"" என்றும் உறுதிபடக் கூறியிருக்கிறார். இத்தகைய நிலையில்தான் பா.ஜ.க.வினர், - தனி நீதிபதி தலைமையிலான ஒரு நபர் கமிஷன் விசாரணை, - அமலாக்கப் பிரிவின் விசாரணை - சி.பி.ஐ. விசாரணை - பொதுக்கணக்குக் குழு விசாரணை. ஆகிய எந்த விசாரணையையும் நாங்கள் நம்பத் தயாராக இல்லை. கூட்டுக்குழு விசாரணையை நாங்கள் நம்புவோம் என்று, நான் பிடித்த முயலுக்கு மூன்று கால்கள்தான் என்பது போல பா.ஜ.க.வினர் அடம் பிடித்து வருகிறார்கள்.
ஸ்பெக்ட்ரம் விவகாரம் தொடர்பான கூக்குரல் கிளப்பப்பட்ட உடனேயே மன்மோகன் அரசிடமிருந்து தமிழக முதல்வர் கலைஞர் ஆ.ராசாவை பதவி விலகச் சொன்னார். ஆனால், அதேசமயம்,  கர்நாடக மாநிலத்தில் பா.ஜ.க. முதல்வர் எடியூரப்பா நில ஒதுக்கீடு செய்ததன் மூலம் ஏராளமான ஊழல்களை நடத்தியிருக்கிறார். அவர் தனது மகன்கள், மருமகள் போன்ற நெருங்கிய சொந்தக்காரர்களுக்கு எல்லாம் அரசு நிலங்களை தாரைவார்த்துத் தந்து விட்டார் என்று கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த எதிர்க்கட்சிகள் எல்லாம் குற்றம் சாட்டி, இந்த ஊழல்களுக்கு தார்மீகப் பொறுப்பேற்று முதல்வர் எடியூரப்பா முதலமைச்சர் பதவி யை ராஜினாமா செய்ய வேண்டும். இல்லாவிட்டால் அவரை பா.ஜ.க. மேலிடம் தலையிட்டு முதல்வர் பொறுப்பிலிருந்து பதவி நீக்கம் செய்ய வேண் டும் என்று கோரிக்கை வைத் தனர். இது ஸ்பெக்ட்ரம் பிரச்சினை போல யாரோ ஓர் அதிகாரியின் கற்பனையில் எழுப்பப்பட்ட இமாலயப் புழுகு அல்ல. இது நூற்றுக்கு நூறு நிஜமாகவே நடந்த அப்பட்டமான ஊழல் தான் என்பதை நிரூபிக்கும் வகையில் உடனடியாக முதல்வர் எடியூரப்பாவின் மகன்களும், மருமகளும் தாங்கள் அதிகாரத் துஷ்பிரயோகம் மூலம் அபகரித்துக் கொண்ட நிலங்களை அரசுக்கே திருப்பி அளித்திட முன்வந்தார்கள்.
 அப்போது -  பா.ஜ.க. மேலிடம் பலமுறை எடியூரப்பாவை டெல்லிக்கு அழைத்து பேச்சுவார்த்தை என்ற பெயரால் அவரது கால்களில் விழுந்து மன்றாடியதே தவிர, அவர் மீது நடவடிக்கை எதையும் எடுக்க பா.ஜ.க. தலைமையால் முடியவில்லை. இன்று வரை - இந்த வினாடி வரை முடிய வில்லை. இப்படிப்பட்ட யோக்கிய சிகாமணிகள்தான் ஸ்பெக்ட்ரம் ஊழல், ஸ்பெக்ட்ரம் ஊழல் என்று காட்டுக் கூச்சலிட்டு வருகிறார்கள். அதுமட் டுமா? பிரதமர் மன்மோகன்சிங்கின் யோக்கியத் தன்மை, நாணயம், நேர்மை, அரசியல் தூய்மை பற்றியும் சந்தேகம் எழுப்பி பழிபோட்டு தலை வாங்க முயற்சித்தபடியே இருக்கிறார்கள். இப்போது பா.ஜ.க. செயற்குழுவில் ஊழல் பற்றி வீர முழக்கம் செய்திருக்கிற நிதின் கட் காரி பற்றிக் கூட ‘‘கட்காரி, நீரா ராடியா வுடன் நெருங்கிய கூட்டாளி. அவரது வியாபாரக் கூட்டாளி’’ என்று குற்றச்சாட்டு வந்தது.
தன் மீது குற்றச்சாட்டு வந்துவிட்டது என் பதற்காகவே நிதின்கட்காரி தனது பதவியை ராஜினாமா செய்து விட்டாரா? செய்யவில் லையே! ஊருக்கு மட்டும்தான் உபதேசமா?
நன்றி:முரசொலி 10-01-2011

உதைத்த காலுக்கு முத்தம்தர இடதுசாரிகளுக்கு ஜெயலலிதா அழைப்பு!


அப்பாடி! கம்யூனிஸ்ட் கட்சிகளின் ஆசை நிறைவேறிவிட்டது. இத்தனை நாளும் அவர் களை ஏறெடுத்தும் பார்க்காமல் அலட்சியப் படுத்தி வந்த ஜெயலலிதா இப்போது, சட்டமன்றத்தில் ஆளுனர் உரை நிகழ்த்திய போது, அ.தி.மு.க.வினர் நடத்திய அராஜகங் கள், அட்டூழியங்கள் ஆகியவற்றை இரு கம்யூனிஸ்ட் கட்சிகளும் தோளோடு தோள் நின்று ஆதரித்ததையும், அவைக் காவலர்களை அ.தி.மு.க.வினர் தாக்கியதையும், முகத்திலும், மார்பிலும் ஓங்கி ஓங்கி குத்தி தாக்கியதையும், அவைக்கு வெளியே பேச்சு, பேட்டி, போட்டிக் கூட்டம் ஆகி யவை போன்ற நகைப்புக்குரிய - அதேசமயம் காலிதனத்துக்கு நிகரான கலவரங்களையும் பலமாக கம்யூனிஸ்ட்டுகள் ஆதரித்து நின்றதையும் கண்ட ஜெயலலிதா, இனியும் இவர்களை நாம் மதிக்காமல் இருக்கக் கூடாது. இவர்கள் ரொம்பவும் நல்ல பிள்ளைகள் ஆகிவிட்டார்கள். நமது கட்சியின் ஏவலாட்களாக நடந்து கொள் வார்கள். நாம் தலையால் இட்ட உத்தரவுகளை அவர்கள், தங்களது முணுமுணுப்பைக் கூட காட்டாமல் நிறைவேற்றித்தர பாடுபடுவார்கள் என்று நினைத்து கம்யூனிஸ்டு கட்சியினர் பால் தனது கருணை பார்வையை திருப்பியிருக்கிறார்.

இது கம்யூனிஸ்டுகளுக்கு வரலாறு காணாத மகிழ்ச்சியை வாரி வழங்கியிருக்கிறது. அவர்கள் ஆஹா அம்மாவுக்கு வன்முறை என்றால் ரொம்பவும் பிடிக்கும். அதனால் சட்டசபையில் அம்மாவின் கவனத்தை நம்பக்கம் திருப்பவும், அதன் மூலம் அம்மாவின் நன்மதிப்பை பெறவும் நாம் அ.தி.மு.க. வினருடன் சேர்ந்து கொண்டு அவையிலும், வெளி யிலும் நிகழ்த்தியகளே பரங்கள், கலகங்கள், அமளிகள் அம்மாவை -அம்மாவின் திருப் பார்வை நம்மீது திரும்ப வைத்து விட்டது என்ற சந்தோஷம் உச்சம் தலைக்கேற உவப்பில் ஆழ்ந்து கிடக்கிறார்கள். கம்யூனிஸ்ட்டுகள்.

 ‘தமிழக சட்டப்பேரவை தேர்தலில் கூட்டணி பற்றி பேச வாருங்கள்’ என்ற இரு கம்யூனிஸ்ட்டு கட்சிகளுக்கும் ஜெயலலிதா அழைப்பு விடுத்திருக்கிறார். இதுகுறித்து செய்தி வெளியிட்ட தினமணி பத்திரிகை கூட இடதுசாரிகளை தேர்தல் கூட்டணிக்காக வருமாறு ஜெயலலிதா விடுத்த அழைப்பை அந்தக் கட்சிகளின் மீது ஜெய லலிதா கொண்டுள்ள மதிப்பின் காரணமாக விடுக்கப்பட்ட அழைப்பு அல்ல அது. காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி சேர வாய்ப்பு கிட்டும் என்ற நெஞ்சு கொள்ளாத ஆசையுடன் ஜெயலலிதா கால் கடுக்க காத்து நின்றார். அவரது ஆசை நிறைவேறாது என்பதை சென்னை வந்த பிரதமர் மன்மோகன்சிங்கே ‘தி.மு.க. - காங்கிரஸ் கூட்டணி உறுதியாக இருக்கிறது அது தொடரும்’ என்று பகிரங்கமாகவே அறிவிப்பு செய்ததின் மூலம் நிராசையாக, நிறைவேற முடியாத ஆசையாக ஆகி விட்டது. அதன் பிறகே வேறு வழியில்லாத ஜெயலலிதா, இடதுசாரிகளுக்கு கூட்டணி பற்றி பேச அழைப்பு விடுத்திருக்கிறார்.

மற்றபடி இந்த கட்சியினரின் பலத்தையோ மக்கள் செல்வாக்கையோ மதித்து அல்ல, அல்லவே அல்ல என்பதை தெளிவாக்கும் வகையில் தினமணி எழுதியுள்ள செய்தி விமர்சனம் வருமாறு :

 தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் கூட்டணி பற்றி பேச வருமாறு இரு கம்யூனிஸ்ட் கட்சி களுக்கும் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதா அழைப்பு விடுத்துள்ளார். மத்திய, மாநில அரசுகளின் கொள்கைகளுக்கு எதிராகவும், விலைவாசி உயர்வைக் கண்டித்தும் , இடதுசாரி கட்சிகளின் முன்முயற்சியால் ஏப்ரல் 27 மற்றும் ஜூலை 5 என இருமுறை அகில இந்திய அளவில் பொது வேலை நிறுத்தம் நடைபெற்றது. இந்தப் போராட்டங்களுக்கு அ.தி.மு.க.வும் ஆதரவு அளித்தது. இதேபோல், மத்திய - மாநில அரசுகளுக்கு எதிராக தொடர்ச்சியான கூட்டுப் போராட்டங் களை நடத்த கம்யூனிஸ்ட் கட்சிகள் முயற்சித்தன. எனினும், மாநில தி.மு.க. அரசுக்கு எதிராக தீவிரமான போராட்டங்களை நடத்திய அ.தி.மு.க., காங்கிரஸ் கட்சிக்கு எதிராக நேரடி போராட்டங்களை நடத்த ஆர்வம் காட்ட வில்லை. கோவை, திருச்சி, மதுரை ஆகிய இடங்களில் ஜெயலலிதா கலந்து கொண்ட பிரம்மாண்டமான ஆர்ப்பாட்டங்களை அ.தி.மு.க. நடத்தியது. அந்த ஆர்ப்பாட்டங்கள் அனைத்தும் தி.மு.க. அரசுக்கு எதிராகவே நடத்தப்பட்டன. இதற்கிடையே மதுரை ஆர்ப்பாட்டத்துக்கு முன்பாக கடந்த செப்டம்பர் 26ம் தேதி மார்க்சிஸ்ட் கட்சித் தலைவர்கள் ஜெயலலிதா வைச் சந்தித்தனர். சட்டப்பேரவை தேர்தல் நெருங்கி வருவதால் தமிழகத்தில் உள்ள எதிர்க்கட்சிகள் தனித்தனியாகப் போராட்டங் களை நடத்துவது அவசியம் என அவர்கள் வலியுறுத்தினர்.

 இதுபற்றி மதுரை அ.தி.மு.க. ஆர்ப்பாட்டம் (அக்.18) முடிந்தபின் பரிசீலிக்கலாம் என்று அவர்களிடம் ஜெயலலிதா தெரிவித்ததாக அப்போது கூறப்பட்டது. எனினும், மதுரை ஆர்ப் பாட்டத்துக்குப் பிறகும் கூட்டுப் போராட்டம் பற்றி அ.தி.மு.க. தரப்பிலிருந்து கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு எந்தத் தகவலும் இல்லை. இதற்கிடையே 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டுப் பிரச்சினையில் தொடர்புடைய அமைச்சர் ஆ.ராசாவை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்று மத்திய அரசை தொடர்ந்து ஜெயலலிதா வலியுறுத்தி வந்தார். இதனால், மத்திய அரசுக்கான ஆதரவை தி.மு.க. வாபஸ் பெற்றால், மத்திய அரசுக்கு நிபந்தனையற்ற ஆதரவு அளிக்கத் தயார் என்று கடந்த நவம்பர் 11ம் தேதி ஜெயலலிதா அறிவித்தார். ஜெயலலிதாவின் இந்த ஆதரவு அறி விப்புக்கு, கம்யூனிஸ்ட் கட்சிகள், குறிப்பாக மார்க்சிஸ்ட் கட்சி வெளிப்படையாக தனது அதிருப்தியை வெளியிட்டிருந்தது. அதன் பிறகு 2ஜி அலைக்கற்றை ஊழலை முன் வைத்து நாடு தழுவிய பிரச்சார இயக்கம் நடத்த இரு கம்யூனிஸ்ட் கட்சிகளும் முடிவு செய்தன. சென்னையில் அ.தி.மு.க. உள் ளிட்ட எதிர்க்கட்சிகளை அழைத்து பெரிய அளவில் பேரணி நடத்தவும் அக்கட்சிகள் தீர்மானித்தன. எனினும், காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி சேர்வதற்கான வாய்ப்புகள் குறித்து அ.தி.மு.க. தீவிரமாக ஆராய்ந்து கொண் டிருந்ததால், கம்யூனிஸ்ட் கட்சிகளுடன் கூட்டுப் பேரணி நடத்துவதில் அ.தி.மு.க. ஆர்வம் காட்ட வில்லை என்று கூறப்பட்டது. கடந்த ஜனவரி 30ம் தேதி நடந்த அ.தி.மு.க. பொதுக்குழுக் கூட்டத்தில் கூட, சில கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடந்து வருவதாக ஜெயலலிதா கூறினாரே தவிர, ஏற்கனவே கூட்டணியில் உள்ளதாகக் கூறப்படும் கம்யூனிஸ்ட் கட்சிகள், ம.தி.மு.க.வுடன் பேச்சு நடத்துவது பற்றி எதுவும் கூற வில்லை. நடிகர் விஜயகாந்த் தலைமையிலான தே.மு.தி.க.வுடன், அ.தி.மு.க. தீவிர பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும், ஆனால், கம்யூனிஸ்ட் கட்சிகள், ம.தி.மு.க.வுடன் உடனடியாக பேசுவதை அ.தி.மு.க. தவிர்ப்ப தாகவும் அப்போது பேச்சு எழுந்தது. இந்நிலையில், சென்னை வந்த பிரதமர் மன்மோகன்சிங், தி.மு.க. - காங்கிரஸ் கூட்டணி உறுதியாக இருப்பதாக அறிவித்து விட்டுச் சென்றார். தி.மு.க. - காங்கிரஸ் கட்சிகள் இடையேயான கூட்டணி முறிய எவ்வித வாய்ப்பும் இல்லை என்பதை இருகட்சிகளும் உறுதியாக தெரிவித்து விட்டன.

இந்தச் சூழலில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் ஆகிய இருகட்சிகளை யும் கூட்டணி பற்றி பேச வருமாறு அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதா அழைப்பு விடுத்துள்ளார். இதை மார்க்சிஸ்ட் கட்சி பொதுச் செயலாளர் பிரகாஷ் காரத், சென்னை யில் திங்கள்கிழமை உறுதி செய்தார். தமிழகத்தில் தி.மு.க. - காங்கிரஸ் அணிக்கு எதிராக ஒரு உறுதியான அணியை நாமெல் லாம் சேர்ந்து அமைக்க வேண்டும் என்று தன்னிடம் தொலைபேசி மூலம் ஜெயலலிதா கூறியதாக பிரகாஷ்காரத் தெரிவித்தார். இதேபோல் இந்திய கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர்களையும் ஜெயலலிதா தொலை பேசி யில் தொடர்பு கொண்டு அழைப்பு விடுத்தார் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகி கள் தெரிவிக்கின்றனர். - என்பதாக செய்தி விமர்சனம் வெளியிட்டிருக்கிறது. எப்படியிருப்பினும் என்ன?  ""மதியாதார் தலைவாசல் மிதியாதீர்"" என்று நமது முன்னோர்கள் அனுபவத்தின் மூலம் சொன்ன முதுமொழிகளை பத்து சீட்டுக்காக மானம் மரியாதை எதையும் இழந்துவிட எப்போதும் காத்திருக்கும் கம்யூனிஸ்டுகள் மதிக்கவா போகிறார்கள்.  அவர்கள் தி.மு.க. ஆட்சியை அகற்றியே தீருவோம் என்று ஆர்ப்பரித்து , 1991 - 1996 2001 - 2006 ஆகிய காலகட்டங்களில் தொடர்ந்து காட்டாட்சி நடத்திய ஜெயலலிதாவின் பாதார விந்தங்களில் சரணாகதி அடைய படாதபாடு படுகிறார்கள்! அதனால்தான் -  உதைத்த காலுக்கு முத்தமிடத்துடிக்கிறார்கள்!

நன்றி:முரசொலி 13-01-2011

விலைவாசி உயர்வதற்கும் சரிவதற்கும் யார் காரணம்? பாலபாரதி கேள்வியும், பேராசிரியப் பெருந்தகை, பீட்டர் அல்போன்ஸ் விளக்கங்களும்!


விலைவாசி உயர்வுக்கு யார் காரணம்? இந்த கேள்விக்கு பதில் அளிக்க யாராலும் முடியவில்லை. இடதுசாரிகள் ஆளும் மேற்குவங்கத்திலும், கேரளாவிலும்கூட விலைவாசிகள் இறக் கைக் கட்டி கொண்டு விண்ணில்தான் பறக்கின்றது விலைவாசி. இடதுசாரி மாநிலங்களில் மட்டும் விலைவாசி என்ன அன்ன நடையா போடுகின்றன? இல்லையே? கேரளத்திலும், மேற்குவங்கத்திலும் அனைத்து மாநிலங்களை போலவே விலை வாசிகள் விண்ணில் பறந்தாலும் கம்யூனிஸ்ட்கள் கவலைப்பட மாட்டார்கள். அவர்கள் ஆளும் மாநிலங்களில் உள்ள எதிர்க்கட்சிகள் விலைவாசியை எதிர்த்து போராட்டம் நடத்தினால் விட்டுவிட மாட்டார்கள். அப்போது ஆன்லைன் வர்த்தகம் பற்றியோ அந்நிய முதலீடுகள் பற்றியோ ஏற்றுமதி - இறக்குமதி பற்றியோ அவர்களுக்கு கிஞ்சிற்றும் கவலை ஏற்படாது. எதிர்க்கட்சிகளின் போராட்டத்தை எப்படி நசுக்குவது என்பதி லேயே தீவிரம் காட்டுவார் கள் அவர்கள். கம்யூனிஸ்டுகளுக்கு இப்போது தமிழ்நாட் டில் தக்காளியும், முருங்கைக்காயும், பாமாயி லும் விலை அதிகமாகிவிட்டது என்பதில் ரொம்பவே அக்கறை அதிகமாகியிருக்கிறது. தமிழக சட்டமன்றத்தில் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் பற்றி விவாதம் நடந்தபோது மார்க்சிஸ்டு கம்யூனிஸ்ட் கட்சியின் உறுப்பினர் பாலபாரதி பேசியபோது,

""கிலோ கணக்கில் காய்கறிகள் வாங்கிய காலமெல்லாம் மலையேறிவிட்டது. ஒரு தக்காளி ரூபாய் மூன்றுக்கும், ஒரு முருங்கைக்காய் ரூபாய் பதினைந்துக்கும் மக்கள் வாங்கி செல்கின்றனர். பறக்கும் பாமாயில் விலை. துரத்தும் துவரம் பருப்பு விலை போன்று கம்யூனிஸ்ட்கள் மட்டும் கூறவில்லை. எல்லோரும் சொல்ல ஆரம்பித்து விட்டார்கள்"" என்று நக்கலும், நையாண்டியும் பொங்கிட குறிப்பிடுகிறார். அவர் சொல்லாமல் விட்டது. இதுதான்! எங்கள் மேற்கு வங்கத்தில் ஒரு கட்டு முருங்கைக்காய் ஒரு ரூபாய்தான். துவரம் பருப்பின் விலை சரிந்து வாங்குவார் இன்றி, துவரம் பருப்பு சந்தையில் சந்தி சிரிக்கிறது. தக்காளி சங்கதி எப்படி என்று தெரியுமா? ஒரு கூடை தக்காளி பத்து ரூபாய்தான் என்று பாலபாரதியால் சொல்ல முடியவில்லை. சொல்ல மாட்டார். காரணம் அவர்கள் ஆட்சியிலும் விலைவாசிகள் விண்ணைத் தொட்டதோடு இல்லாமல் சந்திர மண்டலத்திலும் கொடி நாட்ட முயற்சித்துக் கொண்டு இருக்கிறது.

அதனால் தான் சட்டமன்றத்தில் யார் பேசும் போதும் பெரும்பாலும் குறுக்கிட விரும்பாத நிதியமைச்சர் இனமான பேராசிரியர் அவர்கள் பாலபாரதியின் பேச்சில் குறுக்கிட்டு விலைவாசி பற்றி சில வினாக்களை எழுப்பி விளக்கம் கேட்டிருக்கிறார். பேராசிரியர், ""விலைவாசி உயர்வு குறித்து எனது ஆழ்ந்த வேதனையை நானும் இங்கே பகிர்ந்து கொள்கிறேன். இந்த விலை உயர் வுக்கு காரணமான பதுக்கல் முதலாளிகள் யார்? வெங்காய வியாபாரிகள் யார்? என்பதை மார்க்சிஸ்ட் உறுப்பினர்கள் சொன்னால் உடனடியாக நடவடிக்கை எடுத்து விலைவாசியை குறைப்பதற்கு அது வசதியாக இருக்கும். வெளிநாடுகளில் இருக்கும் சட்டங்கள் காரணமாக வெங்காயத்தை இறக்குமதி செய்ய முடியாத நிலை உள்ளதை யும் நாம் பார்த்துக்கெண்டு இருக்கிறோம். பூகம்பம், கடும் மழை, பெரும் வறட்சி ஏற்பட்டால் யாரை குறை சொல்ல முடியும். அது போலத்தான் விலைவாசி உயர்வும். இதற்காக யாரை கண்டிப்பது. விலைவாசியை குறைக்க வழிகள் இருந்தால் கம்யூனிஸ்ட்கள் அரசுக்கு கூறலாம்"" இதற்கு நேரடியாக திட்டவட்டமாக எந்த பதிலையும் கூறமுடியாத பாலபாரதி ""விவசாய உற்பத்திப் பொருள்கள் ஆன்லைன் வர்த்தகம் மூலம் விற்கப்படுவதால் இந்த விலை உயர்வுக்கு காரணமாகிவிட்டது.

 மத்திய அரசு வெங்காயத்தை ஏற்றுமதிக்கு அனுமதித்த தும் ஓர் காரணமாகும்"" என்றார். அப்போது கம்யூனிஸ்ட்களின் இரட்டை வேடத்தை முகத்திரை கிழித்து காட்டுவது போல காங்கிரஸ் உறுப்பினர் பீட்டர் அல்போன்ஸ் எழுந்து ""வெங்காய விலைவுயர்வுக்கு காரணம் மத்திய அரசின் ஏற்றுமதி கொள்கைதான் என்று உறுப்பினர் பாலபாரதி இங்கே குறிப் பிட்டார். நேற்று (ஜனவரி 11 தேதி அன்று) மகாராஷ்டிரா மாநிலத்தில் வெங்காய ஏற்று மதிக்கு தடை விதிக்காதே. உடனடியாக தடையை நீக்குக என்று கோரி வெங்காய ஏற்றுமதிக்கு ஆதரவாக விவசாயிகள் போராட்டம் நடத்தியுள்ளார்கள். ஏற்றுமதிக்கு தடை விதித்தால் விவசாயிகளுக்கு உரிய விலை கிடைக்கவில்லை என்றும் அவர்கள் தடையை நீக்கக் கோரி போராட்டம் நடத்துகிறார்கள்.
ஆனால் கம்யூனிஸ்ட்களோ ஏற்றுமதிக்கு அனுமதித்த தால் தான் விலை வாசி உயர்ந்துவிட்டது என்று கூறி போராட்டம் நடத்துகிறார்கள். இது கம்யூனிஸ்ட் களின் இரட்டை நிலையை காட்டுகிறது"" என்று குறிப்பிட்டார்.
 அதுமட்டுமின்றி விலை உயர்வை கட்டுப்படுத்த மேற்கு வங்கத்தில் என்ன நடவடிக்கை எடுக்கப்பட் டுள்ளது என்பதையும் அவர் கூறியிருக்கலாமே என்றார். இப்படி பாலபாரதிக்கு பீட்டர் அல்போன்ஸ் இன்னும் ஒருபடி மேலே போய், ""சீனாவின் பட்டினிச் சாவு, ராணுவ வீரர்கள் துணையுடன் இலங்கையில் வெங்காய விற்பனை. ரஷ்யா, அமெரிக்காவில் வறுமை, விலை உயர்வு என்று செய்திகள் வந்து கொண்டே இருக்கின்றன. இது எதனை காட்டுகிறது! விலைவாசி உயர்வு என்பது ஏதோ இந்தியாவில் மட்டும் அல்ல பல்வேறு நாடுகளிலும் உள்ளதுதான். ஆனால் விலைவாசி உயர்வை கம்யூனிஸ்ட்கள் அரசியலாக்கி நாட்டில் குழப்பத்தை ஏற்படுத்த பார்க்கிறார்கள்"" என்று குற்றம்சாட்டினார். இவைகள் எல்லாம் ஒருபுறம் இருந்தாலும், விலைவாசிகள் குறிப்பாக காய்கறிகள், மளிகை சாமான்கள் ஆகியவற்றின் விலைகள் அடிக்கடி உயர்வதற்கும், மலிவாகி விலை சரிவதற்கும் என்ன காரணம் என்பதை அவ்வப்போது வியாபாரிகள் விளக்கியபடியே இருக்கிறார்கள்.

உதாரணமாக - இந்த ஜனவரி மாதம் 8ந் தேதி சனிக்கிழமை வந்த ‘தினகரன்’ நாளேட்டில் கிலோ ரூ.80ஆக உயர்வு வெங்காயம் விலை மீண்டும் விர்ர்... என்ற தலைப்பிட்டு ஒருசெய்தி வந்தது.  அது வருமாறு:- கோயம்பேடு மார்க்கெட்டில் பெரிய வெங்காளம் விலை மீண்டும் உயர்ந்து கிலோ ரூ.80 க்கு விற்பனை செய்யப்படுகிறது. முருங்கைக்காய் ரூ.120க்கு விற்கப்படுகிறது.  கோயம்பேடு மார்க்கெட்டுக்கு கர்நாடகா, ஆந்திரா, மகாராஷ்டிரா மற்றும் தமிழகத்தின் பல்வேறு பகுதியில் இருந்து தினமும் லாரிகளில் காய்கறிகள் வரும். மகாராஷ்டிரா மாநிலம் நாசிக்கில் இருந்து 40 லாரியில் வந்த பெரிய வெங்காயம், 30 லாரியாக குறைந்ததால் அதன் விலை மீண்டும் உயர்ந்தது. கிலோ ரூ.60க்கு விற்ற பெரிய வெங்காயம் நேற்று ரூ.80 க்கு விற்பனை ஆனது. ஒட்டன்சத்திரம், திண்டுக்கல், தேனி உள்ளிட்ட பகுதியில் இருந்தும், குஜராத் மாநிலம் பரோடாவில் இருந்தும், முருங்கைக் காய் வரும். பரோடாவில் இருந்து 3 லாரியில் வந்த முருங்கைக்காய் இப்போது ஒரு லாரியாக குறைந்துவிட்டது. இதனால், கிலோ ரூ.90க்கு விற்ற முருங்கைக்காய் தற்போது ரூ.120ஆக உயர்ந்துள்ளது. மற்ற காய்கறிகள் விலை விவரம் (கிலோ) சின்ன வெங்காயம் - ரூ.45 கேரட் - ரூ.30 பீட்ரூட் - ரூ.18 முள்ளங்கி - ரூ.12 சவ்சவ் - ரூ.10 கத்தரிக்காய் - ரூ.20 வெண்டைக்காய் - ரூ.38 பீன்ஸ் - ரூ.30 அவரைக்காய் - ரூ.32 தக்காளி - ரூ.25 கோஸ் - ரூ.15 பாகற்காய் - ரூ.25 உருளைக்கிழங்கு - ரூ.18 - என்பதே அந்தச் செய்தி. இதில் விலை உயர்வு ஏன் என்பதற்கான விளக்கத்தையும் வியாபாரிகள் கூறியிருக்கிறார்கள். இரு தினங்களுக்கு பின்னர் வெளிவந்த அதே தினகரனில் ‘தக்காளி, கேரட் விலை சரிந்தது’ என்ற தலைப்பிட்டு ஒரு செய்தி வந்தது.

அது வருமாறு :- ""கோயம்பேடு மார்க்கெட்டில் தக்காளி, கேரட் விலை குறைந்தது. கோயம்பேடு மார்க்கெட்டுக்கு ஆந்திரா, கர்நாடகம் மற்றும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து லாரிகளில் காய்கறி வருகிறது. சமீபத்தில் பெய்த மழையில் பயிர்கள் நாசமாகி காய்கறி விலை கிடுகிடு என உயர்ந்தது. தற்போது வரத்து அதிகரித்து விலை படிப்படியாக குறைந்து வருகிறது. ஊட்டி, மேட்டுப்பாளையம் பகுதிகளில் இருந்து நேற்று 8 லாரி கேரட் வந்தது. இதுவரை கிலோ ரூ.30க்கு விற்ற கேரட் இப்போது ரூ.18ஆக குறைந்தது. ஆந்திரா, கர்நாடகம் மற்றும் தமிழகத்தில் ஒட்டன்சத்திரத்தில் இருந்து 50 லாரிகளில் தக்காளி வந்தது. கிலோ ரூ.40க்கு விற்ற தக்காளி ரூ.25ஆக குறைந்தது. மற்ற காய்கறி விலை (கிலோவுக்கு) கத்தரிக்காய் - ரூ.10 கோஸ் - ரூ.12 பீட்ரூட் - ரூ.12 நூக்கல் - ரூ.12 பீன்ஸ் - ரூ.25 அவரைக்காய் - ரூ.25 வெண்டைக்காய் - ரூ.22 சவ்சவ் - ரூ. 7 பாகற்காய் - ரூ.15 உருளைக்கிழங்கு - ரூ.15 சேனைக்கிழங்கு - ரூ.18 சேப்பங்கிழங்கு - ரூ.12 பெரிய வெங்காயம் - ரூ.55 சின்ன வெங்காயம் - ரூ.40 - என்று அந்தச் செய்தி - விலைவாசி குறைந்த தற்கான விளக்கத்தையும் அளித் திருக்கிறது. இவைகள் எல்லாம் காட்டும் உண்மை என்ன? - புயல், வெள்ளம், மழையால் பயிர் களுக்கு பாதிப்பு, அழிவு ஏற்பட்டால் விலை உயரும். - பொருள்கள் உற்பத்தியாகும் இடங்களி லிருந்து லாரி போக்குவரத்து குறைந்தால் விலை உயரும். - தீபாவளி, பொங்கல், பிள்ளையார் சதுர்த்தி, ஆயுதபூஜை, கிறிஸ்துமஸ் ரம்ஜான், போன்ற பண்டிகைக் காலங்களில் காரணம் எதுவும் இல்லாமலே விலை உயரும். அதேபோல், நல்ல விளைச்சல், பொருள் களின் வரத்து, அதிக லாரிகளில் சந்தைக்குப் பொருள்கள் வருவது போன்றவற்றால் விலை குறையும் சரியும் என்பதுதானே? வேறு என்ன?


ன்றி:முரசொலி 15-01-2011

பக்த சிரோன்மணிகளுக்கு ஓர் அன்பு வேண்டுகோள்!


சபரிமலையில் ஐயப்பசாமியையும் மகரஜோதியையும் தரிசிக்க தென்மாநிலங்கள் முழுவதும் இலட்சக்கணக்கானவர்கள் இரு முடி கட்டிக் கொண்டு, ஒரு மண்டலக் காலம் விரதம் அனுஷ்டித்து கூட்டம் கூட்டமாகச் சபரிமலை செல்வது வழக்கம் ஆகிவிட்டது. இதிலே தமிழகத்தைச் சேர்ந்த பக்தர்களே பெரும் பான்மையாக இருந்து வருகிறார்கள். இந்த ஆண்டும் வழக்கம்போல் பக்தக் கோடிகள் சபரிமலை சென்றார்கள்.
 ஐயப்பசாமியை தரிசித்தார்கள். மகரஜோதி தரிசனத்துக்காக காத்திருந்து அதையும் கண்டு மெய் சிலிர்த்தார்கள். விழா முடிந்து ஊர் திரும்பும் போது கேரளத்தில் இடுக்கி மாவட்டத்தில் புல்லுமலை என்ற இடத்தில் சபரிமலைக்கு 50 கிலோ மீட்டர் தொலைவில் தமிழக எல்லையின் அருகில் நடந்த விபத்தில் நூற்றுக்கணக்கான பக்த சிரோன்மணிகள் சிக்கி பரிதாபமாய் உயிர் இழந்து விட்டார்கள் என்கிற நெஞ்சு பதறும், ஆற்றொணனா துயரம் அளிக்கும் செய்தி பொங்கல் நன்நாள் அன்று வெளிவந்து இருக்கிறது. இந்த விபத்துக்கானக் காரணங்கள் என்ன? எடுக்கப்படுகிற நிவாரண நடவடிக்கை என்ன என்பதெல்லாம் ஒரு புறம் இருந்தாலும் ; இது ஒரு மூடநம்பிக்கையின் பாற்பட்ட விபரீதம். அதிலும் அந்த மூடநம்பிக்கை தொடர்பான இன்னொரு  மூடநம்பிக்கையினால் விளைந்த கொடூரம் - என்பதே சரியான காரணமாகும்!

மதம், கோவில்கள், புராணங்கள், ஆகமங்கள் கடவுள்கள் என்பவைகளின் பெயரால் பார்ப்பனர்கள் ஏராளமான மூடநம்பிக்கைகளை சமூகத்தில் ஏற்படுத்தி வைத்து இருக்கி றார்கள். சாமி கும்பிடுவது என்பதே ஒரு மூட நம்பிக்கை என்பது தந்தை பெரியார் அவர்களாலே முக்கால் நூற்றாண்டு காலத்துக்கும் மேலாக கல்லடிகள், சொல்லடிகள், கல்வீச்சுகள், செருப்பு தோரணங் கள், அழுகிய முட்டை வீச்சுகளுக்கு இடையிலும் இடைவிடாது பிரச்சாரம் செய்யப்பட்டு வந்தப் பகுத்தறிவு கருத்தாகும். எனினும் தமிழகத்தில் ‘கோயில் இல்லா ஊரில் குடி இருக்க வேண்டாம்’ என்று ஒரு பழமொழியை உருவாக்கி அதன் அடிப்படையில் சாலையோரத்து பிளாட்பாரங்களில்கூட மாரி, காளி, முனீஸ்வரன் என பல்வேறு பெயர்களில் கோவில்களைக் கட்டி ஜனங்களை அவ்வளவு சுலபத்தில் மூட நம்பிக்கையில் இருந்து மீட்க முடியாதவாறு பலத்த அடித் தளமிட்டு வைத்து இருக்கிறார்கள். எல்லோரையும், கடவுள் நம்பிக்கையில் இருந்து அறவே மீட்டு எடுப்பது என்பதற்கு இன்னும் பல காலம் பிடிக்கும். அதனால்தான் திருப்பதி, பழனி, திருச்செந்தூர் போன்ற ஊர்களில் சாமி கும்பிட்டுவிட்டு திரும்பி வரும்போது பல்வேறு சமயங்களிலும் விபத்து களில் சிக்கி குடும்பம் குடும்பமாக உயிர் பலியாவோரை கண்டு நாத்திகர்களே ஆனாலுங் கூட அவர்களும் மனம்
பதைக்கிறார்கள், துடிக்கிறார்கள், துயரத்தில் ஆழ்கிறார்கள். இதற்கு முன்பும் இதுபோன்ற அதிர்ச்சி தரும் விபத்துகள் எல்லாம் நடந்த சமயங்களிலும்
நாத்திகர்கள் மிகுந்த பரிவுணர்ச்சியுடனும் பெருந்தன்மையுடனும் பக்தக் கோடிகளுக்கு பலமுறை ஒரு வேண்டுகோளை விடுத்து இருக்கிறார்கள்.

அது என்ன? ""எல்லாம் ஈசன் செயல், அவனின்றி ஓர் அணு வும் அசையாது. ஒவ்வொருவரும் தாயின் வயிற்றில் கருவாக உருவானபோதே அவர்கள் அவர்களது வாழ்வில் இன்னதுதான் நடக்கும் என்று ஆண்டவன் அந்தக் குழந்தைகளின் தலைகளிலேயே எழுதி விடுகிறான். அதுதான் அவனது தலைவிதி, அதைத்தான் அவனது தலையெழுத்து. அதுபடித்தான் அவனது வாழ்க்கையில் எல்லாமே நடக்கும்"" என்று மனமாற நம்புகிற பக்த பெருமக்களே, நீங்கள் அப்படியெல்லாம் நம்புவது உண்மை தான் என்றால் உங்களது உள்ளூர் கோயில்களில் குடிகொண்டிருக்கிற சாமிகளுக்கு உங்கள் தலை விதியை நிர்ணயிக்கிற சக்தி இல்லையா? ஏன் உள்ளூர் சாமிகளை அந்த சாமிகளின் சர் வல்லமை பொருந்திய சக்தியை நம்பாமல் திருப்பதி, திருத்தணி, திருச்செந்தூர், சபரிமலை போன்ற தொலைத்தூர ஊர்களில் இருக்கும் சாமிகளை தேடி ஓடுகிறீர்கள்? பயபக்தியோடு அந்த சாமிகளைக் கும்பிட்டு விட்டு திரும்புகிற உங்களை உங்கள் உயிருக்கு அந்த வெளியூர் சாமிகள் எப்போதாவது பாதுகாப்பு வழங்கி இருக்கிறதா? இல்லையே! பொங்கல் அன்று சபரிமலையில் தரிசனம் செய்துவிட்டு மகரஜோதி தரிசனத்திலும் மனதை பறிகொடுத்து விட்டு பக்திபரவசம் பொங்கிட ஊர் திரும்பிக் கொண்டிருந்த உங்களில் நூற்றுக் கணக்கானவர்கள் உயிர் இழக்காமல் பாதுகாத்து பத்திரமாக உங்கள் குடும்பத்தினருடன் சேர்த்து வைக்க அந்த சாமிகளுக்கு சக்தி இல்லையே! விபத்தில் உயிர் இழந்தவர்கள் குடும்பங்களின் கதி, அவர்களது எதிர்காலம் இருள் சூழ்ந்ததாகி விட்டது என்பது பற்றியெல்லாம் அந்தச் சாமிகள் கவலைப்பட்டதாகத் தெரியவில்லையே?

இவ்வளவு கேள்விகளை நாங்கள் அடுக்கடுக்காக எழுப்பினாலும் உங்களுக்கெல்லாம் விழிப்புணர்ச்சி வந்து மூட நம்பிக்கைகளை கைவிட்டு விடுவீர்கள் என்று நம்பி இவைகளையெல்லாம் நாங்கள் சொல்லவில்லை. ஆனாலும், சாமி கும்பிடாத - கடவுள் நம்பிக்கை என்பது எள்முனை அளவுகூட இல்லாத நாத்திகர்கள் ஆகிய நாங்கள் எங்களது மனிதநேயம் அடிப்படையில் கேட்டுக் கொள்வது எல்லாம் ஒன்றே ஒன்றுதான். ""சாமி கும்பிடுங்கள், சாமிகளுக்கு சர்வசக்திகளும் இருக்கிறது. அந்த சக்தியின் மூலம் அந்த சாமிகள் உங்களது துன்ப துயரங்களையெல்லாம் துடைத்து விடுவார்கள். நீங்கள் விரும்பியதை எல்லாம் வேண்டியதையெல்லாம் அந்த சாமிகள் செய்து அருளுவார்கள் என்றால், தயவு செய்து இனிமேல் வெளியூர் சாமிகளைத் தேடி வேனிலும், காரிலும், ஜீப்பிலும், லாரிகளிலும், ஏறி சாலை விபத்தில் சிக்கி உங்களது இன்னுயிர்களை பலி கொடுத்து அதன் மூலம் உங்கள் குடும்பங்களை நிர்க்கதியாய் நடுவீதிகளில் ஆதரித்து உதவுபவர் கள் இல்லாத வகையில் தேம்பி அழ வைத்து விடாதீர்கள்.

 ‘உள்ளூர் சாமிகளையே கும்பிடுங்கள்’ என்பதே அந்த மனித நேயத்தின் பாற்பட்ட அன்பு வேண்டுகோள்"" ஆகும்!


நன்றி;முரசொலி 17-01-2011

கோபாலபுரத்து யானையைக் கடிக்கப் போகிறேன் என்கிறது கூவம் நதிக்கரை கொசு!


 விழுப்புரத்தில் பொங்கல் விழா பொதுக் கூட்டம் ஒன்றில் பேசிய விஜயகாந்த் ""கருணாநிதியை எதிர்த்து தேர்தலில் போட்டியிடுவேன்"" என்று கொக்கரித்து இருக்கிறார். விஜயகாந்த் போட்டியிட்ட முதல் தேர்தல் 2006 தமிழக சட்ட மன்றத் தேர்தல் ஆகும். அந்தத் தேர்தலில் அவர் வரலாறு காணாத வகையில் தமிழக சட்டமன்றத்தின் 234 தொகுதிகளிலும் போட்டியிட்டார். 150-க்கு மேற்பட்ட தொகுதிகளில் அவரது கட்சி டெப்பாசிட்டையே பறிகொடுத்தது. மீதம் உள்ள தொகுதிகளில் ஒரு தொகுதி தவிர மற்ற எல்லா தொகுதிகளிலும் மண்ணைக் கவ்வியது. ஜெயித்த தொகுதி விருத்தாசலம். தப்பித் தவறி அதிலே ஜெயித்து விட்டவர் விஜயகாந்த். எனினும் கலைஞர் மீது கொண்ட பரம்பரை துவேஷம் காரணமாக அவரை ஏதோ புதிய வரலாறு படைத்த வெற்றி வீரர், சாதனையாளர் என்பதுபோல பார்ப்பன பத்திரிகைகள் வலிந்து எழுதி அவரது நாடாறு மாசம் - காடாறு மாசம் - அதாவது ஆண்டின் முக்கால் பகுதி சினிமா வில் நடிக்க, கால் பகுதி அரசியலில் உளற என்கிற பித்தலாட்ட அரசியலை தாங்கிப்பிடித்து நிற்கின்றன.

சட்டமன்ற உறுப்பினராக ஜெயித்தாரே தவிர, அவர் சட்டமன்றத்துக்கு வருவதே கிடையாது; சட்டமன்றத்தில் உரையாற்றுவது என்பது அபூர்வம். மூன்றாம் பிறை பார்ப்பது போல! அவர் தப்பித்தவறி சட்டமன்றத்தில் என்றோ ஒரு நாள் பேசிவிட்டபோது - அது பற்றி ஜெயலலிதா என்ன சொன்னார் தெரியுமா? ""அவர் சட்டசபைக்கு வரும்போதும் குடித்து விட்டு வந்துதான் பேசுகிறார்"" என்றார் ஜெய லலிதா. அதற்கு மறுநாள் சட்டசபைக்கு வெளியே பதிலளித்த விஜயகாந்த் ""எனக்கு ஊற்றிக் கொடுத்தவர் ஜெயலலிதாதான்"" என்றார் ஆத்திரம் பொங்கிட! இப்போது அவர்களே - கூறியதுபோல குடிகாரரும் குடிப்பதற்கு ஊற்றிக் கொடுத்தவரும் கூட்டுச் சேரப் போகிறார்கள் என்கிறார்கள்! - ஆகா என்னப் பொருத்தம் இது என்னப் பொருத்தம் என்று பாட்டுப் பாடலாம் என்று தோன்றவில்லையா? இந்த தேர்தலில் போட்டியிட்டு முதலமைச்சராக ஆகியே தீர்வேன் என்று விஜயகாந்த், கட்சி ஆரம்பித்த முதல் நாளிலிருந்தே முழக்கமிட்டு வந்தார். ‘கூட்டணி யாரோடு’ என்று கேட்டால் ""யாரோடும் கூட்டணி இல்லை, மக்களோடும் தெய்வத்தோடும்தான் கூட்டணி"" என்று கொக்கரிப்பார். ஆனால் அந்தோ பரிதாபம்; இப்போது முதலமைச்சர் பதவியை அடியோடு மறந்து விட்டு எந்தக் கட்சியில் கூட்டணி சேர்ந்தால் 40 சீட்டுக்கள் தருவார்கள் என்று தவியாய் தவித்து அலையோ அலை என்று அலைகிறார். இந்த இலட்சணத்தில்தான் அவர் முதல்வர்
கலைஞரை எதிர்த்துப் போட்டியிடுவேன் என்று வாய்ச்சவடால் அடிக்கிறார்!

கலைஞர் 1957-ஆம் ஆண்டு நடந்த சட்ட மன்றத் தேர்தலில் இருந்து 2006 சட்டமன்றத் தேர்தல் வரையில் 11 முறை சட்டமன்றத் தேர்தல்களில் போட்டியிட்டு வெற்றி பெற்றிருக்கிறார். அவரது அரசியல் பொதுவாழ்வில் தேர்தல் தோல்வி என்ற பேச்சுக்கே இடம் இல்லை. அது மட்டுமின்றி ஒரு முறை; இரு முறை அல்ல 5 முறை முதல்வராக அரியணையேறி தமிழகத் தேர்தல் வரலாற்றில் இனி யாராலும் அசைக்க முடியாத - மாற்ற முடியாத ஒரு சாதனை சரித்திரத்தை படைத்து இருக்கிறார். ""தேவைப்பட்டால் இந்த யானையை எதிர்ப் பேன்! என்று கொக்கரிக்கிறது இந்தக் கூவம் நதிக்கரையோரத்து கொசு. முதலமைச்சரை எதிர்த்து யாரும் போட்டியிட முடியாதா அல்லது கூடாதா? இந்திய அரசியல் சாசனப்படி யார் வேண்டுமானாலும் எந்தத் தொகுதியிலும் போட்டியிட உரிமை உண்டு. அதன் அடிப்படையில் விஜயகாந்தும் முதலமைச்சரை எதிர்த்து போட்டியிட
அவருக்கு தாராளமாக உரிமை உண்டு; அதை யாரும் தடுக்க முடியாது! முதலமைச்சர் கலைஞர் அவர்களை தோற் கடிக்கும் வாய்ப்பு எவருக்கும் இருந்ததே இல்லை என்பது தான் கலைஞரின் கடந்த காலம்; இன்றும் அவரை தோற்கடிப்பது என்பது எவராலும் இயலாத காரியம். அது பகற் கனவுதான்! எனினும் விஜயகாந்த் ‘கலைஞரை எதிர்த்து போட்டியிடுவேன்’என்று கூறுகிறாரே; அது ஏன்?

இப்போதே சட்டமன்றத்தில் ஒரு தொகுதியும் வாக்கு சதவிகிதத்தில் 10 சதவிகிதமும் கொண்டிருக்கிற விஜயகாந்த்தை பார்ப்பன பத்திரிகைகள் வலிந்து வலிந்து ஆதரவு கொடுத்து அவரது சோனி அரசியலுக்கு விசுவரூபம் கற்பித்து அவரை பூதாகாரம் ஆக்கி காட்டிக் கொண்டிருகின்றன. அவர் பார்ப்பனத்தி ஜெயலலிதாவை மீண்டும் ஆட்சிக்கு கொண்டு வர உதவி செய்வார் என்கிற நப்பாசை, பார்ப்பனத்தியை ஜெயிக்க வைக்க சூத்திரனையும், சூத்திரனையும் மோத விடுவதே சரியாக இருக்கும் என்கிற குள்ளநரித் தந்திரமாக அவர்கள் விஜயகாந்த்தை ஓஹோ ஓஹோ என்று புகழ்ந்து எழுதித் தள்ளிய படியே இருக்கிறார்கள். இதற்கு காரணம் விஜயகாந்த்மீது அவர்களுக்கு அவ்வளவு மரியாதை, மதிப்பு என்பது அல்ல, பார்ப்பனத்திக்கு உதவியாக இருப்பார் என்கிற நெஞ்சு கொள்ளாத சுய ஜாதி அபிமானமே காரணம்.

விஜயகாந்த் நிஜமாகவே கலைஞரை எதிர்த்துத் தேர்தலில் போட்டியிடுவார் என்றால் அவர்கள் இப்போதைவிட இன்னும் அதிக அளவில் பக்கம் பக்கமாக அவரது பேச்சு களை, பேட்டிகளை பிரமாண்டமாக்கிப் பிரசுரிப்பார்கள். அதனால் தேர்தல் வாக்குப் பதிவு நாள் வரையிலான மூன்று மாதங் களுக்கு விஜயகாந்துக்கு அவர் தனது சினிமா வாழ்க்கையில் கூட, இதுவரை கண்டி ராத அளவுக்கு நாள் தவறாமல் விளம்பரம் கிடைக் குமே. அதனாலே அவர் கலைஞர் தொகுதியில் போட்டியிட நினைப்பது என்பது கடைந் தெடுத்த சுயநல அடிப்படையலேயன்றி, ஆதாய, அரசியலன்றி கலைஞரை தோற்கடித்து விட முடியும் என்பதற்காக அல்ல? தினமணி நாளேடு பார்ப்பனர் ஒருவர் ஆசிரியராக பணியாற்றும் ஏடு. அந்த ஏட்டின் ஒரே நோக்கம் அல்லது வெறி ஒன்றே ஒன்று தான் அது என்ன? கலைஞரின் சூத்திர ஆட்சியை அகற்றுவது, பார்ப்பனத்தி ஜெயலலிதாவை மீண்டும் ஆட்சிக்குக் கொண்டு வருவது என்பதுதான். இத்தனை நாள் வரையிலும் விஜயகாந்தை பெரும் சக்திமானாக கற்பனை செய்து எழுதிக் கொண்டிருந்த தினமணி நாளேடு, அவர் ‘ஜெயலலிதாவுக்கே எனது ஆதரவு’ என்று உடனடியாக அறிவிக்காமல் கால தாமதம் செய்து கொண்டே போகிறார் என்பதால் ஆத்திரம் அடைந்து விஜயகாந்தை ‘தனிமரம் தோப்பு ஆகாது’ என்ற தலைப்பு இட்டு கேலியும் கிண்டலும் பொங்கிட தாக்கி ஒரு அரசியல் விமர்சனக் கட்டுரையை வெளி யிட்டு இருக்கிறார்.
அது வருமாறு:-  ""என்ன செய்யப் போகிறார் விஜயகாந்த்? இந்தக் கேள்விக்கான விடையைத்தான் தமிழக அரசியலில் இப்போது எல்லோரும் எதிர்பார்க் கின்றனர். சேலம் மாநாட்டில் கூட்டணி முடிவை அறிவிக்கப் போகிறார் என்று தே.மு.தி.க. தொண்டர்களும் மற்ற கட்சியினரும் எதிர் பார்த்தனர். ஆனால், ""என் திட்டத்தைக் கூறிவிட்டால் எதிராளி உஷாராகிவிடுவார். எனவே இப்போது அதைக் கூற மாட்டேன். உரிய நேரத்தில் கூறு வேன்"" என்று விஜகாந்த் கூறிவிட்டார். மாநாட்டில் முதலில் தரப்பட்ட தீர்மானங்களின் பட்டியலில், தி.மு.க. ஆட்சிக்கு முடிவு கட்ட எதிர்க்கட்சிகள் ஓரணியில் திரள வேண்டும் என கூறியிருந்தது. யாருடைய தலைமையில் அணி திரள்வது என்று தெரியவில்லை. அதன்பிறகு மாநாட்டில் பேசிய விஜயகாந்த், கூட்டணி சேர வேண்டுமா என்று தொண்டர் களிடம் கேட்டு, பெரும் பாலானோர் கை தூக்கி ஆதரவு தெரிவித்த பிறகு, ""கூட்டணி முடிவை நான் பார்த்துக் கொள்கிறேன்"" என்று கூறி விட்டார். அதைத் தொடர்ந்து பேசிய அவர், கட்சித் தொண்டர்களை அடமானம் வைத்துவிட மாட்டேன். உங்களை யாருக்கும் அடிமை யாக்கிவிட மாட்டேன் என்றும் குறிப்பிட்டார்.

அடமானம் வைக்காத வகையில், யாருக்கும் அடிமையாகாத வகையில் கூட்டணி சேருவது என்றால் எந்த அணியில் இவர் சேர முடியும் என்ற கேள்வி அரசியல் வட்டாரத்தில் இப்போது எழுந்துள்ளது.  விஜயகாந்தின் நெருக்கமான உறவினர் ஒருவர் மூலமாக அ.தி.மு.க. பேசி வருவதாக அரசியல் வட்டாரத்தில் பேசப்படுகிறது. ஏற்கெனவே அந்த அணியில் ம.தி.மு.க.வும் இடது சாரி அணிகளும் உள்ளன. இந்தக் கட்சிகள் கடந்த முறை போட்டியிட்ட தொகுதி களின் எண்ணிக்கையை இப்போது இந்த அணியில் தர முடியுமா என்பது சந்தேகமே. அந்தக் கட்சிகள் வெவ்வேறு அணியில் இருந்தாலும், மொத்தமாக 50க்கும் மேற்பட்ட தொகுதி களில் நின்றன. அதே அளவு தொகுதிகளை இப்போது தர ஜெயலலிதா முன்வந்தால் மீதி சுமார் 180 தொகுதிகள் இருக்கும். அ.தி.மு.க.வுக்கு 140 வைத்துக் கொண்டாலும் விஜயகாந்துக்கு தருவதற்கு 40 தொகுதிகள்தான் மிஞ்சும். 40 தொகுதிகளுக்கு அவர் ஒப்புக்கொள்வாரா என்பதுதான் கேள்வியாக எழுப்பப்படுகிறது. 40 தொகுதிகளில் நின்றாலும் கணிசமான எண்ணிக்கையில் எம்.எல்.ஏ.க்களை சட்டப் பேரவைக்கு அனுப்ப இது வாய்ப்பாக இருக்கும் என்பதை விஜயகாந்த் எண்ணிப் பார்க்க வேண்டும் என அ.தி.மு.க. தலைவர்கள் கூறுகின்றனர். கடந்த கால அனுபவங்களைப் பார்த்தால் எந்த அணியில் சேர்ந்தாலும், ""அடகு வைக் காமல், அடிமையாகாமல்"" கூட்டு சேர முடியுமா என்பது சந்தேகம்தான் என அரசியல் வல்லுநர்கள் கூறுகின்றனர். மக்களவைத் தேர்தல் வந்தபோது விஜயகாந்த் சில நிபந்தனைகளை விதித்தார். அவ்வாறு கூறினால்தான் தன்னுடன் யாரும் கூட்டணி பற்றிப் பேச மாட்டார்கள் என்றும் குறிப்பிட்டார். பிறகு தனித்தே தேர்தலைச் சந்தித்தார் விஜயகாந்த். தனித்துப் போட்டியிட விஜயகாந்த் முடி வெடுத்தால், அவரது கட்சியினரே அதை ஏற்றுக் கொள்வார்களா என்பது சந்தேகம்தான் என்று சொல்லப்படுகிறது.

கடந்த ஐந்து ஆண்டுகளில் தங்களின் சொத்து பத்துக்களை விற்று ஓட்டாண்டியாகும் நிலையில் இருக்கும் கட்சிக்காரர்கள்தான் தே.மு.தி.க.வில் அதிகம் என்று ஒரு முக்கியமான நிர்வாகி குறிப் பிட்டார். ""கூட்டணி இல்லை என்று சொன்னால் கேப்டனின் நிழல் கூட அவருடன் இருக்குமா என்பது சந்தேகம்தான்"" என்று கூறிய அவர் இன்னெரு விஷயத்தையும் பகிர்ந்து கொண் டார். ""எப்படியும் காங்கிரஸ், தி.மு.க. கூட்டணியில் இருந்து வெளிவந்து தே.மு.தி.க.வுடன் இணைந்து மூன்றாவது அணி உருவாகும் என்று கேப்டன் நம்பிக்கையில் இருந்தார். இப்போது அதற்கான வாய்ப்பு இல்லை என்ப தால் அவர் குழம்பிப் போய் இருக்கிறார் என்று தான் சொல்ல வேண்டும். கூட்டணி எதுவும் இல்லையென்றாலும் தே.மு.தி.க. வாக்குகள் அ.தி.மு.க.வுக்குப் போய்விடும்"" என்றும் கருத்து தெரிவித்தார் அவர். தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கும் தரப்படும் முக்கியத்துவமும் இடங்களும் அ.தி.மு.க. அணியில் தே.மு.தி.க.வுக்குத் தரப்பட வேண்டும் என்று விஜயகாந்த் எதிர் பார்ப்பதாகக் கூறப்படுகிறது. அதை அ.தி.மு.க. ஏற்றுக் கொள்ளுமா என்பது சந்தேகம் தான். தே.மு. தி.க.வை தனித்துப் போட்டியிட வைக்க தி.மு.க. தரப்பில் பேசப்படுகிறது என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன. தென் மாவட்டத்தில் இருந்து சேலம் உரிமை மீட்பு மாநாட்டுக்குப் போயிருந்த நிர்வாகி ஒருவர் மயக்கத்தில் நண்பர்களிடம் சத்தம் போட்டு மன்றாடிக் கொண்டிருந்தார். ""எலேய் .... தனிமரம் தோப்பாகாது என்று கேப்டன் கிட்ட சொல்லுங்கலேய்ய்ய்...!"" சொல்லிவிட்டோம்!""
 - என்று முதன் முறையாக - விஜயகாந்து அப்படி ஒன்றும் பலம் வாய்ந்தவர் அல்ல; அரசியலில் திருப்புமுனை உண்டாக்கவல்லவருமல்ல. தனிமரம் ஒருபோதும் தோப்பு ஆகிவிடாது! கூட்டணியில் அதுவும் பார்ப்பனத்தியின் கூட்டணியில் சேராமல் - அவரால் குறைந்த அளவு சீட்டுகளைக்கூடப் பெறமுடியாது - என்று சித்தரித்திருக்கிறது!

இதனைப்படித்த பிறகாவது பார்ப்பனர்கள் தன்னை ஆதரித்து எழுதுவதின் உண்மையான காரணம் என்ன என்பதை உணர்ந்து - திருந்தி நடந்து கொள்வார் என்று எதிர்பார்க்கலாமா?

நன்றி:முரசொலி 19-01-2011